Skip to main content

"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்" -சீமான்

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
ுபர

 

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், தொண்டர்களிடம் தன்னுடைய கடந்த கால சம்பவங்களை மகிழ்ச்சியுடன் பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது "இன்றைக்கு நம்முடைய வளர்ச்சியை பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். பயம் இருக்கத்தானே செய்யும். நம்மை பார்த்து இங்கே இருப்பவர்கல் மட்டுமா பயப்படுகிறார்கள். பிரபாகரனை விட ஆபத்தானவன் ஒருவன் வளர்ந்து வருகிறான் என்று சிங்களவனும் பயப்படுகிறான். இது அனைத்தையும் விட்டுவிடுவோம். வருகிற தேர்தல் நமக்கு போர்க்களம், இறங்கி அடிப்போம். பயமா இருக்கா, முருகா முருகா என்று சொல்லுங்கள். அதை பாஜக நபர்களும் சொல்கிறார்களா? சரி விடு, தனியாக அமர்ந்துகொள், பிரபாகரன் பிரபாகரன் என்று தனியாக அமர்ந்து சொல்லுங்கள்.

 

இன்னமும் பயமாக இருக்கா, அரை கிலோ மாட்டுக்கறி எடுத்து சாப்பிடு. எல்லா சரியாகி விடும். நம்முடைய மருத்துவர் சிவராமன் இருக்கிறார், கண்டவன் பேச்சை எல்லாம் கேட்டு அசைவத்தை தவிர்க்காதீர் என்று கூறுகிறார். என் தம்பிகள் எல்லாம் இதை கேட்டு சிரிக்கிறார்கள். என் மனைவி இந்த பேச்சை கேட்டு இவர்தான் நம்முடைய மருத்துவர் என்று சந்தோஷப்படுகிறார். சில அறிவில்லாத பயல்கள் அதனை வேண்டாம் என்கிறார்கள். நோபல் பரிசு வாங்கியவன் எல்லாம் அதை சாப்பிட்டவர்கள்தான். ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய பெரும்பாலானவர்கள் அதை உண்டவர்கள்தான். வாய் இருக்கிறது என்று எதையாவது பேசக்கூடாது. மாட்டுக்கறி எடுத்து சாப்பிடுங்கள், ஜிம் போங்கள், உடம்பை வலுவாக்குங்கள். சுவர் இருந்தால் தான் நம்மால் சித்திரம் வரைய முடியும். 

 

என்னுடைய கராத்தே மாஸ்டர் இன்னும் இருக்கிறார். காலையில் 6 மணிக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்தால் 12 மணி வரை வகுப்பெடுப்பார். அவருக்கு ஈடுகொடுத்து பயிற்சி எடுப்பதெல்லாம் ரொம்ப கடினமாக காரியம். அதனால் அடுத்த நாள் வகுப்பு இருந்தால் முதல் நாளே 2 கிலோ மாட்டுக்கறி எடுத்து வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் பயிற்சிக்கு செல்வேன். நாங்கள் பயிற்சி ஆரம்பித்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் உறுதியோடு பயிற்சியை செய்வோம். ஆனால் எங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாஸ்டர் சோர்ந்து போய் விடுவார். அவ்வளவு வலிமை இந்த மாட்டுக்கறிக்கு இருக்கிறது. எனவே அவன் சொல்கிறான், இவன் சொல்கிறான் என்று அதை சாப்பிடுவதை தவிர்த்து விடாதீர்கள். உடலுக்கு வலிமையை தருவதோடு ஆரோக்கியத்தையும் அது அதிகப்படியாக வழங்கும்.

 

மாட்டுக்கறியை சாப்பிட்டாலே உடம்பில் ஒரு புதிய வலிமை பிறக்கும். தெம்பு கிடைக்கும், யாரையாவது தூக்கி போட்டு அடிக்க வேண்டும் என்று தோன்றுகிற அளவுக்கு எனர்ஜி கொடுக்கும். நீங்கள் என்னுடைய அண்ணன்களை எல்லாம் கேட்டுப்பாருங்கள். ஏவிஎம் வாசலில் எத்தனை நாள் களேபரம் நடத்திருக்கிறது என்று. பழைய சீமான் பெரிய ரவுடி, எதாவது பிரச்சனை என்றால் வண்டியை எடு பார்த்துக்கலாம் என்று கூறுவேன். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அதை எல்லாம் என்னால் செய்ய முடியவில்லை. கட்டுப்பாடு தேவைப்படுகிறது. அதனால் கட்டுப்பட்டு இருக்கிறோம். அதனால் தான் இன்றைக்கு என்னை பற்றி பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடிவதில்லை. இதை காரணமாக வைத்துக்கொண்டு மரியாதை இல்லாமல் சிலர் பேசுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை" என்றார்.

 

 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.