Skip to main content

ஸ்டாலின் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்... போட்டுத் தாக்கிய திண்டுக்கல் லியோனி!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

jk

 

சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நடப்பு அரசியல் குறித்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பேசினார். அவரின் பேச்சு வருமாறு, "இன்றைக்கு தகுதியே இல்லாத பலபேர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்களுக்குத் தற்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. அன்றைக்குப் பார்க்கிறேன், நான்கு அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அமைச்சர் தங்கமணி, ஜெயக்குமார், சண்முகம், மதுசூதனன் ஆகிய நால்வரும் செய்தியாளர்களிடம் பேச திணருகிறார்கள். ‘நீ பேசு, நீ பேசு’ என்று ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். ‘அய்யா நீ பேசுங்க, அப்பா நீ பேசு’ என்று காமெடி செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன காரணம் இவர்கள் இப்படி செய்துக் கொண்டிருக்கிறார்கள். முந்திரிக் கொட்டை போல் பேசிக்கொண்டிருந்தாரே நம்முடைய ஜெயக்குமார், இப்போது ஏன் அடுத்தவரைப் பேச சொல்கிறார். நான்கு மைக்குகளைப் பார்த்தாலே பலமணி நேரம் பக்கம் பக்கமாக பேசும் ஜெயக்குமார், அடுத்தவர்களை தற்போது கைக்காட்ட என்ன காரணம். ஏன் அன்றைக்கு வார்த்தை வரவில்லை. கிடுகிடு என்று அவர்கள் அனைவருக்கும் நடுக்கம். வார்த்தை வராமல் அடுத்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது கூட சட்டத்துறை அமைச்சர் ஒரு மயக்கத்தில் பேசிவிட்டார். என்னப் பேசினார் தெரியுமா? ஊரை அடித்து உலையில் போட்ட சசிகலாவுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை என்பதை மிகத் தெளிவாகச் சொன்னார். 

 

உடனே பத்திரிக்கையாளர் அவர்களிடம், சசிகலா நீங்கள் சொல்வது போல ஊரை அடித்து உலையில் போட்டபோது அவர்கள் கூட ஜெயலலிதா தானே இருந்தார்கள் என்று எதிர் கேள்வி வைத்தார்கள். இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்ல முடியாமல் அவர்கள் அனைவரும் துண்டை காணோம் துணிய காணோம் என்று தெறித்து ஓடுகிறார்கள். ஒருவரும் கேள்வியை எதிர்கொள்ளவே பயப்படுகிறார்கள், திணருகிறார்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பு? இவர்கெல்லாம் அமைச்சர்களாக நமக்கு சேவை செய்து வருகிறார்கள். தமிழகத்தின் காலக்கொடுமை அவர்கள் எல்லாம் அமைச்சர்களாக நமக்கு வாய்த்துள்ளார்கள். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனி ஆளாக பேசிக்கொண்டிருக்கிறார். எங்களைப் பார்த்து துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியுமா என்று கேட்கிறார். குழாய் சண்டை போட துண்டு சீட்டு தேவையில்லை. பைத்தியக்காரன் ரோட்டில் பேசிக்கொண்டு போகிறானே, அவன் என்ன துண்டு சீட்டை வைத்துக்கொண்டா பேசுகிறான். குடிகாரர்களுக்குத் துண்டு சீட்டு தேவையில்லை. ஆனால் மக்களுக்கு சேவை செய்கிற ஒரு பேராசிரியர் துண்டு சீட்டு வைத்துக்கொண்டுதான் பேசுவார். 

 

திட்டமிடுதல் என்பது ஒரு தலைவனுக்கு மிக முக்கியமான பண்பு. அதைத்தான் தலைவர் தொடர்ந்து செய்து வருகிறார். மக்கள் பணியாற்ற நினைப்பவர்கள், அவர்களுக்குக் கூற நினைப்பதை சரியாகச் சொல்ல துண்டு சீட்டு வைத்துதான் பேசுவார்கள். நான் 35 ஆண்டுகாலமாக பட்டிமன்றம் பேசுகிறேன். துண்டு சீட்டு வைத்துக்கொண்டுதான் பேசுகிறேன். எதற்காக என்றால், சரியான முறையில் நாம் நினைப்பதை மக்களுக்குப் புரிய வைப்பதற்காகதான். அதை போலத்தான் தலைவரும் மக்களுக்குச் சரியான முறையில் கருத்துகள் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டமிடலை செய்கிறார். இன்றைக்கு மெரினாவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கின்ற என் தலைவர் தலைஞர், கடைசி மேடை வரை குறிப்பெடுத்துக்கொண்டுதான் மக்கள் முன் உரையாற்றினார். ஏன் அவருக்குக் குறிப்பில்லாமல் பேசத் தெரியாதா? இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேட்கிறார், துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியுமா என்று. அவர் பேசுவதற்கு துண்டு சீட்டு எதுவும் தேவையில்லை. ஏனென்றால் இன்றைக்கு அவர் தரம் தாழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று முதல்வர் பேசுகிறார். இப்படி எல்லாம் ஒரு முதல்வர் பேசுவார்களா? இந்த வார்த்தை ஒருவருக்கு வருகிறது என்றால் அவருக்கு மேட்டர் தீர்ந்து போச்சு என்று அர்த்தம். அவரிடம் பேசுவதற்கு எதுவுமில்லை. அதனால்தான் இத்தகைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்" என்றார்.

 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

“மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” - லியோனி வருத்தம்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
vijayakanth passes away “A great loss to the human community” – Leonie

திரைப்பட நடிகரும், தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான விஜயகாந்த், மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இன்று (28.12.23) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி நம்மிடம் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது; “விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவர், திரைப்பட நடிகர் என்பதையெல்லாம் மீறி நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர். அவரின் மனிதத் தன்மையின் காரணமாகவே, இன்று அரசியல் கட்சியையெல்லாம் தாண்டி அனைவரும் அவரின் மரணத்திற்கு வேதனையுடன் இருக்கிறோம். தன் வீட்டிற்கு தேடி வருபவர்கள் தன் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமல், அவர்கள் சாப்பிட்டார்களா, அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் பிரச்சனை என்ன என்பதை கவனிப்பவர். அவ்வளவு இரக்க குணம் கொண்டவர்.  

vijayakanth passes away “A great loss to the human community” – Leonie

2011ம் ஆண்டு தேர்தலின் போது நான் கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி எனும் ஊரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்த இடத்திற்கு அருகேயே, அவரும் பிரச்சாரத்திற்கு தயாராக வந்துவிட்டார். என் பிரச்சாரத்தின் அருகே தே.மு.தி.க.வின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துவிட்டனர். அப்பொழுது விஜயகாந்த், ‘லியோனி பேசி முடிக்கும் வரை யாரும், எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. அவர் பேசி முடிக்கும் வரை நான் காத்திருக்கிறேன்’ என்று அவரின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். பிறகு நான் பேசி முடித்துவிட்டு செல்லும் வரை காத்திருந்து பிறகு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த நிகழ்வின் போது இருவரும் எங்கள் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டோம். அப்பொழுது, அவர் எனக்கு கை குலுக்கிவிட்டு, ‘வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று தெரிவித்துவிட்டு சென்றார். இப்படியான ஒரு நல்ல எண்ணம் கொண்ட மனிதர் விஜயகாந்த். எனவே, அவரின் இழப்பு என்பது அரசியலுக்கும், திரைத்துறைக்கும் மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” என்று தெரிவித்தார்.