Skip to main content

சர்கார் படத்தில் மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்... - பழ.கருப்பையா பேட்டி

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

EXCLUSIVE : கணவனை டாஸ்மாக்கில் குடிக்கவைக்கிறீர்கள், மனைவிக்கு மிக்சி, கிரைண்டர் இலவசமாகத் தருகிறீர்கள்! - பழ.கருப்பையா பேட்டி  

பேட்டியின் தொடர்ச்சி...

 

pazha karupaiah



இந்தியா போன்ற ஒரு நாட்டில் தமிழகம் வளர்ந்திருக்கிறதே?

தமிழகம் வளர்ந்திருக்கிறது என்று இவர்கள் கூறுவது முதலாளிகளைத்தான். இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்குமான இடைவெளி இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இந்தியாவில் 50 குடும்பங்கள் வாழ 500 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றம் செல்கின்றனர்.

மத்திய அரசை விமர்சிக்கும் ஒரு காட்சியோ, வசனமோ இடம்பெறவில்லையே?

நேரத்தை கவனத்தில் கொண்டே படம் எடுக்க முடியும். அனைத்தையும் விமர்சித்தால் பிறகு படம் 4 மணிநேரம் ஓடும். எனவே சர்க்கார் 2 வந்தால் அதில் பேசப்படலாம். ஆனால் அது வருமா என்பது பற்றி எனக்கு தெரியாது. பேசாததை விமர்சிக்காமல், பேசியது சரியா என விவாதியுங்கள். நாட்டின் அரசியலை இரண்டரை மணிநேரத்தில் இவ்வளவு சொன்னதே பெரிய விஷயம். எல்லா ஜாதியிலிருந்து வரக் கூடிய எல்லா அரசியல்வாதிகளும் மோசமானவர்களாக இருக்கிறார்கள், அதுதான் ஜனநாயகத்தின் வீழ்ச்சி.

தமிழகத்தில், காமராஜர் ஆரம்பித்து ஜெயலலிதா வரை எந்த முதல்வருக்காவது ஜாதி அடையாளம் உள்ளதா?

ஜாதி அடையாளம் தமிழ்நாட்டில் இல்லை, அது இல்லாமல்தான் எம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை அரசியலுக்கு வர முடிகிறது. தமிழகம்  இதில் பெருந்தன்மை வாய்ந்தது. ஆனால் ஜாதி அடையாளத்தோடு ஒருவர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே சில சமயம் சிறுபான்மையினர் உருவாக்கப்படுகிறார்கள், அயல் மனிதர்கள் முதலமைச்சர்களாக ஆக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஜாதி அரசியல்வாதிகள் மத்தியில் உண்டு. கட்சிகள் இப்படித்தான் இருக்கின்றன, அரசியல்வாதிகள் இப்படித்தான் இருக்கிறார்கள் என காட்டுவதே சர்காரின் மைய கரு.

நீங்களே ஒரு பேட்டியில் சொன்னீர்கள், விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்று. ஒருவேளை அதுதான் சர்காரின் நோக்கம் அதுவாக இருக்குமோ?

அவர் வரக்கூடும் என்று அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களில் இருந்துதான் கூறினேனே தவிர, அவரே என்னிடம் வரப்  போகிறேன் என்று சொல்லவில்லை.

நிகழ்கால அரசியல் பற்றி விஜயின் கருத்து என்ன? உங்களிடம் பகிர்ந்துள்ளாரா? 

தற்பொழுது தமிழகத்தின் அரசியல் நிலைமை சரியில்லை என கூறுவார். நான் சொன்னது போல, புழுக்கம் ஏற்படும்போது மழை உண்டாவது போல இதற்குப் பின் அரசியலில் ஒரு நல்ல தலைவர் உருவாகுவார். எடப்பாடி வரும்போது விஜய் வருவதில் என்ன தவறு? இப்பொழுது முதல்வர், துணை முதல்வராக இருப்பவர்கள் என்ன படித்தார்கள், என்ன போராட்டங்கள் செய்தார்கள்? அம்மாவை சிறையில் வைத்த பொழுது தர்மபுரியில் பஸ்சை கொளுத்தினார்கள். அம்மா காசு வாங்கியதற்கு சிறையில் அடைக்கப்பட்டார், இதற்கு ஏன் ஊரில் உள்ள பஸ்களை எல்லாம் கொளுத்த வேண்டும். இதெல்லாம் ஒரு போராட்டமா? 3 பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். நான் கேட்கிறேன், அம்மாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்த 3 பெண்கள்தான் பொறுப்பா? அவர்களை பொறுத்தவரை அப்படி செய்தால் கட்சியில் நம்மை பாராட்டுவார்கள், முன்னேற்றுவார்கள் என்ற அடிப்படையில் தான் இவ்வாறு செய்கிறார்கள். இதுபோன்ற  எண்ணம் உள்ள அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்.

வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியது பற்றி?

எல்லாத்துலயும் ஊழல் இருக்கு என்பதுதானே நிஜம். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை, விண்ணப்பத்துடன் கவரும் கொடுத்தால்தான் அது கிடைக்கும். சமீப நிகழ்வுகள் குறித்து நியாயமாக படம் எடுப்பது தவறில்லையே. இது போன்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். கோமலவள்ளி எனப்பெயர் வைத்ததுக்கு பிரச்சனை செய்கிறார்கள், கோட்ஸேவை மகாத்மா என கூறினால்தான் தவறு. லஞ்சம் வாங்கி அதற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. தமிழக முதல்வர்களிலேயே இப்படி தண்டனை பெற்றவர் இவர் மட்டுமே. உயிரோடு இருந்தால் சசிகலாவோடு பரப்பன அக்கிரகார சிறையில் இருந்திருப்பார். இங்கு நடப்பதுதான் படத்தில் காட்டப்பட்டுள்ளது. பணம் இருந்தால் எந்தப் பதவியை வேண்டுமானாலும் வாங்கலாம்.

சரி நீங்கள் சொல்வதை வைத்தே பார்த்தால், உங்களைப் போல, நல்லக்கண்ணு அய்யா போல பலரும் அப்படி இல்லையே?

நான் அவ்வளவு நல்லவன் கிடையாது. ஆனால் எனக்கு இறை பயம் அதிகம். சட்டத்தைப் பார்த்து எனக்கு பெரிய பயமில்லை. காவல்துறை முதல் சில நீதிபதிகள் வரை யாரையாவது விலைக்கு வாங்கி தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் கடவுள் மேலுள்ள பயத்தால் மட்டுமே நான் அவ்வாறு தவறுகள் எதுவும் செய்யாமல் இருக்கிறேன். 
               
   
   

Next Story

''யாரு முயல்? யாரு யானை?''- வழக்கம்போல் குட்டிக்கதை சொன்ன விஜய்

Published on 01/11/2023 | Edited on 02/11/2023

 

"Who is the rabbit? Who is the elephant?''-Vijay told a short story as usual

 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் விஜய் வழக்கம் போல் ஒரு குட்டி கதை சொன்னார். அவர் பேசியதாவது ''இரண்டு பேர் ஈட்டியுடன் வேட்டைக்கு சென்றார்கள். ஒருத்தர் ஈட்டியில முயல அடிச்சு தூக்கிட்டாரு. இன்னொருத்தர் ஈட்டியை வைத்து யானையை எய்ம் பண்றாரு, எய்ம் பண்றாரு மிஸ் ஆயிட்டே போகுது. அப்ப ரெண்டு பேரும் மீண்டும் ஊருக்குள்ள வராங்க. ஒருத்தர் கையில முயலோட வரார். ஒருத்தர் வெறும் கையில் வேலோட வரார். இவங்க ரெண்டு பேத்துல யாரு ஜெயிச்சாங்க'னு நினைக்கிறீங்க. யார் கெத்து'னு நினைக்கிறீங்க.

 

அந்த யானையை எய்ம் பண்ணி தவற விட்டார் இல்ல அவர் தான். இதை நான் ஏன் சொல்றேன்னா நம்மால் எதை ஈசியா ஜெயிக்க முடியுமோ அதை ஜெயிப்பது வெற்றியில்ல நண்பா. நம்மால் எது ஜெயிக்கவே முடியாதோ அதை ஜெயிக்க முயற்சி பண்றோம் இல்ல, அதுதான். உன்னிப்பாக கவனிக்கணும், முயற்சி பண்றோம் இல்ல, அதுதான் உண்மையான வெற்றி. உங்களுடைய குறிக்கோள்; உங்களுடைய லட்சியம்; எல்லாம் பெருசா யோசிங்க, பெருசா கனவு காணுங்க, பெருசா திங்க் பண்ணுங்க, யாரும் அதெல்லாம் யாரும் தவறு'னு சொல்ல முடியாது.

 

பாரதியார் சொன்னது தான் 'பெரிதிலும் பெரிது கேள்' அப்படி இருக்க வேண்டும் உங்கள் கனவுகள்; அப்படி இருக்க வேண்டும் உங்கள் ஆசைகள்; அப்படி இருக்க வேண்டும், உங்கள் உழைப்பு. அப்படி நீங்கள் பயணித்தால் இலக்கை நிச்சயம் அடைவீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடம் இருக்கு நண்பா. ஆசைகள் இருக்கும்; கனவுகள் இருக்கும். ஆனால் எல்லாருக்கும் ஒரு இடம் இருக்கிறது. வீட்ல ஒரு குட்டி பையன் ஆசையா அவங்க அப்பாவோட சட்டையை எடுத்து போட்டுக்குவான். அவரோட வாட்சை எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த சட்ட அவனுக்கு செட்டே ஆகாது. தொளதொளனு இருக்கும். வாட்ச் கையிலே நிற்காது. அந்த சேர்ல உட்காரலாமா இல்லையா? அந்த தகுதி எல்லாம் தெரியவே தெரியாது.  அப்பா மாதிரி ஆக வேண்டும் என்று கனவு. இதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணு நண்பா.

 

தயவு செஞ்சு சொல்றேன் சினிமாவை சினிமாவா பாருங்க. உலகம் முழுவதும் பார்த்தால், சினிமா மக்கள் பார்க்கின்ற பொழுதுபோக்கு அம்சம். அதில் வருகின்ற டயலாக், சீன்ஸ் எல்லாமே முழுக்க முழுக்க ஒரு கற்பனை. முழுக்க முழுக்க ஒரு செயற்கை தனமானது என்பது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். அப்படி ஒரு சில படங்களில் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான். அதை வேறுபடுத்தி காட்டுவதற்கு நீங்கள் என்ன பண்ணுவீங்க. அதற்கு தகுந்த மாதிரி சில காட்சிகள், அதற்கு தகுந்த மாதிரி சில வசனங்களை வைப்பது ஸ்கிரீன் பிளேயில் ஒரு காமனான விஷயம். அப்படி ஒரு சில கேரக்டர்கள் மூலம் சொல்லப்படுகின்ற சில தவறான எண்ணங்கள், ஆக்சன்... நான் உங்களுக்கு சொல்லி புரிய வைத்து அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு டெஃபனட்டா தெரியும் நீங்கள் யாரும் அதை ஃபாலோ பண்ண மாட்டீங்க என்று. நீங்கள் எல்லாம் என்ன அவ்வளவு  அன்மெச்சூரா என்ன. நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக்கோங்க. மற்றதை விட்டுருங்க. திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்''  என்றார்.

 

 

 

Next Story

‘தளபதி 68’ - அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு பதில்!

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Venkat Prabhu about Thalapathy 68

 

காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் நடித்த சுனைனா முதன்மை கதாபாத்திரமாக நடித்து வெளிவர இருக்கும் படம் ‘ரெஜினா’. இப்படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 

 

இதில் பங்கேற்ற இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில் “இந்த ரெஜினா படத்தின் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான சதீஷ் குமார் எனக்கு ஆரம்ப கால நண்பன். எனது தந்தைக்கு மிகவும் பிடித்த நபர் அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்தப் படத்தில் நடித்த சுனைனா இதற்கு முன் இப்படி ஒரு பரிமாணத்தில் பார்த்ததே இல்லை . அந்த அளவுக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இருந்தது. இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்றார்

 

மேலும், விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் தளபதி 68 படத்தின் அப்டேட்டை வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது  "இப்போது தளபதி 68 படத்தின் அப்டேட்டை கூறினால், விஜய்யே என்னை திட்டுவார். அதனால் லியோ படம் வெளிவரட்டும் அதன்பின்பு தளபதி 68 படத்தின் அப்டேட்ஸ்  கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.