Skip to main content

அதிமுக - பாஜக கூட்டணியில் சிக்கல்!  ரகசியமாக நடக்கும் பாஜக யுக்திகள்! 

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

ddd

 

திமுக கூட்டணியில் சீட் விவகாரத்தால் அதிருப்தியைச் சந்திக்கும் காங்கிரஸ் கட்சியைப் போல, அதிமுக கூட்டணியில் அதே அதிருப்தியைச் சந்தித்து வருகிறது பாஜக! இதனால், அதிமுக - பாஜக கூட்டணி இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே, நாளுக்கு நாள் தங்களின் யுக்தியை மாற்றிக்கொண்டு வருகிறது பாஜக. அந்த வகையில் தற்போதைய யுக்தி, அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறலாமா? என்பதுதான். 

 

இதுகுறித்து பேச்சுவார்த்தையில் நடக்கும் விசயங்களை நம்மிடம் பகிந்துகொண்ட பாஜக மேலிட தொடர்பாளர்கள், “திமுக கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அமித்ஷாவுக்கு கிடைத்துள்ள சர்வேக்களின் ரிப்போர்ட் சொல்கிறது. அதனால், திமுகவின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என அமித்ஷா விரும்புகிறார். 

 

அதற்காக, அதிமுகவுடன் தினகரனின் கட்சியை இணைக்க வேண்டும் என இபிஎஸ் - ஓபிஎஸ்சிடம் பேசினார் அமித்ஷா. எடப்பாடி பழனிசாமி இதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், அதிக சீட்டுகள் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் எடப்பாடி பழனிசாமியிடமும், அதிமுக பேச்சுவார்த்தை குழுவினரிடமும் விவாதித்தார்கள் தமிழக பாஜக தலைவர்கள். 

 

இதில் பல்வேறு  எண்ணிக்கை விபரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஆனால், உடன்பாடு எட்டவில்லை. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில், தனக்கு 35 சீட்டுகள் வேண்டும் என உறுதியாகச் சொன்னது பாஜக. ஆனால், அதிமுக தரப்பில் 22 வரை கொடுக்க முன் வந்துள்ளது. இதனை பாஜக ஏற்கவில்லை. இதனால் தற்போது வரை இழுபறி நீடிக்கிறது. 
                  

 AIADMK

 

மீண்டும் 7ஆம் தேதி அமித்ஷா சென்னைக்கு வருகிறார். அதற்குள் எண்ணிக்கையும், தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் பிடிவாதமாக இருக்கிறது அதிமுக. 

 

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, வேறு ஒரு யுக்தியையும் செயல்படுத்த ஆலோசனை ரகசியமாக நடக்கிறது. அதாவது, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக - தேமுதிக - தினகரனின் அ.ம.மு.க. மற்றும் சமுதாய அமைப்புகளான சில கட்சிகள் ஆகியவற்றை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது.

 

இப்படி பாஜக தலைமையில் கூட்டணி உருவானால், அதிமுக அமைச்சர்கள் பலருக்கும் சட்டரீதியிலான சிக்கல்கள் உருவாகும். சிலர் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேசமயம், பாஜகவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சீட் எண்ணிக்கையும் தொகுதிகளும் கொடுக்க அதிமுக சம்மதித்து, அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டால், தினகரன் கட்சியைத் தேர்தலில் போட்டியிட வைக்காமல் இருக்க தினகரனுக்கு அழுத்தம் தரப்படும். 

 

பாஜகவின் அந்த யோசனையை தினகரன் ஏற்று, தேர்தலை அவர் புறக்கணித்தால், அதற்குப் பிரதிபலனாக, தேர்தல் முடிந்ததும் சசிகலா - தினகரன் தலைமையின் கீழ் அதிமுகவைக் கொண்டு வர பாஜக உதவி செய்யும் என்கிற ஆலோசனையையும் பாஜக மேலிடம் விவாதித்துள்ளது. 

 

அதனால், அதிமுக தலைமையின் முடிவுகளைப் பொறுத்தே இந்த ஆலோசனையில் எதை நடைமுறைப்படுத்துவது என்று ஓரிரு நாளில் பாஜக தலைமை முடிவு செய்யும்” என ரகசியமாக நடந்து வரும் யுக்திகளை விவரிக்கிறார்கள் பாஜக மேலிட தொடர்பாளர்கள்.

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.