Skip to main content

சட்டம் சாமானியர்களுக்கு மட்டும்தான்!  சர்க்காருக்கு அல்ல!

Published on 03/09/2018 | Edited on 03/09/2018

இருசக்கர வாகனங்களில் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் ஒரு அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. உடனே, இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஆயத்தமாகிவிட்டனர் காக்கிகள். 


 

jayalalithaa car


 

பெரும்பாலான இடங்களில் கறாராக நடந்துகொள்கின்றனர். சில இடங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் கண்டுகொள்வதில்லை. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், ஆர்.சி.புக், லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ் போன்றவற்றை கேட்கிறார்கள். இவற்றில், ஆர்.சி. புக், லைசென்ஸ் விஷத்தில் பிரச்சனைகள் வருவதில்லை. பெரும்பாலானோர் வைத்திருப்பார்கள். இந்த இன்ஸ்யூரன்ஸ் இருக்கிறதே! அதாவது, வாகனத்துக்கான காப்பீடு. இதுதான் பல வாகனங்களுக்கும் காலாவதி ஆகியிருக்கும். ஏனென்றால், இருசக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ வாங்கும்போது, ஓராண்டுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தப்படும். அது காலாவதியான பிறகு, பலரும் காப்பீட்டைப் புதுப்பிப்பது இல்லை. அதனால்தான், காப்பீடு இல்லை என்ற காரணத்துக்காகப் பலரும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. 
 

 

 

வாகன சோதனை நடத்தி, காப்பீடு விஷயத்தில் சாமானியர்களைக் கசக்கிப் பிழியும் போக்குவரத்துக் காவல்துறையினர்,  அரசுத்துறை வாகனங்களுக்கும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்களா?  விசாரணையில் இறங்கினோம். 
 

jayalalithaa car


 

2014, மே 8-ஆம் தேதி, சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பயன்பாட்டிற்காக டொயேட்டா கிர்லோஸ்கர் கார்கள் வாங்கப்பட்டன. இவையனைத்தும் சென்னை காவல் ஆணையர் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டன. இந்தக் கார்களை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். 2015, மே 7-ஆம் தேதியோடு இந்த வாகனங்களுக்கான காப்பீடு முடிந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காப்பீடு செலுத்தாமலேயே, இந்த வாகனங்கள் உலா வருகின்றன. அந்த வாகனங்களின் பட்டியல் இதோ –
 
 

வாகன எண்     பயன்படுத்துபவர்
டி.என்.01 ஜி 6276   கூடுதல் ஆணையர் (தெற்கு) மகேஷ்குமார் அகர்வால்
டி.என்.01 ஜி 6298 இணை ஆணையர் (தெற்கு) மகேஷ்வரி
டி.என்.01 ஜி 6283  தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன்


 

காவல்துறை அதிகாரிகளின் வாகனங்கள்  இப்படியென்றால்,  அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களின் வாகனங்கள் எப்படி? 
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்காக, அவர் பதவியேற்ற 10 நாட்களில், அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி டொயேட்டோ கிர்லோஸ்கர் கார் வாங்கப்பட்டது. கூடுதல் செயலாளர் பெயரில் பதிவு செய்யப்பட்ட (பதிவு எண் டி.என்.07 ப்பி.ஜி. 5577) இந்த  வாகனத்துக்கு,  இன்று வரையிலும் காப்பீடு என்பதே இல்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்காக 2018, ஜனவரி 18-ஆம் தேதி புதிதாக, டி.என்.07 சி.எம். 2233  பதிவெண் உள்ள  கார் ஒன்று  வாங்கப்பட்டது. இந்தக் காருக்கு உரிய காப்பீட்டு தொகையை செலுத்திவிட்டனர். 


 

jayalalithaa car


வாகனக் காப்பீடு மிகவும்  அவசியமானது. விபத்து நேரிடும்போது, நமக்கான இழப்பீடோ, அல்லது வாகனம் சேதம் அடைந்தால், அதற்கான இழப்பீடோ, காப்பீடு நடப்பில் இருந்தால் மட்டுமே, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறமுடியும். அதற்காகத்தான், காப்பீடு சான்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. காப்பீடு சான்றி இல்லாமல் வாகனங்களை இயக்குவது, வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால், மோட்டார் வாகனச் சட்டம் 146, 196-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். அப்படியென்றால் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள்தானே? அந்த வகையில்,  ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் குற்றவாளிகள் அல்லவா? 

 

 

 

jayalalithaa car

 

 

jayalalithaa car


 

 

 

 

 


 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.