Skip to main content

"பன்னீர்செல்வத்தின் ஆர்எஸ்எஸ் பின்னணி... எடப்பாடி பழனிசாமியின் சசிகலா எதிர்ப்பு.." - கொதிக்கும் எம்ஜிஆர் வல்லரசு!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

jkl

 

அதிமுக பொதுக்கூட்டங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ அங்கு யாராவது ஒருவர் எம்ஜிஆர் வேஷம் போட்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் எம்ஜிஆர் வேஷம் போட்டிருப்பதை நம்மால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அசல் எம்ஜிஆரை போலவே வேஷம் போட்டு கட்சிக்காரர்களை ஆச்சரியப்படுத்துபவர் எம்ஜிஆர் வல்லரசு. அவரிடம், "உங்களைப் பார்த்தால் எம்ஜிஆர் வேஷம் போட்ட மாதிரி தெரியவில்லை, எம்ஜிஆர் நேரில் அமர்ந்திருப்பதைப் போல் எம்ஜிஆர் மாதிரியே இருக்கிறீர்களே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உங்களின் அரசியல் என்னவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இருவரையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்ற நம்முடைய தொடர் கேள்விக்கு, அவரின் அதிரடியான பதில் வருமாறு,  

 

"நாங்கள் எல்லாம் எம்ஜிஆரின் தீவிர விஸ்வாசிகள். அப்படித்தான் எப்போதும் இருந்துவருகிறோம். அவரை பார்த்து அரசியலுக்கு நாங்கள் வந்தோம். எனவே அவரின் சாயல் எங்கள் உள்ளத்தில் எப்போதும் இருக்கும். அம்மாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் யாரும் இவர்கள் இருவரையும் ஆதரிக்கவில்லை. தீபா அவர்களை ஆதரித்தோம். தமிழ்நாடு முழுவதும் அவரை ஆதரித்து சுற்றுப்பயணம் செய்தோம். எம்ஜிஆர் வல்லரசு என்றால் அனைவருக்கும் தெரியும். நான் உண்மையை மட்டும்தான் கூறுகிறேன். பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் உடையவர், பிஜேபியை ஆதரிப்பவர். கை முழுவதும் தாயத்து கட்டுபவர். இதுதான் திராவிட சித்தாந்தமா? எம்.ஜி.ஆர். கோயிலுக்குப் போயிருக்கிறார். தன் மனைவிக்காகப் போயுள்ளார். 

 

இவர்களைப் போல் அவர் எப்போதும் இல்லை. சசிகலா அவர்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்தால், அவர் கிணற்றில் போட்ட கல் போன்று இருக்கிறார். இவர்கள் இருவரும் பால் போட்டால் நீங்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நீங்கள் தொடர்ந்து அவுட்டானால் என்ன செய்ய முடியும். மிக நீண்ட மவுனத்தில் அவர்கள் இருக்கிறார்கள். சட்டப் போராட்டத்தில் அவர்கள் எப்போது வெற்றிபெறுவார்கள் என்ற உத்தரவாதம் இருக்கிறதா? எம்.ஜி.ஆர். மன்றங்கள் என்ற ஒன்று முன்பொரு காலத்தில் மிக வலிமையாக இருந்தது. அதை அம்மா அவர்கள் டிஸ்மேன்டில் செய்தார்கள். பார்ட் பார்ட்டாகப் பிரித்தார்கள். அதை தற்போது சரி செய்துவருகிறோம். மன்றங்களைச் சேர்ந்தவர்களை அண்ணன் கே.சி.பி., ஓம்பொடியார், நான் உள்ளிட்டவர்கள் இணைத்துவருகிறோம். கட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் அண்ணன் ஓம்பொடியாருக்கு நடந்த நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள். அவரை அடித்தது என்பது கடைக்கோடி தொண்டனை, எம்ஜிஆரை அடித்ததற்கு சமம். கடைக்கோடி தொண்டனும் அதிமுக தலைவராகலாம் என்று முதலில் கூறியது யார், எடப்பாடி பழனிசாமி. கொடி பிடிக்கும் தொண்டனும் கோட்டைக்குப் போகலாம் என்று கூறியவர் அவர்தானே. இன்றைக்கு கோட்டைக்கு அல்ல, கட்சி அலுவலகத்துக்குச் செல்லக் கூட அவர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை. 

 

கேட்டால் உறுப்பினர் அட்டை வைத்துள்ளீர்களா என்று கேட்கிறார்கள். உங்களிடம் உறுப்பினர் கார்டை வாங்கினால், அவர்கள் உங்களிடம் சரண்டர் என்று அர்த்தம் வந்துவிடாதா? உங்களைத்தான் எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என்று சொல்கிறார்களே! உங்களின் தலைமையைத்தான் அவர்கள் ஏற்க மறுக்கிறார்களே! உங்களின் வள்ளல்தன்மை தெரிந்துதான் உங்களை சொல்லக் கூடாத வார்த்தைகளை எல்லாம் கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் பேசுகிறார்களே! இதை எதிர்த்து இதுவரை யாராவது பேசியிருக்கிறார்களா? இவர்களால் எதையும் செய்ய முடியாது, எதிர்த்து யாரையும் கேள்வி கேட்க முடியாது. எங்களைப் பார்த்து நாய்கள் என்று கூறுகிறார்கள், கடைக்கோடி தொண்டனைப் பார்த்து திண்டுக்கல் சீனிவாசன் நாய் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். இன்றைக்கு டாஸ் வைத்து நிர்வாகிகளைத் தூக்குகிறார்கள். புதிய நிர்வாகிகள் எல்லாம் சங்கிகளாகத்தான் இருப்பார்கள். நீங்கள் பொருத்திருந்து பாருங்கள், இவர்கள் எல்லாம் எப்போதும் அதிமுகவை கரை சேர்க்கப்போவதில்லை, வெறும் வாய்ச்சவடால் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. தொண்டன் அவர்களைப் பார்த்துக்கொள்வான்" என்றார் கொதிப்புடன்.

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.