Skip to main content

தி.மு.க.வுக்கு எதிரான ஃபைல்களுடன் டெல்லி சென்ற ஆளுநர்! மோடியை சந்திக்காமல் அவசரமாக சென்னை திரும்பிய பின்னணி!  

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Governor RN Ravi went to Delhi

 

தி.மு.க. அரசின் திராவிட மாடலுக்கு எதிராக அடிக்கடி சாட்டையை சுழற்றிவருகிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இதற்கு தகுந்த பதிலடியும் தி.மு.க. அரசு அவ்வப்போது கொடுத்து வருகிறது. ஆனாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க. அரசை சீண்டிக் கொண்டே இருக்கிறார் ஆர்.என்.ரவி.

 

இதனால் தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்குமான முட்டல் மோதல்கள் அதிகரித்தபடியே இருக்கும் நிலையில், மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்ற ஆர்.என்.ரவி, அவசரம் அவசரமாக சென்னை திரும்பியிருக்கிறார்.


கவர்னரின் டெல்லி பயணம் குறித்து விசாரித்த போது, "தனது அதிகாரத்துக்குட்பட்டே இயங்குகிறார் கவர்னர். ஆனால், தன்னுடைய ப்ரோம்கிராம்கள் அனைத்தையும் முன்கூட்டியே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தி.மு.க. அரசு எதிர்பார்ப்பதை கவர்னர் ரசிக்கவில்லை. உதாரணமாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு நேரம் கொடுத்திருந்தார் கவர்னர். இதனை அரசுக்கோ அல்லது உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கோ தெரிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதில் கவர்னருக்கு உடன்பாடில்லை. மேலும், விழாவில் எதைப் பேசவேண்டும் என தனக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை என நினைக்கிறார். இப்படிப்பட்ட இயல்புகள்தான் அவருடையது. ஆனால், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரான உயர்கல்வி அமைச்சரை கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டதை கவர்னர் அனுமதித்திருக்கக் கூடாது. இது அரசுத் தரப்பை காயப்படுத்துகிறது. அதனால் எதிர்வினையாற்றுகிறது தி.மு.க. அரசு. இதுதான் மோதல்களாக வெடிக்கின்றது.


இதனால் தனது கவனத்துக்குக் கொண்டு வரப்படக்கூடிய அரசுக்கு எதிரான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் அவர். அதுவும் ஆதாரங்களுடன் கொடுக்கப்படக்கூடிய விவகாரங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார். அந்த வகையில்தான், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், தற்போதைய மாநில உளவுத்துறைத் தலைவர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்துக்கு எதிராக பா.ஜ.க. அண்ணாமலை தொடுத்துள்ள தேசவிரோத குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தியிருக்கிறார். இது குறித்த ஆதாரங்கள் அண்ணாமலை தரப்பிலிருந்து கவர்னரிடம் தரப்பட்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவர்னரும் தனது சோர்ஸ் மூலம் பல தகவல்களை திரட்டியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்லிக்கு விரைந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ராஜ்பவனுக்கு நெருக்கமான அதிகாரிகள்.


தமிழக அரசின் உயர்கல்வித் துறையினர் தரப்பில் விசாரித்தபோது, "பல்கலைக்கழகத்தின் வேந்தர் கவர்னர் என்றால், இணைவேந்தர் உயர்கல்வி அமைச்சர்தான். பல்கலைக்கலைக் கழகத்தில் கவர்னருக்குரிய அதிகாரம் அமைச்சருக்கும் இருக்கிறது. அந்த அதிகாரத்தை ராஜ்பவன் தடுக்கிறபோது அதற்கு எதிராக அரசு செயலாற்றுகிறது. இதில் தவறு எதுவும் கிடையாது. இணைவேந்தரை கௌரவ விருந்தினராக எப்படி போடலாம்? இது இணைவேந்தர் பதவியை சிறுமைப்படுத்துவதாகாதா? பல்கலைக் கழகத்துக்கும் ஒன்றிய இணையமைச்சர் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அவரை எதற்கு விழாவுக்கு அழைக்க வேண்டும்? ஆக, தி.மு.க. அரசை சீண்டுவதுதான் ராஜ்பவனின் நோக்கமாக இருக்கிறது. பல்கலைக்கழக விழாவில் மாணவர்களிடம் சனாதான கொள்கையை நிலை நிறுத்துவதுதான் கவர்னரின் வேலையா? ஏன், சனாதானத்துக்கு கொடிபிடிக்கும் வகையில் அவர் பேச வேண்டும்? இதற்கு முந்தைய கவர்னர்கள் இப்படித்தான் நடந்து கொண்டார்களா? ஏன், பா.ஜ.க. ஆளும் மாநில கவர்னர்கள் கூட ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மாணவர்களிடம் புகுத்துவதில்லையே? இவர் மட்டும் இப்படி பேசுவதால் தான் அமைச்சர் உள்ளிட்டவர்கள் ராஜ் பவனுக்கு பதிலடி தருகின்றனர். டெல்லியின் அசைன்மெண்டுக்கேற்ப கவர்னர் ஆடுகிறார். அது நிற்காதவரை கவர்னருக்கு எதிரான பதிலடி அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுக்கொண்டு தானிருக்கும்’ என்கிறார்கள் உயர்கல்வித் துறையினர்.


டெல்லியிலுள்ள சோர்ஸ்களிடம் நாம் விசாரித்தபோது, "குடும்ப ரீதியிலான ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காகவே டெல்லிக்கு வந்தார் கவர்னர். இது ஏற்கனவே முடிவான ஒரு நிகழ்வுதான். ஆனால், டெல்லிக்கு வருமாறு கடந்த வாரம் அழைத்திருந்தது பிரதமர் அலுவலகம். அப்போது, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இருப்பதையும், 16-ந் தேதி டெல்லிக்கு வரவேண்டிய ப்ரோகிராம் இருப்பதையும் சொன்னதையடுத்து, கடந்த வாரம் டெல்லிக்கு அவர் செல்வது தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஏற்கனவே திட்டமிட்டபடி 16-ந் தேதி டெல்லிக்கு வந்திருந்தார் கவர்னர்.


ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா இருவரையும் கவர்னர் சந்திக்க நேரம் முடிவாகியிருந்தது. ஆனால், தமிழகத்தில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம், வன்முறையை அறிந்து சென்னைக்கு உடனடியாகச் செல்லுமாறு பிரதமர் அலுவலகத்திலிருந்து கவர்னருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால், அவர் புறப்படுவதற்கு முன்பு, பிரதமர் அலுவலக உயரதிகாரிகள் இருவர் கவர்னரை சந்தித்தனர்.


பிரதமரிடம் சொல்லவேண்டிய தகவல்களை அவர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் கவர்னர். குறிப்பாக, போலி பாஸ்போர்ட் விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, வெளிநாட்டு தொழில் முதலீடுகள் விவகாரம், தமிழகத்தின் 4 அமைச்சர்களின் துறைசார்ந்த ஊழல்கள், முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்திற்கு நெருக்கமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தொழில் முதலீடுகள் ஆகிய 5 கோப்புகள் அந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதில், போலி பாஸ்போர்ட் விவகாரம் தவிர மற்ற 4 கோப்புகளும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தகவல்களின் அடுத்த பகுதி. ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு இதன் தாக்கம் தெரியவரும்” என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

 

 

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார். 

Next Story

“பிரதமர் மோடி விஸ்வகுருவா? அல்லது மெளனகுருவா?” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வேட்பாளார்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று (26.12.2024) மேற்கொண்டார்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசுகையில், “வரும் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அறப்போராட்டம். சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது. மதத்தின் பெயரில் அரசியல் செய்யும் பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும். அன்று கேட்ட மரண ஓலம் இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. செய்திகள் மூலம் தான் தூப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னது பொய். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்து தான் துப்பாக்கி சூடு நடந்துள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமே தெரிவித்துள்ளது.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதத்தை தமிழ்நாடு அரசு முன் வைத்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கட்சத்தீவு மீட்கப்படும் என்று கூறினீர்களே. அது நடந்ததா?. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவோம் என்று சொன்னீர்களே. அதனை செய்தார்களா. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. விவசாயிகளை எதிரி போல் நடத்துவது தான் பா.ஜ.க.வின் அரசின் மாடலா. தி.மு.க. அரசின் கொள்கை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். பேரு மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். ஆனால் அதில், 60% நிதி மாநில அரசுதான் தருகிறது. இப்படி ஸ்டிக்கர் ஒட்டி கேவலமாக பிரசாரம் செய்கின்றனர்.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

பழனிசாமி யார்?. நேற்று யாரோடு இருந்தார்?. இன்று யாரோடு இருக்கிறார்? நாளை யாருடன் இருப்பார்?. நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுவார் என்பதை மக்கள் எடை போட்டு தீர்ப்பளிப்பார்கள். பழனிசாமி அவர்களே உங்களுக்கு முன்னாள், இன்னாள் கிடையாது என்னாளும் பா.ஜ.க.தான் எஜமானரா?. மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத பாதம்தாங்கி பழனிசாமிதான் தமிழ்நாட்டை காப்பாற்றப் போகிறாரா?. பழனிசாமி அவர்களே! மாநில உரிமைகளை அடகு வைத்ததே நீங்கள்தான். மோடி பற்றி பாசாங்கிற்குகூட பத்து வார்த்தை பேசாத பழனிசாமி, மாநில உரிமைகளை மீட்கப் போகிறாராம். பச்சைப் பொய் பழனிசாமினு மக்கள் சும்மாவா சொன்னாங்க. தி.மு.க. - அ.தி.மு.க. இடையே தான் போட்டி என எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்காரு. அந்த அளவிற்காவது அவருக்கு புரிதல் இருக்கே என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பழனிசாமி அவர்களே களத்தில் மோதுவோம் மக்கள் தீர்ப்பளிக்கட்டும்.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

தமிழக மீனவர்கள் கைது, அபராதம் விதிப்பு, படகுகள் பறிமுதல் என மோடி ஆட்சியில் இலங்கை அரசு அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டிருக்கிறது. மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத பிரதமர் மோடி விஸ்வகுருவா? அல்லது மௌனகுருவா?. கச்சத்தீவு மீட்கப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் சொன்னார். ஆனால் இன்று வரை பா.ஜ.க. அரசு அதை செய்துள்ளதா. தமிழக மீனவர்களை காக்கத்தவறிய மோடி எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்க வருகிறார்” எனத் தெரிவித்தார்.