Skip to main content

"25 வருசமா நெறய கத்துக்கிட்டேன்... உங்க பாதம் தொட்டு வணங்குறேன்!" - அருண் விஜய் உருக்கம்!

Published on 18/02/2020 | Edited on 19/02/2020

மாஃபியா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் அருண் விஜய், படம் சம்பந்தமான சுவாரசியமான நிகழ்ச்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி பேசினார். விழாவில் அவர் பேசியதாவது, " திரைத்துறையில் இந்த வருடம் நான் 25-வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறேன். இத்தனை ஆண்டில் நிறைய கற்றுக்கொண்டேன். இதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல. இங்கே இந்த விழாவுக்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்களும் அதற்கு மிக முக்கிய காரணம். என்னுடைய குறை நிறைகளை எனக்கு சொல்லிக்கொடுத்து என்னை அடுத்த கட்டம் செல்வதற்கு எப்போது உத்வேகமாக அவர்கள் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். உங்கள் பாதம் தொட்டு வணங்குறேன். இந்த மகிழ்ச்சியான சமயத்தில் மாஃபியா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. தடம் படத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து இந்த படம் வெளிவர இருக்கிறது. கார்த்திக் மாதிரியான இளம் இயக்குநர்களிடம் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவருடைய பார்வை புதிதாக இருந்தது. அவர் கதை சொல்லிய போதே அதுகுறித்த ஈர்ப்பு எனக்கு ஏற்பட்டது. நம்முடைய கதாப்பாத்திரத்தை எப்படி காட்டப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எனக்கே அதிகம் எழுந்தது. இந்த படம் எப்படி இவ்வளவு சீக்கிரம் பண்ண முடிந்தது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்ததுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமே இயக்குநர் கார்த்திக்கின் வேலைதான்.
 

jk



படத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை அவ்வளவு நேர்த்தியாக முன் கூட்டியே செய்ததால் தான் படத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்க முடிந்தது. எனக்கே அவர் படத்தை தற்போதுதான் காண்பித்தார். அவ்வளவு வேலைகளையும் முடித்துவிட்டு தற்போது அதை 100 சதவீதம் நல்ல முறையில் கொண்டு வந்துள்ளார். இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் அதனுடைய முழு சுவாரசியத்தையும் அறிய முடியும். அந்த மாதிரியான கதைக்களத்தையும், சவுண்ட் சிஸ்டமும் இந்தப் படத்தில் இருக்கும். சில நாட்கள் எல்லாம் இரவு பகல் பாராமல் சூட்டிங் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் எங்களுக்கு எந்த கஷ்டமும் தெரியவில்லை. எனென்றால் கார்த்தியோட எனர்ஜி லெவல் அந்த மாதிரி இருந்தது. அதனால் எங்களுக்கு இந்த சிரமும் எந்த காட்சியிலும் இல்லாமல் முழு படத்திலும் நடிக்க முடிந்தது. இரவு 2 மணிக்கு சூட்டிங் நடைபெற்றாலும் அப்போது அதே எனர்ஜி லெவலுடனே காட்சிகளை இயக்குநர் எடுத்தார். அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். லைட் மேன் வரைக்கு அனைவரிடமும் முழு ஒத்துழைப்பு இருந்தது. அவங்களுக்கு எல்லாம் அது தேவையே இல்லை. இருந்தாலும் அனைவரும் அவர்களுடைய பெஸ்டை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். அதனால்தான் நாங்கள் எந்த இடத்திலும் சோர்வடையாமல் வேலை செய்ய உறுதுணையாக இருந்தது" என்றார். 

 


 

Next Story

சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் அருண் விஜய் கூட்டணி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
arun vijay next movie update

அருண் விஜய் கடைசியாக ஏ.எல் விஜய் இயக்கத்தில் ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அருண் விஜய்யின் 36ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, உதயநிதியின் கெத்து உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க பாபி பாலசந்தர் வழங்குகிறார். 

இப்பட பூஜையில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கிளாப் போர்டு அடித்து படப் பணிகளை தொடங்கி வைத்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இப்படப் பூஜையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

Next Story

ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்; தொடர்ந்து நடக்கும் மாற்றம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
maniratnam kamal in thug life arun vijay replaced jayam ravi character

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக முணுமுணுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மணிரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.