Skip to main content

வருங்காலத்தை காக்குமா இந்த பாட்டில்கள்???

Published on 26/05/2018 | Edited on 26/05/2018

வருங்காலம் நிலம் முழுவதும் பிளாஸ்டிக்கால் சூழப்பட்டு இருக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு ஏற்றது போலவே எங்கும் எதிலும் மனிதர்களின் பயன்பாட்டில் பிளாஸ்டிக் என்ற ஒன்று இன்றிமையாத பொருட்களாக உள்ளது. பிளாஸ்டிக்கை தடை செய்வோம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம் என்று வெவ்வேறு விதமாக அரசாங்கத்தால் பிளாஸ்டிக்கை பற்றின விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. 
 

plastic pollution

 

 

 

பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் துணிப்பைகளை பயன்படுத்துங்கள். முடிந்தவரை பிளாஸ்டிக்கை தவிர்த்துவிடுங்கள் என்று சமூக ஆர்வலர்களால் சொல்லப்பட்டு வந்தது, வருகிறது. இருந்தாலும் உலகளவில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு பல சதவீதங்கள் உயர்ந்திருக்கிறது. தண்ணீர் தாகம் எடுக்கிறதென்றால், கடைகளில் குடிக்க தண்ணீர் வாங்குவீர்கள். அந்த தண்ணீர் அடைக்கப்பட்டிருப்பது பிளாஸ்டிக் பாட்டிலில்தான். பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு என்பது இன்றிமையாத ஒன்றாகவே தற்போது இருக்கிறது.

 

 

இதை யாராலும் தடுக்க இயலாது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் தற்போது சூஸ் 2 என்ற ஒரு நிறுவனம் காகிதத்தால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலை கண்டுபிடித்துள்ளது. பிளாஸ்டிக் வேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள் என்றால், அது மக்காது. அப்படி மக்கினாலும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டால் பிளாஸ்டிக் உலகில் இருக்கும் அனைத்து பகுதியையும் ஆட்கொண்டு நிரம்பிவிடும். பின் நீர் சூழ் உலகானது, பிளாஸ்டிக் சூழ் உலகாக மாறிவிடும்.
 

bottle

 

 

 

சூஸ் 2 வாட்டர் என்ற இந்த பாட்டிலை ஜேம்ஸ் லாங்கிராப்ட் என்ற ஸ்காட்டிஷ் பேராசிரியர் உருவாக்கியுள்ளார். இந்த பாட்டிலை நிலத்தில் போட்டாலும், கடலில் போட்டாலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களிலேயே மக்கிவிடும். பாட்டிலின் வெளித்தோற்றம் தடிமனான காகிதத்திலும், மூடி தகரத்திலும், நீரை காகித பாட்டிலுக்குள் அடைத்து வைக்க 'வாட்டர் ப்ரூப்' அடுக்கும் இதில் சேர்த்துள்ளார். 8 பில்லியன் டன் பிளாஸ்டிக் பாட்டில்களின் குப்பைகள் பெருங்கடலில் கொட்டப்படுகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. இந்த பாட்டில்களை மக்கள் வியாபாரத்துக்கு கொண்டுவரவேண்டும் என்றால், தொழிற்சாலைகளை ஏற்படுத்தி, வணிக சந்தையில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக இதை உருவாக்கியவர் பொது மக்களிடம் நிதி திரட்டிக்கொண்டு இருக்கிறார்...

 

 

 

Next Story

'உயிருக்கும் ரிஸ்க்; நீர் நிலைக்கும் கேடு' - எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் அடிக்டர்ஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Living Risk; Insta-reels that defy water levels

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

காவல்நிலையத்தின் வாயில்களில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியே வருவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட இன்ஸ்டா ரீல் வெளியிடும் இளைஞர்கள் அவ்வப்போது கைதாகும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

ஐஸ்கிரீம் டப்பாவில் சிக்கிய தலை; எலிக்கும் பிளாஸ்டிக் கேடு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
 head stuck in an ice cream can; Plastic is bad for rats

மனிதர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்ற விலங்குகளுக்கும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். குறிப்பாக வனத்துறை பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், கடல் பகுதிகளில் குப்பை கூளமாக தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் பொருட்களால் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புதுச்சேரியில் சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்த ஐஸ்கிரீம் டப்பாவில் தெரியாமல் தலையை மாட்டிக் கொண்ட எலி அவதிப்பட்டதும் அதை அங்கிருந்த காவலர்கள் மீட்டதும் தொடர்பான  வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 head stuck in an ice cream can; Plastic is bad for rats

புதுச்சேரி கடற்கரை சாலையில் எலி ஒன்று தலையில் ஐஸ்கிரீம் டப்பாவில் தலை சிக்கியபடி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லாவகமாக பிடித்து எலியின் தலையில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் ஐஸ்கிரீம் டப்பாவை அகற்றி மீண்டும் விட்டனர். இந்த  காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.