Skip to main content

இளைஞர்களை அடிமைப்படுத்தும். சீஃப் ரேட் போதைகள்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

விஸ்கி, பிராந்தி போன்ற மதுவகைகள், பிரவுன் சுகர், அபின், ஹெராயின் கேட்டமைன் என்று போதை தரும் பல்வேறு வஸ்துகளில் இவைகள் டாப் 10 ரகம். விலை கூடியது. வசதிபடைத்தவர்களால் மட்டுமே இவைகள் கையாளப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அந்தப் பழக்கம் சமூகத்தில் பல்வேறு மட்டத்திலும் பரவி மக்களைப் அடிமைப்படுத்தியதையும் மறுப்பதற்கில்லை.
 

அங்கே இங்கே பரவித் தொலைத்த இந்த போதை, தற்போது இளைஞர்கள் சிறுவர்கள் மத்தியில் பரவியதோடு போதைக்காக அவர்களை தரை டிக்கெட் வஸ்துகளையும் நாட வைத்திருப்பது தான் அதிரவைக்கும் தகவல். அவைகளை உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே புலப்படுமே தவிர, சாதாரணமாக வெளித் தோன்றுவதில்லை. காரணம், ஒரு குறிப்பிட்ட வஸ்துக்கள் அன்றாடப் புழக்கத்திற்குப் பயன்படுபவைகளே என்று?. இயல்பான சிந்தனைக்கு வருமே தவிர, அதன் மறைமுகப் பயன்பாடுகளின் செயல் என்ன?. என்பதை அறிகிற நிலைக்கு நம்மைக் கொண்டு வருவதில்லை அது தான் விழிகளை விரியவைக்கிற சங்கதி. இதன் பயன்பாடு போதைக்காக இளைஞர்களை வசப்படுத்தியுள்ளது. இது போன்ற பழக்கங்கள் நெல்லையின் பள்ளி கல்லூரிகளின் மாணவர்கள், இளைஞர்கள், அன்றாடம் வேலை செய்து அலுத்துப் போகிறவர்களின் உடல் அசதிக்கான நிவாரணியாகவும் அதே சமயம் போதைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிற வேதனையைப் பகிர்கின்றனர் நெல்லையின் சமூக ஆர்வலர்கள் சிலர். ஆனால் அவைகளின் பக்க விளைவுகளையும் பாதிப்புகளையும் அவர்கள் உணர்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.


 

Adulthood young people. Seaf rat teachings!


 

போதையின் உச்சமாக மாணவர்களும் சிறுவர்களும், சீப் ரேட் பொருட்களையே நாடிக் செல்கின்றனர். சாதாரணமாக உள்ளூர் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கிற நைட்ரா வெட், வேலியம் 5 மில்லிகிராம், அட்டிவன் ஒன்று மற்றும் 2 மில்லி கிராம் என்று மாத்திரை ஒன்று நான்கே ரூபாய்க்குக் கிடைக்கிற மாத்திரைகள். காயம், ஆபரேஷன், பிரசவலி போன்றவைகளால் அவதிப்படுகிற நோயளிகளுக்கு டாக்டர்கள் மட்டுமே தருகிற அல்லது அவர்களால் பிரிஸ்க்ரைப் செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே தரப்பட வேண்டும். அந்த மாத்திரைகளைச் சொல்லப்படுகிற அளவு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நோயால் அவதிப்படுபவர்களின் வலியை குறைப்பதற்காக அவர்களை ஒரு விதமான உறக்கத்தில் வைக்கிற தன்மையைக் கொண்டது அந்த மாத்திரைகள்.

 

Adulthood young people. Seaf rat teachings!


 

ஆனால் அது போன்ற மாத்திரைகள் மெடிக்கல் ஷாப்களில் தாராளமாகக் கிடைப்பதால் இளைஞர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளைப் போதைக்காக உட்கொள்கிறார்கள். அதிக டோஸ் உடலில் ஏறும் போது உறக்கத்தையும், கிறக்கத்தன்மையை பல மணி நேரம் கொடுப்பதால் பலர் அந்த சுகத்திற்காகவே பயன்படுத்தி அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். மட்டுமல்ல, பஜாரில் சொற்ப விலைக்குக் கிடைக்கிற பேப்பரில் எழுதியவைகளை அழிக்கப் பயன்படுகிற, ’ஒயிட்னர்’ ஒரு விதமான வார்னிஷ் கலந்த மணம் கிளப்பும், பஞ்சர் ஒட்டப்பயன்படுகிற சொல்யூசன் போன்றவைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தண்ணீர் சேர்த்துக், கசக்கியும், மூக்கில் மற்றும் வாயில் வைத்து வட நாட்டினர் பயன்படுத்துகிற ஹூக்கா போன்று இழுத்துச் சுவாசிப்பதால் ஒரு வகையான போதை ஏற்பட்டு பறப்பதைப் போன்று உணர்வு உண்டாகும் இப்படி போதைக்காக பலர் இது போன்ற சீப்ரேட் வஸ்துக்களைப் பயன்படுத்துவது வெளியே தெரியாமல் நெல்லைப் பகுதியில் அதிகரித்து வருகிறது.


 

Adulthood young people. Seaf rat teachings!


 

மதுவை விடக் கஞ்சாவில் போதை அதிகம் என்பதால் அது புரோக்கர்கள் மூலமாகப் பொட்டலம் ஒன்று இருபது, முப்பது ரூபாய்க்கும் விற்கப்படுவது தொழிலாகவே மாறிவிட்டது. இந்த போதைக்கு வயது வித்தியாசமில்லாமல் பலர் அடிமையாகியுள்ளனர். தேனி மாவட்டத்தின் மேகமலை, வெள்ளிமலை கோரையூத்துப் பகுதிகளில் விளைகிற இவைகள் தென் மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்றன.
 

இது போன்ற போதைக்கு அடிமையானவர்கள் திசைமாறி குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பாளையில் போதைக் கும்பல் ஒன்று இது போன்ற சீப் ரேட் போதைக்கு இளைஞர்களை அடிமையாக்கித் தங்களின் வலைக்குள் கொண்டு வந்தததையறிந்த பாளை உதவி கமிசனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை அந்தப் போதைக் கும்பலின் சில இளைஞர்களைப் பிடித்து சிறையிலும் அடைத்திருக்கிறார். இதனால் சிலர் தலைமறைவாகி விட்டனர். பெருமாள்புரம் பகுதியில் சில பெண்களே இது போன்றவைகளை ஊக்கப்படுத்துவதாகக் கிடைத்த தகவலால் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றன.
 

Adulthood young people. Seaf rat teachings!



 

நாங்களும் முடிந்தவரை போதை இளைஞர்களைப் பிடித்தும், அவர்களுக்கு அறிவுரை சொல்லி எச்சரித்தும் வருகிறோம் ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் அது வேர் விடுகிறது என்கிறார்கள் போதைத் தடுப்புப் போலீசார்.
 

வலி நிவாரணி, மாத்திரைகளையும் சொல்யூசன், ஒயிட்னர் போன்ற கெமிக்கல்களையும் பயன்படுத்தினால் போதையுடன் கூடிய கிறக்கத் தன்மை வரும் அவைகளை அதற்காகப் பயன்படுத்தக் கூடாது தொடர்ந்து பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோயும் உண்டாகும் என்று எச்சரிக்கிறார்கள். மருத்துவர்கள். ஆனால் விளைவை உணராமல் போதைக்காக தென் மாவட்டத்தில் தலைதூக்கியிருக்கும் இந்தச் சீப் ரேட் பழக்கம் ஆபத்தனாது. ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். வளர்ந்தால், வரலாறு மன்னிக்காது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு; உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Case against Nayanar Nagendran; Trial in the High Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் 7 நாள்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் இருந்து போட்டியிட தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நாளை (18.04.2024) விசாரிக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Case against Nayinar Nagendran High Court action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத,  தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ வாக்குப்பதிவைத் தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.