Skip to main content

"பன்னீர்செல்வத்தின் ஆர்எஸ்எஸ் பின்னணி... எடப்பாடி பழனிசாமியின் சசிகலா எதிர்ப்பு.." - கொதிக்கும் எம்ஜிஆர் வல்லரசு!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

jkl

 

அதிமுக பொதுக்கூட்டங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ அங்கு யாராவது ஒருவர் எம்ஜிஆர் வேஷம் போட்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் எம்ஜிஆர் வேஷம் போட்டிருப்பதை நம்மால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அசல் எம்ஜிஆரை போலவே வேஷம் போட்டு கட்சிக்காரர்களை ஆச்சரியப்படுத்துபவர் எம்ஜிஆர் வல்லரசு. அவரிடம், "உங்களைப் பார்த்தால் எம்ஜிஆர் வேஷம் போட்ட மாதிரி தெரியவில்லை, எம்ஜிஆர் நேரில் அமர்ந்திருப்பதைப் போல் எம்ஜிஆர் மாதிரியே இருக்கிறீர்களே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உங்களின் அரசியல் என்னவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இருவரையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்ற நம்முடைய தொடர் கேள்விக்கு, அவரின் அதிரடியான பதில் வருமாறு,  

 

"நாங்கள் எல்லாம் எம்ஜிஆரின் தீவிர விஸ்வாசிகள். அப்படித்தான் எப்போதும் இருந்துவருகிறோம். அவரை பார்த்து அரசியலுக்கு நாங்கள் வந்தோம். எனவே அவரின் சாயல் எங்கள் உள்ளத்தில் எப்போதும் இருக்கும். அம்மாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் யாரும் இவர்கள் இருவரையும் ஆதரிக்கவில்லை. தீபா அவர்களை ஆதரித்தோம். தமிழ்நாடு முழுவதும் அவரை ஆதரித்து சுற்றுப்பயணம் செய்தோம். எம்ஜிஆர் வல்லரசு என்றால் அனைவருக்கும் தெரியும். நான் உண்மையை மட்டும்தான் கூறுகிறேன். பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் உடையவர், பிஜேபியை ஆதரிப்பவர். கை முழுவதும் தாயத்து கட்டுபவர். இதுதான் திராவிட சித்தாந்தமா? எம்.ஜி.ஆர். கோயிலுக்குப் போயிருக்கிறார். தன் மனைவிக்காகப் போயுள்ளார். 

 

இவர்களைப் போல் அவர் எப்போதும் இல்லை. சசிகலா அவர்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்தால், அவர் கிணற்றில் போட்ட கல் போன்று இருக்கிறார். இவர்கள் இருவரும் பால் போட்டால் நீங்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நீங்கள் தொடர்ந்து அவுட்டானால் என்ன செய்ய முடியும். மிக நீண்ட மவுனத்தில் அவர்கள் இருக்கிறார்கள். சட்டப் போராட்டத்தில் அவர்கள் எப்போது வெற்றிபெறுவார்கள் என்ற உத்தரவாதம் இருக்கிறதா? எம்.ஜி.ஆர். மன்றங்கள் என்ற ஒன்று முன்பொரு காலத்தில் மிக வலிமையாக இருந்தது. அதை அம்மா அவர்கள் டிஸ்மேன்டில் செய்தார்கள். பார்ட் பார்ட்டாகப் பிரித்தார்கள். அதை தற்போது சரி செய்துவருகிறோம். மன்றங்களைச் சேர்ந்தவர்களை அண்ணன் கே.சி.பி., ஓம்பொடியார், நான் உள்ளிட்டவர்கள் இணைத்துவருகிறோம். கட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் அண்ணன் ஓம்பொடியாருக்கு நடந்த நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள். அவரை அடித்தது என்பது கடைக்கோடி தொண்டனை, எம்ஜிஆரை அடித்ததற்கு சமம். கடைக்கோடி தொண்டனும் அதிமுக தலைவராகலாம் என்று முதலில் கூறியது யார், எடப்பாடி பழனிசாமி. கொடி பிடிக்கும் தொண்டனும் கோட்டைக்குப் போகலாம் என்று கூறியவர் அவர்தானே. இன்றைக்கு கோட்டைக்கு அல்ல, கட்சி அலுவலகத்துக்குச் செல்லக் கூட அவர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை. 

 

கேட்டால் உறுப்பினர் அட்டை வைத்துள்ளீர்களா என்று கேட்கிறார்கள். உங்களிடம் உறுப்பினர் கார்டை வாங்கினால், அவர்கள் உங்களிடம் சரண்டர் என்று அர்த்தம் வந்துவிடாதா? உங்களைத்தான் எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என்று சொல்கிறார்களே! உங்களின் தலைமையைத்தான் அவர்கள் ஏற்க மறுக்கிறார்களே! உங்களின் வள்ளல்தன்மை தெரிந்துதான் உங்களை சொல்லக் கூடாத வார்த்தைகளை எல்லாம் கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் பேசுகிறார்களே! இதை எதிர்த்து இதுவரை யாராவது பேசியிருக்கிறார்களா? இவர்களால் எதையும் செய்ய முடியாது, எதிர்த்து யாரையும் கேள்வி கேட்க முடியாது. எங்களைப் பார்த்து நாய்கள் என்று கூறுகிறார்கள், கடைக்கோடி தொண்டனைப் பார்த்து திண்டுக்கல் சீனிவாசன் நாய் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். இன்றைக்கு டாஸ் வைத்து நிர்வாகிகளைத் தூக்குகிறார்கள். புதிய நிர்வாகிகள் எல்லாம் சங்கிகளாகத்தான் இருப்பார்கள். நீங்கள் பொருத்திருந்து பாருங்கள், இவர்கள் எல்லாம் எப்போதும் அதிமுகவை கரை சேர்க்கப்போவதில்லை, வெறும் வாய்ச்சவடால் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. தொண்டன் அவர்களைப் பார்த்துக்கொள்வான்" என்றார் கொதிப்புடன்.

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.