Skip to main content

தேசவிரோதிகளுடன் காங். கூட்டணி என்று அமித்ஷா புலம்புவது சரியா?

Published on 21/05/2018 | Edited on 22/05/2018

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசவிரோத சக்திளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அந்தக் கட்சி தோற்றுவிட்டது. கடந்த தேர்தலில் 122 இடங்களில் வெற்றிபெற்ற கட்சி 78 இடங்களைத்தான் பெற்றிருக்கிறது. தோற்ற கட்சி கொண்டாடலாமா? என்றும் கேட்கிறார்.

 

 

 

இதெல்லாம் உண்மையா? கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. அப்படி இருக்கும்போது, தேசவிரோத சக்திகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாக கூறுகிறாரே எப்படி? அந்த சக்தி யாராக இருக்கும்? ஒருவேளை, லிங்காயத்துகளை கூறுகிறாரோ? அவர்கள்தான் இந்துமதத்தில் இருந்து விலக விரும்பினார்கள். அவர்கள் கோரிக்கையை சித்தராமையா அங்கீகரிப்பதாக அறிவித்தார். இந்து மதத்துக்கு விரோதமாக பிரிந்தவர்களை தேசவிரோதி என்கிறாரோ. இந்து மதத்துக்கு விரோதமாக பேசினாலே தேசவிரோதிகள் என்று பேசியே கூறுபோடுவதை எப்போது பாஜக நிறுத்தப்போகிறதோ?
 

amit shah


அடுத்து, 122 இடத்தை வென்ற காங்கிரஸ் 78 இடங்களைத்தான் பெற்றிருக்கிறது இதை எப்படிக் கொண்டாடலாம் என்று கேட்கிறார். அமித்ஷா கூறுவது சரி என்றால், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. 43 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது சட்டமன்ற இடங்களில் 136 தொகுதிகளுக்கு சமம். ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களைப் பெற்று, வெறும் 36 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அதுமட்டுமின்றி 34 தொகுதிகளில் பாஜக டெபாசிட்டை இழந்திருக்கிறது. அதிலும் 12 இடங்களில் வெறும் 5 ஆயிரம் வாக்குகளுக்கு கீழ் பெற்றிருக்கிறது இதைப் போய் பாஜக வெற்றிபெற்றிருப்பதாக அமித்ஷா கூறுகிறார் என்றால் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்.
 

Rahul-Gandhi

 


அதேசமயம், காங்கிரஸ் கட்சி 38 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றாலும் எந்த தொகுதியிலும் அது டெபாசிட்டை இழக்கவில்லை. இதைவைத்தே பெரும்பான்மையாக மக்கள் எந்தக் கட்சியை ஆதரித்திருக்கிறார்கள் என்பதை சிறு குழந்தைகள்கூட புரிந்துகொள்ளும். ஆனால், தோல்வியை திசைமாற்றவும், நீதிமன்றத்தில் வாங்கிய அடிகளால் ஏற்பட்ட அவமானத்தை மறைக்கவுமே அமித்ஷா இப்போது புலம்புகிறார்.

 

பாவம், அவர் புலம்பித்தானே ஆகவேண்டும். 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றுவேறு சொல்லியிருக்கிறார். நிச்சயமாக 2 தொகுதிகள் பாஜகவுக்கு உண்டு என்கிறார்கள் கர்நாடகா மக்கள்.

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.