Skip to main content

உங்க பசங்க இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் அமைதிகாக்கப்படுகிறதா?

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

275 பெண்கள் 1100 வீடியோ துணை சபா ஆட்களைக் காப்பாற்றும் மந்திரி!
நக்கீரன் அம்பலப்படுத்திய பாலியல் கொடூரம்!

"இளம்பெண்கள் 275 பேரை சமூக வலைத்தளம் மற்றும் நேரடித் தொடர்புகளால் மயக்கி ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்' என்ற பேரதிர்ச்சியை நக்கீரன் இதழில் கட்டுரையாகவும், வீடியோவாகவும் வெளியிட்ட நிலையில்... அந்த வீடியோவில், ""உன்னை நம்பித்தானே வந்தேன்...'' என்று கதறியபடியும், ""பெல்ட்டால் அடிக்காதீங்கண்ணா... வலிக்குது... நானே கழட்டிடுறேன்...'' என்று அலறியபடியும் மாணவிகள் துடிப்பதைப் பார்த்து பதறிய தமிழகத்தின் பல தரப்பினரும் ""அந்தக் கொடூரக் குற்றவாளிகளை உடனே தண்டியுங்கள்'' எனக் குமுறினர். கடும் நடவடிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பலரும் அறிக்கை விட்டுள்ளனர். கைதானவர்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் யாரும் குற்றவாளிகளுக்காக ஆஜராவதில்லை எனத் தீர்மானித்திருப்பது பாராட்டைப் பெற்றுள்ளது.


""ஆனா அரசும் போலீசும், இந்த திருநாவுக்கரசு விஷயத்தில் அம்பராம் பாளையத்து ஆத்து தண்ணியில போட்ட கல்லு போல மௌனமாய்த்தான் இருக்காங்க அண்ணா'' என நமது நண்பர்களின் உதவியோடு பேசினார் அந்த ஆபாச வீடியோ கும்பலில் சிக்கிய ஓர் இளம் பெண்ணின் சகோதரி.

அவர் நம்மிடம், ""அண்ணா இவனுக படுமோசமானவனுக. கைது செய்யப் பட்டிருக்கிற சதீஷ், பொள்ளாச்சி கடை வீதில "ஜோக்கர் ரெடிமேடு கடை'ன்னு ஒண்ணு வச்சிருக்கான். அங்க நெறைய பொண்ணுக வேலை செய்யுறாங்க. அங்கதான் என் தங்கச்சி ப்ரீதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) வேலைக்குப் போனா. அவள் கிட்ட இந்த சதீஷ் காதல் வசனம் பேசி மயக்கி சின்னப்பம்பாளையம் பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருக்கிறான். இவளும் அவனை நம்பிட்டா. ஆனா, அவனோடு சேர்ந்து பத்து பேர் உள்ள வந்துருக்கானுக. அதுல முக்கியமா கெரோன், பொள்ளாச்சி -பல்லடம் ரோட்டுல டூவீலர் கடை வச்சிருக்கற பைக் டீலிங் பாபு, "பார்' நாகராஜ் இவனுக பெல்ட்டை கழட்டி அடிச்சு என் தங்கச்சிய மயக்கமாக்கிய பின்னாலதான் அவளை சைக்கோத் தனமா ஒடம்பெல்லாம் கடிச்சு வச்சு நாய்போல குதறி எடுத்திருக்கானுக. "இங்க நடந்ததை வெளிய சொன்னா... இந்த ரூமுக்குள்ள எடுத்த உன் வீடியோ எல்லார் வீட்டுக்குள்ளேயும் இருக்கும்'னு சொல்லி அவளை கந்தல்துணியா பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுல இறக்கி விட்டிருக்கானுக.
pollachi-incident
அவ வீட்டுக்கு வந்ததும் எங்ககிட்ட சொல்லி அழுதா. எதுவும் நாங்க வெளிய சொல்ல முடியாது. பண்ணை வீட்டுக்கு வந்த பசங்க, "நாங்க யார் தெரியுமா? பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் அக்னீஸ் முகுந்தன், பிரவீனோட பிரண்டுக, எவனும் எங்களை ஒண்ணும் புடுங்க முடியாது'ன்னு சொல்லியே அனுப்பியிருக்கானுக. பெரிய இடத்தை பகைச்சுக் கிட்டு எங்க மாதிரி அப்பாவிங்க என்ன பண்ணமுடியும்? நியாயமே கெடைக்காதுங்களா அண்ணா?'' என கண்ணீர் வழிகிற அந்த சகோதரியிடம் நாம் என்ன சொல்ல?

பொள்ளாச்சி நகர போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் நமது போலீஸ் நண்பரிடம் பேசியபோது... ""நாங்க கைதுபண்ணுன நாய்க, இனி கைது செய்யாமலே இருக்கப்போற நாய்க எல்லாருமே, துணை சபாநாயகரோட ரெண்டு பசங்களுக்கும் பிரண்டு. இந்த பொண்ணுக மேட்டரு விஷயம் பொள்ளாச்சிக்கே தெரியும். சிக்குன திருநாவுக்கரசு டீம்ல இருக்கற பசங்க போன்லயிருந்து மட்டும் 1100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கெடச்சிருக்கு. அவனுக வச்சிருந்த ஒவ்வொரு போனும் லட்ச ரூபாய் மதிப்பு இருக்கும். போலீஸ் விசாரணையில சிக்குன வீடியோ வெளியே போகாம இருந்தாலே பெரும்பாடு.

வீடியோக்களில் இருக்கிற பல ஆட்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க. அதனால போலீஸ் அதிகாரிகளே... பல கோடிகளை லஞ்சமா ஆளுங்கட்சி ஆட்களிடமே கேக்குறாங்க. அவுங்களும் தரத் தயாராத் தான் இருக்காங்க. இப்ப உங்க நக்கீரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மூலம் விவ காரம் வெளிவந்ததால சிக்குனவங்க மேல ஸ்ட்ராங்கா கேஸ் போட வேண்டியதாயிடிச்சி. ஆனா, விசாரணை விரிவா நடந்தாதான் இதில் சம்பந்தப்பட்ட ஆளுந்தரப்பு புள்ளிகள் மாட்டுவாங்க'' என்றார்.

பொள்ளாச்சி டி.எஸ்.பி. ஜெயராமன், ""திருநாவுக்கரசு கைது ஆவதற்கு முன்னர் அவனே வெளியிட்ட வீடியோவில்... நிறைய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதா சொன்னது போலியானது. எங்க கைக்கு வந்திருக்கிற வீடியோக்கள் உண்மையா? இல்லையா?னு பரிசோதனை நடந்துக்கிட்டிருக்கு. அதுக்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்'' என மீடியாக்களிடம் சொல்லியுள்ளார். (இவரின் பழைய நடவடிக்கைகள் குறித்து பெட்டிச் செய்தியில் காண்க)
pollachi-incident
இந்நிலையில் இந்த இளம் பெண்கள் பிரச்சினையில் தீவிரமாகப் போராடிவரும் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நவநீத கிருஷ்ணன், "இந்த வழக்குல சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு உட்பட நான்குபேரையும் குண்டர் சட்டத்துல அடைச்சிட்டாங்க. உண்மைகளை எங்கே அடைக்கப் போறாங்களோ? தேர்தல் நேரத்துல இப்படி ஒரு செய்தி வந்தது து.சபாநாயகருக்கு பெரும் தலைவலியா இருக்கு. அந்த வலிக்கு பொள்ளாச்சி போலீஸார் தைலம் தடவுறாங்க'' என கொதிக்கிறார்.

அ.தி.மு.க. மீது பழி போடுவதற்காக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என்றும் இதுபற்றி டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்போவதாகவும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்தார். ஆனால், இந்தக் கொடூரத்தில் சம்பந்தப்பட்ட "பார்' நாகராஜனை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி ஓ.பி.எஸ். மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் இதில் அ.தி.மு.க.வுக்கு உள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ளது. துணை சபா தரப்பு ஆட்களைக் காப் பாற்றும் வேலையில் மாவட்ட மந்திரி தீவிரமாக செயல்படுகிறாராம்.

pollachi-incident


திங்கள் மாலை பேட்டி அளித்த கோவை எஸ்.பி. பாண்டியராஜன் (திருப்பூரில் டாஸ் மாக்குக்கு எதிராகப் போராடிய பெண்களைத் தாக்கிப் பெயர் பெற்றவர்) "4 வீடியோக்கள்தான் இருந்தது. இதில் அரசியல் தொடர்பு ஏதும் இல்லை'' எனத் "தீர்ப்பு' போலக் கூறியவரின் வார்த்தைகளில் ஊடகங்களையும் வலைத்தள செயல்பாட்டாளர்களையும் மிரட்டும் தொனி வெளிப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் முழுப் பின்னணி வெளிவராதபடி .திருநாவுக்கரசு டீம் முடக்கப்படும்' என்பதுதான் பொள்ளாச்சி போலீசின் நிலைமையாய் இருக்கிறது. வெறிபிடித்த காம வேட்டை நாய்கள் கடுமையாகத் தண் டிக்கப்பட வேண்டிய வகையில் விசாரணை தீவிரமாக வேண்டும். அதே நேரத்தில் பாதிக்கப் பட்ட பெண்கள் தொடர்பான வீடியோக்களும் விவரங்களும் எதிர்கால நலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டும். நேர்மையான அதிகாரி விசாரித்தால் மட்டுமே இது சாத்தியம்.

குடும்பத்தைப் பாதிக்கும்! -துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

"உங்க பசங்க இந்த ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் இந்த வழக்கு அமைதிகாக்கப்படுகிறது என சொல்லப்படுகிறதே?' எனக் கேட்டோம் .

அவரோ, "அப்படியா..? துப்பு துலக்கி நல்லபடியா பண்ணுங்க. என்கிட்டே யாருமே இப்படிக் கேட்கமாட்டாங்க. நீங்கதான் இப்படி கேட்கறீங்க.? ஒரு பையனுக்கு இப்பதான் 20 வயசு ஆகுது. ஒரு குடும்பத்தை பாதிக்கிற விஷயமல்லவா இது. இப்படிக் கேட்கலாமா நீ?'' என போனை கட் செய்துவிட்டார். அவரது மகன் 2016-ல் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில், உடன் பயணித்த தோழி பலியானதில் உள்ள மர்மத்தை இப்போதும் பரிதாபத்துடன் குறிப்பிடுகின்றனர் சொந்தக் கட்சிக்காரர்களே.

பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் அக்னீஸ் முகுந்தன், பிரவீன் இருவரும் தங்கள் முகங்கள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதால், தங்கள் பேஸ்புக் கணக்கை மூடி விட்டார்கள்.


 

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

“அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பதைப்போல் இது மோடியின் புளுகு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Chief Minister M.K.Stal's criticized prime minister modi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13-03-24) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அதன் பிறகு, பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற அவர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 57,325 பேருக்கு ரூ.1,273 கோடி செலவில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதே போல், ரூ.490 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன். அதில், தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உட்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும். 

ரூ.2.8 கோடி செலவில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதே போல், ஈரோடு மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி பூங்கா தரம் உயர்த்தப்படும். 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படும். 

வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?. அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன?. மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுக மக்களுக்கு என்ன செய்தது?. பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா?. கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சரும், டி.ஜி.பியும் இருந்தது யார் ஆட்சியில்?. தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான். 

அதிமுக, பா.ஜ.க கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. நாட்டுமக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியல் போட்டு பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டும். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போதல்லாம், மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது என்று கூறுகிறார். எந்த திட்டத்துக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது அப்பட்டமான பொய். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பதைபோல் இது மோடியின் புளுகு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட நாங்கள் தடுத்தோமா? அல்லது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? பா.ஜ.க.வின் பொய்யும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது” என்று கூறினார்.