Skip to main content

முதல்ல குழந்தைகளை கொல்லணும்ன்னு நினைக்கல... போலீசில் அபிராமி...

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
 I did not want to kill the children first... says abirami in police


 

 

இரண்டு மாத கூடா நட்பு, இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய வைத்திருக்கிறது. காதலித்து திருமணம் செய்து 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவனையும் கொலை செய்ய முயற்சித்திருக்கிறது. சென்னை குன்றத்தூரில் நடந்த அபிராமி நடத்திய கொடூர சம்பவம்தான் இன்று அனைவரையும் அதிர வைத்திருக்கிறது. 
 

குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்ற அபிராமியை போலிசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
 

 

 

அப்போது, நானும் விஜயும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குடும்ப தேவைகளை நிறைவேற்ற என்னிடம்தான் பணம் கொடுப்பார். நான்தான் குடும்பத்திற்கு தேவையானவற்றையும், பிள்ளைகளுக்கு தேவையானவற்றையும் வாங்கிக் கொடுப்பேன். குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடிபுகுந்த பின்னர்தான் அதே பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்று வந்தோம்.
 

அப்போது அங்கு பிரியாணி கடையில் பில்போடும் இடத்தில் இருந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடிக்கடி செல்போனில் பேசுவோம். பிரியாணி கடைக்கு வர சொல்லுவார். நானும் பிரியாணி வாங்க அந்த கடைக்கு அடிக்கடி செல்வேன். இதனால் எங்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. இது விஜய்கு தெரிய வந்தது. சந்தேகப்பட்டார். சமாளித்தேன். 
 

சுந்தரத்துடன் ஏற்பட்ட காதல் காரணமாக, விஜய்யை பிரிய நினைத்தேன். இதற்கு சுந்தரமும் உடன்பட்டார். கொலை சம்பவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு நான் விஜய்யுடன் கோவித்துக்கொண்டு சுந்தரம் வீட்டிற்கு சென்றேன். என்னை காணவில்லை என்று தேடிய விஜய், பிறகு என்னை தொடர்பு கொண்டு வந்துவிடு என்று கெஞ்சினார். பின்னர் வீட்டுக்கு வந்தேன். 
 

 

 

விஜயோடு 8 ஆண்டுகள் குடும்பம் நடத்தியபோதும், இரண்டு மாதம் பழகிய சுந்தரத்தின் காதலை விடமுடியவில்லை. என்ன செய்வதன்று தெரியாமவில் தவித்தேன். அப்போது சுந்தரம், குழந்தைகளை கொன்றுவிட்டால் நாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம். வேறு எங்காவது போய் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று கூறினார். குழந்தைகள் உயிரோடு இருந்தால் நம்மை தேடி வருவார்கள்.

 

குழந்தைகளை கொல்ல மனம் வரவில்லை. இருப்பினும் சுந்தரத்தின் பழக்கத்தையும் விட முடியவில்லை. தவித்தேன். இதற்கு வேறு வழி இருக்கிறதா என யோசித்தேன். எந்த வழியும் இல்லை. மீண்டும் சுந்தரத்தை சந்தித்தேன். குழந்தைகளை கொன்றால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று சொன்னதால், வேறு வழியில்லாமல் விஷ மாத்திரைகளை கலந்த பாலை கொடுத்தேன் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார். 
 




 

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

பைக் மீது தீராத காதல்-15 பைக்குகளை திருடிய சிறுவன் கைது

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Unrequited love for bikes-17-year-old boy arrested for stealing many bikes

17 வயதில் எண்ணற்ற வண்டிகளை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஆர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் ஆர்யா பன்னிரண்டாம் வகுப்பு பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சிறுவன் என்றுகூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். சில மாதங்களாக அங்கு இருந்தவன் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கடலூர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து ரிலீஸ் ஆனான். வெளியே வந்தவன் மீண்டும் பைக் திருட்டில் ஈடுப்பட்டுள்ளான். கடலூர், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் மூன்று வண்டிகளையும் திருவண்ணாமலையில் 15 வண்டிகளும்  திருடியதாக தெரிய வருகிறது.

மார்ச் 7 ஆம் தேதி காலை 7 மணி அளவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோடு அங்காளம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நிலையில் அழைத்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளான்.

தொடர் விசாரணையில் பைக் திருடன் என்பது தெரிய வந்த நிலையில் திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இந்த சிறுவனுக்கு பைக் மீது தீராத காதல் இருந்துள்ளது. திருடிச் செல்லும் பைக்கை விற்பனை செய்யாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளான். அவன் விருப்பப்படும் போது மட்டும் விரும்பிய பைக்கை எடுத்து ஓட்டிவிட்டு மீண்டும் பாதுகாப்பாக தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்துள்ளான். இந்த தகவலை அவன் சொன்னதும் போலீசார் ஆச்சரியமடைந்துள்ளனர். அவன் திருடிய 15 பைக்குகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். பைக் திருடு போனதாக புகார் தந்தவர்களை வரவைத்து ஆவணங்களை சரிபார்த்து அந்த பைக் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

வழக்கமாக பைக் திருடுபவர்கள் உடனடியாக அதனை வேறு ஒருவருக்கு விற்பதும் இல்லையென்றால் ஸ்பேர் பார்ட்ஸ்களை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பதை தான் இதுவரை காவல்துறையினர் கேள்வி பட்டுள்ளனர். ஆனால் பைக் மீது கொண்ட காதலால் விரும்பிய பைக் திருடிக் கொண்டு போய் வீட்டிலேயே பத்திரமாக வைத்து அதை சுத்தம் செய்து பளபளப்பாக வைத்துக் கொண்டிருப்பவனை நினைத்து காவல்துறையினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.