Skip to main content

அமித் ஷாவை திமுக அழைத்தது சரியா?

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

அமித்ஷாவை கலைஞர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு அழைக்கலாமா என்ற குரல் இப்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அவரை அழைத்ததன் மூலம் திமுக பாஜக கூட்டணிக்கு அடித்தளம் போடுகிறதா? காங்கிரஸை மிரட்டுகிறதா என்றெல்லாம் விவாதங்கள் தூள்பறக்கின்றன.

 

modi with narendra modi



திமுகவுக்குள்ளேயே ஒரு குரூப் அமித்ஷாவை அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். கலைஞர் உயிரோடு இருந்தவரை யாரையும் தனக்கு எதிரியாக நினைத்தவரில்லை. அவரை கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட மறுநாள் அவரை அவருடைய இல்லத்தில் நேரடியாக சந்திக்க முடியும் என்ற இலகுத் தன்மையை கடைப்பிடித்தவர் கலைஞர்.

அவருக்கான அஞ்சலிக்கூட்டத்தில் யாரையும் அழைக்காமல் விடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. அந்த வகையில்தான் கலைஞருக்கான ஊடகவியலாளர் அஞ்சலிக் கூட்டத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. 

அதுபோலத்தான் அரசியல்தலைவர்கள் அஞ்சலி்க் கூட்டத்திற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. அவர்களில் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஒருவர். அமித் ஷாவை அரசியல் ரீதியாக எதிர்ப்பதில் திமுக முன்னோடியாகவே இருந்திருக்கிறது. இப்போது அஞ்சலிக் கூட்டத்திற்கு அழைக்க வேண்டிய கடைமையை திமுக சரியாக செய்திருக்கிறது. அதற்கு வருவதும் வராமல் இருப்பதும் அமித் ஷாவின் முடிவு. இதை ஏன் இவ்வளவு பெரிய விவாதமாக்குகிறார்கள் என்பது புரியவில்லை.

கலைஞர் அஞ்சலிக் கூட்டத்தில் கலைஞரைப் பற்றி அமித் ஷா என்ன பேசுகிறார் என்பதும், ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பதும்தான் முக்கியம். மாறாக தனிப்பட்ட அரசியல் நாகரிக நடவடிக்கைகளையும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகளையும் இணைத்து குழப்பிக் கொள்வது தவறு.
 

amit shah



ஆட்சிக்கு வரக்கூடிய பலம் உள்ள கட்சிகள், மத்தியில் ஆளுங்கட்சியாக வரக்கூடிய கட்சிகளைப் பகைத்துக் கொள்வதோ, எதிரி மனப்பான்மையோடு அணுகவதோ ஆபத்து என்பதை உணர்ந்தவர் கலைஞர். அதற்காக, எம்ஜியார் மாதிரி கும்பிடுவதோ, ஜெயலலிதா மாதிரி அளவுக்கதிகமாக பகைத்து காரியங்களைக் கெடுத்துக் கொள்வதோ, திமுகவிடம் இருக்காது. தமிழக நலன்களுக்காக உரிமைகளை பேச்சுவார்த்தை மூலம் பெறவேண்டும் என்று நினைக்கிற கட்சி.

எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளைப் போல நடத்துவது திமுகவுக்கு என்று பழக்கமே இல்லை. பாஜகவினர் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு திமுகவினர் செல்வதைப் போலவே திமுகவினர் வீடுகளுக்கும் பாஜக உள்ளிட்ட மற்ற கட்சியினர் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் அமித் ஷாவை கலைஞர் அஞ்சலிக் கூட்டத்திற்கு அழைத்ததை அரசியலாக்குவதில் அரசியலாக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

இதில் மேலும் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், பதிவுபெற்ற அனைத்து தேசிய, மாநில கட்சிகளுக்கும் கலைஞர் அஞ்சலிக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.