Skip to main content

சாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: நிர்மலா பெரியசாமி ஆவேசப் பேட்டி

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
rape


சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காது கேட்காத சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே குடியிருப்பில் பணியாற்றும் லிப்ட் ஆப்ரேட்டர், செக்ரியூட்டிகள் உள்பட 17 பேர் அவரை 7 மாதங்களாக பாலியல் வன்முறை செய்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

 

 

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து நக்கீரன் இணையதளத்தில் கருத்து தெரிவித்தார் நிர்மலா பெரியசாமி. 
 

''இந்த செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனம் கொதிக்கிறது. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத சம்பவமாக இருக்கிறது. அதுவும் அந்தக் குடும்பம் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே இந்த சம்பவம் 7 மாதங்களாக நடந்திருக்கிறது என்றால் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்று அந்த பெற்றோர்கள் நினைத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை அவர்களுடைய வேலைக்காரர்களே பயன்படுத்தி இந்த செயலை செய்திருக்கிறார்கள்.
 

rapenirmala periyasamy

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேருக்கும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. வழக்கறிஞர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். யாரும் இவர்களுக்கு ஆதரவாக வரக்கூடாது. போக்சோ சட்டப்பிரிவில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். வழக்கறிஞர்கள் இந்த குற்றவாளிகளை நீதிமன்றத்திலேயே தாக்கியது சரிதான். குற்றவாளிகளை தாக்கியதில் தவறில்லை. 
 

நீதிமன்றம் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். இனி யாரும் இந்த தவறுகளை செய்ய முடியாத அளவுக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். கொடூரமான தண்டனை வழங்க வேண்டும். சாகும் வரை தூக்கிலிட வேண்டும். இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். 
 

 

 

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 பேரின் குடும்பத்தினரும் அவர்களை கைவிட வேண்டும். இப்படிப்பட்டவர்களை கணவர் என்று சொல்லாதீர்கள், மகன் என்று சொல்லாதீர்கள், உறவினர்கள் என்று சொல்லாதீர்கள். 17 பேருக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று 17 பேரின் உறவினர்களே சொல்ல வேண்டும்.
 

பொதுவாக பெற்றோர்களுடைய கவனம் பிள்ளைகள் மீது இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் தோழமையாக, அன்பாக பழகினால் அனைத்து பிரச்சனைகளையும் உங்களிடம் தெரிவிப்பார்கள். இந்த பிரச்சனையை அம்மாவிடம் சொல்லலாம், இந்த பிரச்சனையை அப்பாக்கிட்ட சொல்லலாம் என்று பிள்ளைகளுக்கு நம்பிக்கை கொடுத்து வளர்க்க வேண்டும். பிரச்சனைகள் பெரியதாகாமல் ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து''. 



 

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.