Skip to main content

108-க்கு கூட போன்பண்ண முடியல'' -அன்புமணி அட்டாக்!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018

டமாவட்ட அரசியலைத் தாண்டி தென் மாவட்ட அரசியலுக்குள் நுழையும் நோக்கத்தில் "வைகை ஆற்றைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார்.


தேனி மாவட்டத்தில் வைகை ஆறு உருவாகும் மேகமலையின் அடிவாரமான வாலிப்பாறையில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். வைகையின் மூலஆற்று நீரை கையில் அள்ளி மோந்து பார்த்துவிட்டு, சிறிதுதூரம் அந்த ஆற்றுநீரில் நடந்தார். பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசும்போது, “""இந்த தண்ணீரில் சாக்கடை கலந்திருக்கிறது. மேகமலைப் பகுதியில் மரங்களை வெட்டியதால்தான் மழைப்பொழிவு இல்லாமல் போனதற்கு காரணம். மரக்கன்றுகளை நட வேண்டும். அப்போதுதான் எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான பூமியை விட்டுச் செல்லமுடியும்''’என்றவர் மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கினார்.

 

anbumani



அப்போது அவரிடம் பேசிய மக்கள், ""எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு இதுவரை செல்போனில்கூட சிரமம் இல்லாமல் பேச முடியவில்லை. 108-க்கு அவசரமாக போன் செய்யவேண்டும் என்றால்கூட 20 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வருசநாட்டுக்குத்தான் போகவேண்டும்'' என்று குமுறினார்கள். உடனே, ""உங்கள் சிரமத்தைப் போக்கும்வகையில் விரைவில் செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்கிறோம்'' என்று அன்புமணி சொன்னார்.


பின்னர் வைகை அணையை பார்வையிட்ட அவர், ""வைகை அணையில 21 அடி உயரத்துக்கு சகதி தேங்கிக் கிடக்கிறது. சகதியை அகற்ற இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை. குளம் குட்டைகளையும் தூர் வாரவில்லை. இப்படி இருந்தால் நீராதாரத்தை எப்படி பாதுகாக்க முடியும்?'' என்று வினா எழுப்பினார்.


பின்னர் நிலக்கோட்டையில் தனது கட்சியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, ""ஆட்சியில் இருக்கிறவரைக்கும் கொள்ளையடித்துவிட்டுப் போகலாம் என்று செயல்படும் இந்த அரசு தொடர்ந்து பதவியில் நீடிப்பது ஆபத்து. பா.ஜ.க. ஆட்டுவிக்கிறபடி ஆடும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்குகிறது. எடப்பாடி உட்பட அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்'' என்றார்.


"வைகை ஆற்றைக் காப்போம் என்று தொடங்கியிருக்கிற இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், காவிரி ஆற்றுக்காகவும் தொடரும்' என்ற அன்புமணி, ஆகஸ்ட் 2-ஆம் தேதி மதுரையில் இருந்து விரகனூர், திருப்புவனம், பரமக்குடி, ராமநாதபுரம்வரை சென்று பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
 

 

 

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.