Skip to main content

பத்திரிகை சுதந்திர போராளிகள் இருவரின் சந்திப்பு...

Published on 25/10/2018 | Edited on 25/10/2018

கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று சென்னையிலிருந்து புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபாலை எந்த வித நெறிமுறைகளையும் பின்பற்றாமல், காரணமும் சொல்லாமல், உடன் வந்தவர்களுக்கும் தகவல் சொல்ல விடாமல் கைது செய்தது தமிழக காவல்துறை. எங்கு கொண்டு செல்கிறோம் என்றே தெரிவிக்காமல், சில மணிநேர அலைக்கழிப்புக்குப் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று, ஆளுநர் மாளிகையிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சட்டப்பிரிவு 124ன் கீழ் வழக்குப் பதிவு செய்து எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது காவல்துறை.
 

hindu ram nakkheeran gopal

 

nakkheerar hindu ram family

 

nakkheeran gopal family with hindu ram



நீதிமன்றத்தில் ஆசிரியர் நக்கீரன் கோபால் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், 'சட்டப்பிரிவு 124 என்பது, குடியரசுத்தலைவரையோ ஆளுநரையோ பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல் போன்ற குற்றங்களுக்கானது. இந்த இரண்டு செயல்களுக்கும் சற்றும் தொடர்பில்லாத நக்கீரன் கோபாலை, அடிப்படையே இல்லாமல் போடப்பட்டுள்ள இந்த வழக்கின் கீழ் கைது செய்தது தவறு' என வாதிட்டார். இந்த வாதத்துக்கு மிகுந்த பலம் சேர்த்தது, நீதிமன்றத்தில் 'தி இந்து குழும'த்தின் தலைவரான ராம் முன்வைத்த கருத்துகள். இந்த வழக்கின் விசாரணையின் போது, மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் ராமின் கருத்துகளைக் கேட்டார் நீதிபதி. அப்போது, 'சட்டப்பிரிவு 124இன் கீழ் ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்படுவது மிகத் தவறான முன்னுதாரணமாகிவிடும்' என்று பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக தீர்க்கமாக தன் கருத்துகளைக் கூறினார். இந்த வழக்கில் நக்கீரன் கோபாலை கைது செய்ய முடியாது என்று கூறி அவரை விடுவித்தார் நீதிபதி கோபிநாத்.

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான இந்த அடக்குமுறையின்போது தானே முன்வந்து அதைக் காக்க உறுதுணையாக இருந்த இந்து என்.ராம் இல்லத்தில் கடந்த வியாழன் அன்று அவரை சந்தித்து மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார் நக்கீரன் ஆசிரியர். குடும்பத்துடன் சந்தித்த அவர்கள், காலை உணவுடன், கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக சமீப காலமாக வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அவற்றை ஒன்றாக நின்று எதிர்கொள்வது குறித்தும் உரையாடினர்.

 

 

 

Next Story

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கால் முறிவு!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
2 persons arrested in the case of attack on the journalist suffered a broken leg

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் கடந்த 24 ஆம் தேதி செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வந்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

தமிழக பாஜக மாநிலத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 26/01/2024 | Edited on 26/01/2024

 

பத்திரிகையாளர்களைக் கீழ்த்தரமாகப் பேசிவரும் தமிழக பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (25-01-2024) மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மு.அசீப் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நக்கீரன் ஆசிரியர், தி இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், சன் நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர்  மு. குணசேகரன் எனப் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.