Skip to main content

EXCLUSIVE - நீராடுவது பாரம்பரிய தீர்த்தத்தில் அல்ல.! ராமேஸ்வரத்தில் ஏமாற்றப்படும் பக்தர்கள்..!!!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

 

Devotees disappointed in Rameswaram



ஜோதிர் லிங்கங்களில் ஒன்றானதும், சக்தி பீடங்களில் ஒன்றானதுமான ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை விடவும், பக்த கோடிகள் தங்களின் பெரும் பாக்யமாக கருதுவது அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதைத் தான். ஆனால் பாரம்பரியமாக இருக்கின்ற தீர்த்தங்களை மூடிவிட்டு வேறொரு இடத்தில் கிணறு தோண்டி இது தான் தீர்த்தம் எனும் முயற்சியில் இறங்கியுள்ளது தேவஸ்தானம். இது ஆன்மிக ஆகம விதிகளுக்கு முரணானது, பக்தர்களை ஏமாற்றும் மோசடி செயல் என்ற புகைச்சல் எழத் தொடங்கியுள்ளது.

 

  ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், சிதம்பரத்தைச் சேர்ந்த கீதா, கோவையை சேர்ந்த வெண்ணிலா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், " கோவில் தீர்த்தங்கள், சுகாதார சீர்கேடுகள் உள்ளிட்டவைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கினில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன், நிஷாபானு ஆகியோர் “பக்தர்களின் நலன் கருதி கோவிலின் உள்ளே உள்ள 1 முதல் 6 வரையிலான தீர்த்தங்களை பிரகாரத்திற்கு வெளியே அமைக்கலாம்" என அற நிலையத்துறைக்கு உத்தரவிட, அதையே தங்களுக்கான லாபமாக கருதிய கோவில் நிர்வாகம் ஆக்ரமிப்புக்களை அகற்றாமல் தீர்த்தங்களை மாற்றத் துவங்கியுள்ளனர் என்பது தான் உள்ளூர் மக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.
 

Devotees disappointed in Rameswaram



  " மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேதுமாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம் என மொத்தமாக 22 தீர்த்தங்களில் ஏற்கனவே 2001ம் ஆண்டு சிவ தீர்த்தம், சர்வ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களை இரண்டாம் பிரகாரம் உள்ள வடக்குப் பகுதியில் இடம் மாற்றம் செய்தது கோவில் நிர்வாகம். அதனையும் சேர்த்து அந்த இரண்டாம் பிரகாரத்தில் மொத்தம் இது வரைக்கும் 12 தீர்த்தங்கள் உள்ளது. இப்பொழுது புதிதாக வெளியிலுள்ள காயத்ரி, சரஸ்வதி, சாவித்திரி மற்றும் மகாலெட்சுமி தீர்த்தங்களை அதே இரண்டாம் பிரகாரத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது கோவில் நிர்வாகம். இதற்காக மொத்தமாக சேர்த்து 100 அடி ஆழமும், 300 அடி அகலமும் கொண்டு கிணறு தோண்டி தீர்த்தங்கள் பிரித்து விடப்படகின்றன. 2016ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது இரண்டாம் பிரகாரம் வலுவிழந்துள்ளது என அந்த பிரகாரத்தின் மேல் தளத்திற்கு அனுமதிக்காத நிர்வாகம் இப்பொழுது அங்கேயே குழி தோண்டுவது எண்ணற்ற உயிர்சேதங்களை உருவாக்கும், தீர்த்த இடமாற்றம் இப்பொழுது அவசியமற்ற ஒன்று. அப்படியே தேவை எனில் அது அமைந்திருக்கின்ற இடத்திலுள்ள தனியார் ஆக்ரமிப்புக்களை எடுத்தாலே போதும். இது தெரியாமல் வேலையை ஆரம்பித்துள்ளது கோவில் நிர்வாகம்." என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

Devotees disappointed in Rameswaram


 

  சென்னையிலுள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலோ., " 15.20 ஏக்கர் பரப்பளவில் கோவில் அமைந்துள்ளது என்கிறது சுதந்திர இந்தியாவின் முதல் சர்வே. தற்பொழுதுள்ள தல வரலாறோ 13.30 ஏக்கரில் அமைந்துள்ளது கோவில் என்கிறது. காயத்திரி,சாவித்திரி மற்றும் சரஸ்வதி தீர்த்தங்கள் கோவிலின் மதில் சுவற்றுக்கு வெளியே வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் இருக்குமிடம் 01 ஏக்கருக்கு குறைவில்லாமல் இருக்கின்றது என்கிறது "அ"பதிவேடு. அங்குள்ள இடங்களை தனியாருக்கு குத்தகை விட்டதால் தீர்த்தத்திற்கு அனுமேஸ்வரர் கோவில் பின்புறம் குறுகலான இடத்தின் வழியாக செல்லவேண்டிய நிலை. அது போல் கோவிலுக்கு வெளியே கிழக்கு நுழைவாயில் பகுதியில் உள்ளது மகாலெட்சுமி தீர்த்தம். இந்த தீர்த்தம் பற்றி வரைபடங்கள் இன்றும் லண்டன் மியுசியத்தில் உள்ளது. இவ்விடத்தில் தீர்த்த டிக்கெட் கொடுக்கும் இடத்தை வைத்து நெருக்கடி உள்ளதாக காரணம் காட்டி இதனையும் மாற்ற முயற்சிக்கின்றது கோவில் நிர்வாகம். இப்பொழுது அமைக்கப்படும் தீர்த்தங்கள் கிணறுகளே.! பாரம்பரிய தீர்த்தங்கள் அல்ல.. ஆகம சில்ப சாஸ்திர அறிவினைக் கூட கருத்தில் கொள்ளாமல் பக்தர்களின் நம்பிக்கையில் விளையாடுகின்றது." எனக் கூறுகிறது.

Devotees disappointed in Rameswaram

 
 " பொது நல வழக்கில் கோரப்பட்டது என்னவோ, தீர்த்தங்களில் நெருக்கடி, தீர்த்தங்கள் செல்லும் வழி நெருக்கடி. இதற்குக் காரணம் பணம் வருகிறதே என இருக்கும் இடத்தையெல்லாம் தனியாருக்கு குத்தகை கொடுத்துவிட்டு அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமலும், நீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைக்காமல் இருந்ததால் தான் இவ்விளைவே..! இது தான் தீர்த்தம் என போர்டு வைத்திருக்க ஏதோ ஒரு கிணற்றில் குளித்துவிட்டு மனம் நிறைவாகும் மக்களை பணத்திற்காக ஏமாற்றப் பார்க்கின்றது கோவில் நிர்வாகம். இது தடுக்கப்பட வேண்டும்." என்கின்றார் இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் இந்து அமைப்பினர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.