Skip to main content

"நீங்கதான் லக்கி சார்ம்" - அருண் விஜய்யிடம் சொன்ன நாயகி!

Published on 18/02/2020 | Edited on 19/02/2020


மாஃபியா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் அருண் விஜய், படம் சம்பந்தமான சுவாரசியமான நிகழ்ச்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி பேசினார். விழாவில் அவர் பேசியதாவது, " இந்த படத்தின் இயக்குநர் கார்த்திக்கிடம் மிக பெரிய ஆற்றல் இருக்கிறது. அவரை நான் சகோதரராகத்தான் பார்க்கிறேன். அவர் மிக அதிகமான தூரங்களுக்கு செல்லவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கின்றது. லைக்கா போன்ற நிறுவனம் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் என்ற நம்பிக்கையில் தான் இந்த படத்தில் வேலை செய்ய இறங்கினேன். அது தற்போது நிறைவடைந்ததாகவே நினைக்கிறேன். சுபாஷ் சார் போன்றவர்கள் அதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் என்ன எடுக்கப்போறோம் என்ற ஒர்க் ஷீட் அனைவரிடமும் இருந்தது. சின்ன கிராபில் வேலை செய்யும் பையனிடம் கூட அந்த தெளிவு இருந்தது. அதனால் தான் எங்களால் முழு ஈடுபாட்டோடு படத்தில் நடிக்க முடிந்தது. இது அனைத்திற்கும் இந்த ஒத்துழைப்பே காரணமாக இருந்தது. பிரசன்னா உடன் வேலை பார்த்ததில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அவருக்கும் அதிகப்படியான காட்சிகள் இல்லை என்றாலும் அவருடன் வேலை செய்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் என்னை பற்றி பெரிய வார்த்தைகள் எல்லாம் கூறினார். மனதிற்கு நிறைவாக இருந்தது. நல்ல நடிகருடன் நடிக்கும் போது நம்முடைய பெஸ்ட்டை வெளிகொண்டு வர ஒரு வாய்ப்பு ஏற்படும். அது எனக்கு இந்த படத்தில் நடந்தது மகிழ்ச்சியாக இருக்கின்றது. பல புதிய விஷயங்களை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறேன். அதற்கு இதெல்லாம் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. 
 

gh



படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரைக்கும் படம் சுவாரசியமாக இருக்கும். கார்த்திக் அதை சுவாரசியமாக செய்துள்ளார். பிரியா பவானி சங்கர் இங்கே என்னை பற்றி கூறிய வார்த்தைகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் பெரிய இடத்துக்கு செல்ல இருக்கிறார்கள். நிறைய படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்கள். முதல் நாள் சூட்டிங் முடிந்த பிறகு ஷங்கர் சார் போன் செய்து இந்தியன் 2-வில்  நடிக்க கூப்பிட்டதாக கூறி, நீங்கள்தான் அந்த லக்கி சார்ம் என்று கூறினார். எனக்கு அதில் எந்த கிரெடிட்டும் இல்லை. அடுத்ததா இன்னொரு படம் சைன் பண்ணியிருக்காங்க. அவங்க இங்கே அமைதியாக இருக்காங்க. செட்டில் பெரிய ரவுசு கொடுப்பாங்க. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளை இரவு நேரத்தில் தெருவிளக்கு வெளிச்சத்தில் படம் பிடிக்க வேண்டி இருந்ததால், அந்த நேரத்தில் கொஞ்சம் டென்சனா இருப்போம், கார் ஒன்றில் இருவரும் அமர்ந்துகொண்டு ஒரு காட்சி எடுக்கும் போது நான் கொஞ்சம் யோசித்துக்கொண்டு இருக்கும்போது அவர்கள் பாட்டு போட்டக்கொண்டு ஹாயாக அமர்ந்திருந்தார்கள். நான்தான் கொஞ்சம் அமைதியா இருங்களேன் என்று கூறி அமைதிபடுத்தினேன். படத்தில் நடித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கார்த்திக்கு மீண்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்" என்றார்.

 

Next Story

“நிறைய மெசேஜ்கள் வருகிறது” - தெளிவுபடுத்திய அருண் விஜய்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
arun vijay about Mission Chapter 1 ott update

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியான படம் ‘மிஷன் சாப்டர் 1’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் குறித்து ரசிகர்கள் தன்னிடம் கேட்டு வருவதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், “மிஷன் சாப்டர் 1 பட ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நிறைய மெசேஜ்கள் வருகிறது. லைகா நிறுவனத்திடம் கூறியிருக்கிறேன்.” என குறிப்பிட்ட அவர், ஒரு தனியார் தொலைக்காட்சி அதன் உரிமையை வாங்கியுள்ளதாகவும் அதனால் அவர்களிடமே ரசிகர்கள் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” - அருண் விஜய் புகார்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
arun vijay complaint against you tube channel

அருண் விஜய் கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அருண் விஜய், பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தனது குடும்பம் குறித்து தனியார் யூட்யூப் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த அருண் விஜய், அதனால் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.