Skip to main content

இனி அசல் 'தேன்' சாத்தியமா? - பிரபல பிராண்டுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஆய்வு முடிவுகள்!

Published on 02/12/2020 | Edited on 03/12/2020

 

Is real honey possible anymore?

 

இயற்கையின் வரப் பிரசாதமாகக் கருதப்படும் தேனில், மிகச் சிறந்த மருத்துவக் குணங்கள் இருப்பதால், தற்பொழுது வரை சந்தையில் உண்மையான 'அசல்' தேன் எது என்பதற்கான போட்டிகள், எப்பொழுதுமே இருந்து வருகிறது. தேன் என்பது அனைவராலும் உட்கொள்ளக் கூடிய மிகச்சிறந்த உணவுப் பொருளாகும். ஆதிகாலம் தொட்டே சித்த மருத்துவ முறைகளில் கூட, சில மருந்துகளைத் தேனில் குழைத்துச் சாப்பிடுவதற்கான அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்குவர். அந்த அளவிற்கு, தேனிற்கு மருத்துவத்திலும், உடல்நலத்திலும் மிகப் பெரிய பங்கு உண்டு.

 

இந்நிலையில், இந்தியாவில் உண்மையான அசல் தேன் எனப் பிரபல நிறுவனங்களால் விற்கப்படும் தேன்களில், 13 பிராண்டுகளை ஆய்வு செய்ததில், அவற்றில் 8 பிராண்ட்களில் சர்க்கரை பாகு கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் சி.எஸ்.இ எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், புகழ் பெற்ற 13 பிராண்டுகளின் தேன்களைப் பரிசோதனை செய்துள்ளது. அதில், 8 பிராண்டுகளில் சர்க்கரை பாகு கலக்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

'அணுகாந்த ஒத்ததிர்வு' என்ற நவீன சோதனை முறைப்படி சர்க்கரை பாகு கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவற்றை உட்கொள்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், தேனுடைய தரம் குறித்த கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை மத்திய அரசு மேலும் அதிகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது சி.எஸ்.இ

 

இது ஒரு பக்கம் இருக்க, இந்தச் சோதனை முடிவுகள் பிரபல நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஆய்வு முடிவுகளை, அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்கள் மறுத்துவருகிறது. குறிப்பாக, 'டாபர்' நிறுவனம், இந்த ஆய்வு அறிக்கை உள்நோக்கம் கொண்டது. எங்கள் மீது அவதூறு பரப்புவதற்காகவே வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளது. இந்திய அரசின் உணவுத் துறை கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளுக்குட்பட்டே நாங்கள் தேன் தயார் செய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல் 'ஜண்டு' நிறுவனமும் தங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டுப் போலியானது, உள்நோக்கம் கொண்டது எனக் கூறியுள்ளது. அதேபோல், 'பதஞ்சலி' நிறுவனமும், அவர்கள் மீதான புகாரை மறுத்துள்ளது. இயற்கை உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தங்களைக் கலங்கப்படுத்த தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சதி இது எனக் கூறியுள்ளது. 

 

cnc

 

என்ன இருப்பினும் உண்மையான தேன் என விளம்பரங்கள் மூலம் வீடுகளை எட்டிய பிரபல பிராண்டுகளின் தேன்கள், உண்மையிலேயே 'அசலா?' அல்லது 'போலியா?' எனக் குழப்பும் நிலையை ஏற்படுத்தியுள்ளது, இந்த ஆய்வு. சி.எஸ்.இ ஆய்வின்படி பார்த்தால், இனி அசல் தேன் சாத்தியமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.