Skip to main content

தவம் கிடந்த தேமுதிகவை மொட்டையடித்த அதிமுக: மு.ஞானமூர்த்தி

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் செந்துறை (வடக்கு) திமுக ஒன்றியச் செயலாளர் மு.ஞானமூர்த்தி. 


''தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் எந்த கூட்டணியாக இருந்தாலும் தன்னை வைத்துதான் கூட்டணி பேசுவார்கள் என்று இருமாப்பில் இருந்த தேமுதிகவுக்கு இந்த தேர்தல் கூட்டணி பேச்சு நல்ல பாடத்தை கொடுத்திருக்கிறது. 
 

தன்னைத்தான் முதலில் அழைத்து பேசுவார்கள் என்று இருந்த தேமுதிகவை அழைத்து பேசாமல் பாஜகவுடன் பேசி 5 சீட்டும், பாமகவுடன் பேசி 7+1ம் முடித்ததால் கொதித்துப்போன பிரேமலதா பொங்கி எழுந்தார். 

 

vijayakanth-ops-eps 600


''ஜெயலலிதா எங்களோடு கூட்டணி வைத்ததால்தான் முதலமைச்சர் ஆனார். தமிழ் நாட்டில் 3வது பெரியகட்சியான தேமுதிகவை அழைத்து பேசாமல் பாமகவை முதலில் அழைத்து பேசியது எந்த விதத்தில் நியாயம்?'' என பாஜக மந்திரியிடம் சுதீஷ் மூலம் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், ''அவர்களுக்கு கொடுத்த அளவுக்கு எங்களுக்கும் சீட்டு கொடுக்க வேண்டும்'' என்றும் ''அதே மரியாதையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும்'' என்றும் கேட்டிருக்கிறார். 


 

இப்படி பேச்சுவார்த்தை நீளவே மோடி சென்னை வந்த அன்று திமுகவோடும், அதிமுகவோடும் ஒரே நேரத்தில் தேமுதிக பேசியது ஊடகங்கள் மூலம் தெரியவே பாஜகவினர் அதிர்ந்து இப்படி ஒரு கேபலமான கட்சியை இந்தியாவிலேயே நாங்கள் பார்த்தில்லை என கூறிவிட்டு சென்று விட்டனர். 
 

மறுநாள் எப்படியாவது அதிமுகவோடு சேர்ந்து விடவேண்டும் என்ற நோக்கத்தோடு சுதீஷும், பிரேமலதாவும் மாறி மாறி ஊடகங்கள் மூலம் செய்தி கொடுத்து அதிமுகவுடன் இணையும் முயர்ச்சியை கையாண்டனர். அவர்களும் 18 சட்டமன்ற தொகுதியை மனதில் வைத்து தேமுதிகவுடன் கூட்டணியை ஏற்படுத்தி கொண்டனர். 

 

mg-sendurai-dmk


 

நோட்டு மட்டும் எவ்வளவு வேண்டுமாலும் தருகிறோம், சீட்டு மட்டும் கேட்காதீர்கள் என்ற கட்டளையுடன் 7+1 என கேட்டுக்கொண்டிருந்த தேமுதிகவுக்கு 4 தான் அதுவும் நாங்கள் கொடுக்கும் தொகுதிதான் என மொட்டையடித்து முடித்து விட்டார்கள். 
 

பிரேமலதாவோ சீட்டு அதிகம் வாங்கி கட்சிக்காரர்களுக்கு கொடுத்தாலும் பதவிக்கு வந்ததும் நம்ம பேச்ச கேட்காம வேறு இடத்துக்கு ஓடிவிடுகிறார்கள். அதனால் சீட்டைவிட நோட்டுதான் முக்கியம் என்ற நிலைக்கு வந்துவிட்டார். 
 

எனவேதான் நோட்டாவோடு போட்டி போடும் பாஜக 5 தொகுதியை பெற்றார்கள். 10% வாக்குகள் வைத்திருக்கிறோம் என்கிற தேமுதிக 4 தொகுதியை தவம் கிடந்து பெற்றார்கள்''. இவ்வாறு கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.