Skip to main content

ஈழத்தில் வைகோவுக்கு சிலை வைப்போம்! - ஈழக் கவிஞர். காசி ஆனந்தன்

Published on 22/05/2018 | Edited on 22/05/2018

இலங்கையில் 2009 மே மாதம் நடந்த இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன்.

"வைகோவைப் பார்த்து இன்றைக்கு சிலர் தெலுங்கர் என்று சொல்லுகிறார்கள். எனக்கு தெரியும் நான் தமிழீழத்தை சேர்ந்தவன், நான் சொல்லுகிறேன். வைகோ தெலுங்கர் என்று சொன்னால் நானும் தெலுங்கர். நான் தமிழன் என்றால் வைகோவும் தமிழன். ஆதித்தனார் அவர்களுடன் நான் இருந்தவன், அவர் என்ன கொள்கை கொண்டு இருந்தார் என்பது எனக்கு தெரியும். ஒரு 1500 ஆண்டுகளுக்கு முன் என்னோடு என்னைப்போல் இருந்த தமிழன் அவன் இடைக்காலத்தில் மாறுகிறான். காலச் சூழலில் தெலுங்கன் ஆகிறான். அவனது நாடும் இனமும் உருவாகிய பிறகு, அவன் இன்னொரு இனம் அவனை மதிக்க வேண்டும். ஆனால் அவன் இன்னொரு தெலுங்கனாக மாறிப் போவானவன். ஆனால் இன்றும் நான் தமிழன்தான் இன்றும் உலகத்தில் நான் தமிழனாகவே வாழ்வேன் என்றால் அவனை விட தமிழன் யாரும் இல்லை என்கிறார் ஆதித்தனார்.
 

kasi aananthan

 

 

 

தமிழ் இன விடுதலை புலி போராட்டத்திற்கு முதல் முறையாக 20 கோடி ரூபாய் தந்தது, முதலும் கடைசியும் அவன்தான். அவன் ஒரு திராவிடன் பெயர் எம்.ஜி.ஆர். அதை மறந்துவிடாதீர்கள். இன்றைக்கு எந்த தமிழன் தந்தான். திராவிடன்தான் தந்தான். இன்றைக்கு  எம்.ஜி.ஆர்.க்கு நாங்கள் யாழ்ப்பாணத்தில் சிலை வைத்திருக்கிறோம். எங்கள் விடுதலைப் புலி போராட்டத்தில் இருவரை இன்றும் தலைவராக காலகாலமாக நாங்கள் கருதிகிறோம். இன்று  எம்.ஜி.ஆர். அவருக்கு நிகராக ஒருவர் பழ. நெடுமாறன் ஒருவர் வைகோ. இன்று இவ்வளவு எதிர்ப்புகளுக்கு நடுவிலும் சிங்கள படைவீரர்களின் போராட்டத்திற்கு நடுவிலும் யாழ்ப்பாணத்தில்  எம்.ஜி.ஆர்.க்கு சிலை இருக்கிறது. நாளை தமிழீழம் அமைகிறபோது மண்ணில் நிலைத்து நிற்கிற சிலை நெடுமாறன் சிலை, வைகோ சிலை. அதை மறந்துவிடாதீர்கள். வைகோவை நீங்கள் கலங்கபடுத்த நினைக்காதீர்கள். எங்களுக்கு என்றும் தமிழகம் துணை இருக்கும். இங்கு  இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்குள்ளும் நெருப்பு இருக்கிறது என்பது எனக்கு தெரியும் ஏனென்றால் உங்களை உருவாக்கியவர் அப்படிப்பட்ட தலைவர்.

 

 

சேகுவேரா தன் நாட்டுக்காக போராடி விட்டு, பக்கத்துக்கு நாட்டுக்கு போனான், போராடினான்.. அதுபோல இது இனப் போராட்டம். இந்த நாட்டு மக்களுக்காக அல்ல, பக்கத்து நாட்டுக்கு போராடுவேன் என்று கடலில் இறங்கி நின்றவர் வைகோ. நான் சேகுவேராவிற்கும் வைகோவைக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. அவர் கையில் துப்பாக்கி இருந்தது, இவர் கையில் அது இல்லை. அது மட்டும்தான் வேறுபாடு. அந்த மண்ணில் 2706 இந்து கோவில்களில் குண்டுகளை போட்டது சிங்கள அரசு. இந்து மதத்தை பெரியதாக பேசுகிற இந்திய அரசு இதைப் பார்க்க வேண்டாமா?  ஒரு ராமனின் கோவிலை மசூதி ஆக்கிவிட்டான் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடுகிற இந்திய அரசு, 2706 கோவில்களில் குண்டு வெடித்தது அதை பார்த்துக்கொண்டு இருக்கலாமா? அவர்கள் இந்துக்கள் இல்லையா? ஒரு இந்து பெண்ணானா பாஞ்சாலி ஆடையை கலந்ததற்காக பாரதம் நடத்திய இந்தியா, பத்தாயிரம் இந்து பெண்கள் துடிக்க, துடிக்க பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டார்களே அப்போது இலங்கையில் எத்தனை பாரதப் போர்களை இந்தியா நடத்தியிருக்க வேண்டும். இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் வேண்டும். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். தமிழீழ விடுதலை போர் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த அதே கோலத்தில் விடுதலை புலிகளின் போராக மீண்டும் நடக்கும். அதை உறுதியாக நம்புங்கள்".

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர்.