Skip to main content

ஜெ. படத்தை அகற்றிய ஓ.பி.எஸ்.! -ர.ர.க்கள் அதிர்ச்சி!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021
ddd

 

தமிழகத்தின் அரசியல் மையப் பேச்சாக இருக்கும் திராவிடத்தை நகர்த்திவிட்டு, ஆன்மிகத்தைக் கொண்டுவருவதற்கு பா.ஜ.க. பிரம்ம பிரயத்தனம் செய்துவருகிறது. ஆனால் திராவிடக் கட்சிகளோ… பா.ஜ.க. பாணியை தங்களுடையதாக்கி டஃப் தருகின்றன.

 

தமிழக பா.ஜ.க. வேல் யாத்திரை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டுவைக்க, கடந்த மாதம் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் ஆறடி உயரத்தில் வெள்ளியிலான வேலை ஓ.பி.எஸ்.ஸுக்கு பரிசாகக் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது சில குருக்கள் ஸ்டாலினுக்கு வேலை அன்பளிப்பாகக் கொடுத்தனர். அடுத்தடுத்து வேலை அன்பளிப்பாக வாங்கிய பட்டியலில் துரைமுருகனும் இடம்பெற்றுவிட்டார்.

 

விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் தேர்தல் களத்தில் குதித்து மும்முரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது முதல் உற்சாகமாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறார் எடப்பாடி. துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸோ தனது தொகுதியிலுள்ள நகரங்களையும் பட்டி தொட்டிகளையும் குறிவைத்து பிரச்சாரம் செய்துவருகிறாரே தவிர தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட வில்லை.

 

இந்நிலையில் ஓ.பி.எஸ். பிரச்சாரம் செய்யப் போகும் புதிய பிரச்சார வாகனத்தை ஓ.பி.எஸ்.சின் இளைய மகனான ஜெயபிரதீப் திருப்பதிக்கு கொண்டுசென்று அங்கு அய்யரை வைத்து சிறப்பு பூஜை செய்திருக்கிறார். இந்த பிரச்சார வாகனத்துக்கு நடுவில் ஜெயலலிதா படம் பெரியளவில் உள்ளது. வாகனத்தின் உள்பகுதியில் ஓ.பி.எஸ். உட்காரும் இடத்திற்கு எதிரே வழக்கமாக இருக்கும் ஜெ. படத்துக்குப் பதில், ஒரு ஜான் உயரத்தில் புதிதாக வேல் வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு கட்சிக்காரர்களே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 

ddd

 

திருப்பதியில் சிறப்பு பூஜை செய்யப் பட்ட ஓ.பி.எஸ்.சின் பிரச்சார வாகனத்தையும் சென்னைக்கு கொண்டுவந்து தற்பொழுது நிறுத்தியிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் ஓ.பி.எஸ். தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கவிருப்பதால் அதற்கான பணிகளில் கட்சிப் பொறுப்பாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வேலை ஆதரிப்பவர்கள் பக்கம் நிற்கப்போகிறார்களா?… வேல்நுனி போல் கூர்மையான கேள்விகளால் மக்கள் பிரச்சனையைப் பேசுபவர்கள் பக்கம் நிற்கப் போகிறார்களா? பார்க்கலாம்!

 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.