Skip to main content

மோடியின் வாக்குறுதியும் மக்களின் துயரமும்! கொண்டாடத்தக்கதா இந்த 8 ஆண்டுகள் ?

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

2014ல் ஆரம்பித்த மோடி ஆழி பேரலை, 2019ல் அலையாகி தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்தியாவின் பிரதமரானார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. இரண்டாம் முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 8ம் ஆண்டு விழாவையும் பாஜகவினர் கொண்டாடினர். ஒவ்வொரு தலைவரும் தங்கள் ஆட்சிக் காலத்தில் தங்கள் பெயர் சரித்திரத்தில் நிற்கும்படி சில காரியங்களை செய்துகொண்டே வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி, சில விஷயங்களை செய்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு 8 மணிக்கு அதுவரை புழக்கத்தில் இருந்த உயர்ந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களான 500 மற்றும் 1000 ஆகியவை செல்லாது என்று அறிவித்தார். அதன்பிறகு புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தினார். அதேபோல், எழிலும் பதைபதைப்பும் நிறைந்த காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370வை அதிரடியாக நீக்கினார். 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

இரண்டிலும் அவர் சொன்ன காரணம் தீவிரவாத ஒழிப்பு பிரதானமானது. மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அவர், “நாட்டில் உள்ள அத்தனை கருப்புப் பணத்தையும் ஒழித்துக் கட்டுவது; கள்ளப்பணத்தை அழிப்பது; டிஜிட்டல் பேமண்ட் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையை வளர்த்தெடுப்பது” என நியாயம் சேர்த்தார். ஆனால், இந்தியப் பிரதமரின் 8ம் ஆண்டு கொண்டாட்ட விழாவிற்கு இணையாக அவரின் நடவடிக்கையின் பிரதிபலிப்புகளும் வெளியாகி அவரின் நோக்கம் நிறைவேறியதா என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளன. 

 

முதலாவது காஷ்மீர் விவகாரம்:

 

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பண்டிட்களான வங்கி அதிகாரி, பள்ளி ஆசிரியையும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களும் ஒரு டி.வி. நடிகையும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370ஐ நீக்கும்போது, ஜம்மூ மற்றும் காஷ்மீர் ஆகியவை சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டமன்றம் அற்ற யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் அப்போது கண்டனங்கள் தெரிவித்தபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இதை விட வேறு வழியில்லை. தேவைப்பட்டால் எதிர்வரும் காலத்தில் அமைதி திரும்பினால் ஜம்மு - காஷ்மீருக்கு சட்டசபை அந்தஸ்து வழங்கப்படும்” என்றார்.

 

மேலும், ராஜ்யசபாவில் பேசிய அமித்ஷா, “இந்த நடவடிக்கையால் ஜம்மு - காஷ்மீர் போர்க்களமாக மாறும் என சில உறுப்பினர்கள் கூறினர். அவ்வாறு நடக்காது; அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கு அங்கு இருந்த 370வது பிரிவு தான் தடையாக இருந்தது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகள் அங்கு இருக்கும் வரை அந்த மாநிலத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது” என்றும் ஊழல் மற்றும் பொருளாதாரம் குறித்தும் பேசினார். 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

காஷ்மீரில் பண்டிட்கள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஒருசார்பாக இருக்கிறது என சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட நிலையில், இப்படம் குறித்து பிரதமர் மோடி, ``பல ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்டிருந்த, மறைக்கப்பட்ட உண்மையை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் காட்டியிருக்கிறது. இது போன்ற படங்கள் மூலம், மக்கள் உண்மையை அறிந்துகொள்வதோடு, கடந்தகாலங்களில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதையும் புரிந்துகொள்கிறார்கள்.

 

பேச்சு சுதந்திரத்துக்காகக் கொடி ஏந்தியவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கடந்த 5-6 நாள்களாகக் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்தப் படத்தைப் புகழ்வதற்கு பதிலாக, இழிவுபடுத்திப் பிரசாரம் செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்! நமது எம்.பி-க்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்!" என நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். 

 

இன்று காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கியதற்கான நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்றால் பெரும் கேள்வியாகவே தொங்கி நிற்கிறது. 

 

இரண்டாவது பணம் மதிப்பிழப்பு:

 

பணம் மதிப்பிழப்பு மூலம், கருப்பு பணம், கள்ள பணம் ஆகியவை ஒழியும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு மக்களின் இன்னல்களுக்கு நியாயம் சேர்க்கப்பட்டது. தற்போது, அதிக மதிப்புடைய ரூ.2000 நோட்டுக்கு சில்லறை கிடைப்பதில் சிக்கல் என்பதன் காரணமாக அதன் புழக்கத்தை அரசு குறைத்துள்ளது. 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதனைக் கண்டு பாஜகவினர் உட்பட நாட்டில் உள்ள பெரும்பாலானோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அந்த அறிக்கையில், “கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 79,669-ஆக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம். அதேபோன்று, ரூ.2,000 கள்ள நோட்டுகளின் புழக்கமும் 54.6 சதவீதம் உயா்ந்து 13,604 என்ற எண்ணிக்கையில் இருந்தது. கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் கள்ளநோட்டுகளின் புழக்கம் குறைந்திருந்த நிலையில் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ஒட்டுமொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையானது 2,08,625-லிருந்து 2,30,971-ஆக அதிகரித்துள்ளது” என்றது.  

 

கள்ளப்பணத்தை ஒழிக்க முன்னெடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தற்போது அதிகம் புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்பிலான பணம் என்பது ரூ. 500 என்றாகிவிட்டது. கள்ள நோட்டு புழக்கமும் முன்பு இருந்தைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 

 

மோடி தலைமையிலான ஆட்சியின் 8 ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் இந்த இரண்டு விவகாரங்களை எதிர்க்கட்சியினர் உட்பட வலது சாரி அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்