Skip to main content

கால்நடைப்பண்ணை.. கலப்பு பயிர்.. தன்னிறைவுப் பொருளாதாரம்.. சாதித்துக்காட்டிய விவசாயி (அரசியல்வாதி)! 

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

ddd

 

"வெத நெல்லுக்கு, உரத்துக்கென வாங்கின கடனுக்கே மாடு மாதிரி உழச்சு, அறுவடை முடிஞ்சு கணக்குப் பார்த்தால் ஒன்னும் மிஞ்சாது." இதுதான் இன்றைய உழவனின் நிலைமை. ஆனால், "கால்நடைகள் மற்றும் கலப்புப் பயிர்களைக் கொண்டு வெவசாயம் பார்த்தால், நாமதான் ராசாங்க" என கணக்கு சொல்கிறார் அரசியல்வாதி கம் விவசாயியான விளாத்திக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வானம் பார்த்த கரிசல் மண் பூமியான விளாத்திக்குளத்தில், கால்நடைப்பண்ணையுடன் கலப்புப் பயிர் இணைந்த அம்பாள் கோசாலையில் இருக்கிறது தற்சார்பு பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற அந்த ஒருங்கிணைந்த பண்ணை. தேசியக் கொடிக்கம்பத்துடன் வரவேற்கும் அந்தக் கோசாலை, 60க்கு 30 அடி என்கின்ற அளவிலே இரண்டு பக்கமாக பிரிக்கப்பட்டு சுத்தம், சுகாதாரம் பேணப்பட்டிருக்க, வட நாட்டின் பாரம்பரிய இனங்களுடன் உள்ளூர் நாட்டுமாடுகளும் வரிசைக்கட்டி வரவேற்கின்றன. சரிவிகித உணவு, பண்ணையிலேயே விளையும் பயிர்கள் மற்றும் ஆரோக்கிய அக்கறை காட்டப்படும் கால்நடைகளிடமிருந்து கிடைக்கப்பெறும் பால், நெய், சாணம் மற்றும் கோமியம் என்பதனைத் தவிர, மதிப்புக்கூட்டப்படும் பொருட்களாக ஏறக்குறைய 56 இருக்கிறதென பட்டியலிடுகிறது நாக்பூர், கோ விஞ்ஞான் அணுசேந்தரா கேந்திரம் ஆராய்ச்சி நிலையம்.

ddd

 

அம்பாள் கோசாலையோ தன்னிடமுள்ள 50க்கும் அதிகமான மாடுகளைக் கொண்டு பெறப்படும் பால், தங்களது தேவைக்குப் போக, மீதமுள்ள பாலை உற்றார் உறவினர்களுக்கு வழங்கி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் சாணம் மற்றும் கோமியம் போன்றவை நேரடியாக உள்ளீடு தொட்டி, வெளியேற்றும் தொட்டி, நொதிக்கும் தொட்டி ஆகிய படிநிலைகளைக் கடந்து வாயு சேகரிக்கும் கலனிற்கு செல்கிறது. மீதமுள்ள கழிவுகள் உழவுக்குத் தேவையான உயிர் உரங்களாக மாறி வயல்வெளியைச் சீரமைக்கின்றது. இந்தப் பகுதிக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் வேளாண் சீர்திருத்தவாதியான குமரப்பாவின் பெயர். இந்த மாடுகளின் மூலம் பெறப்படும் கழிவின் மூலம் 200 ஏக்கர் நிலத்திற்குத் தேவையான இயற்கை உரமும், ஆண்டு முழுவதிற்கும் தேவையான எரிவாயுவும், தினசரி 15 கிலோ வாட் மின்சாரமும் கிடைப்பதுதான் சாதனையே.! வருமானத்திற்கும், தன்னிறைவிற்கும் குறைவில்லாத மாட்டுப்பண்ணையைத் தாண்டி சென்றால் ஆட்டுப்பண்ணையும், அதனருகிலேயே மீன்குட்டையும் உள்ளது. தங்களுடைய தேவை போக பண்ணைக்கு வருமானம் ஈட்டித்தரும் காரணிகளில் ஒன்றாக இவை திகழ்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

 

ddd

 

இதனைக் கடந்து சென்றால் ஓங்கி வளர்ந்த பனை மரங்கள். பாதுகாப்பாய் வேலியாகவும், உற்பத்தி ஊக்கியாகவும் வளர்ந்திருக்க, அதனின் எதிர்ப்புறத்தில் கீரை, கத்திரி, வெண்டைச்செடிகள் இருக்க, மறுபக்கம் நிறுத்தப்பட்ட தூண்களில் பீர்க்கங்காயும், புடலங்காயும் காய்த்துத் தொங்குகின்றன. சொட்டு நீர் பாசனத்தில் முறையாக வளர்க்கப்பட்ட அந்தச் செடிகளைக் கடந்து சென்றால் அகத்தி செடிகளுடன், ஆங்காங்கே கால் நடைகளுக்கென புற்கள் வளர்க்கப்பட்டிருக்க, வேலி அமைக்கப்பட்ட குளத்தில் சைவம் மட்டும் சாப்பிடும் தாரா வகை வாத்துக்களுடன், புழு, பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் நாட்டு வாத்துக்களும் கொஞ்சி விளையாடுகின்றன.

 

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெற்றிபெற்ற அரசியல்வாதி கம் விவசாயியான விளாத்திக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ.மார்க்கண்டேயனோ, "ஒரு விவசாயிக்கு வருமானம் என்பதனைக் காட்டிலும் யாரிடமும் கையேந்தாமல் இருப்பதே மிகப்பெரிய வருமானம். உண்மையைக் கூற வேண்டுமானால், விவசாயம் என்பது நஷ்டம் கொடுக்கும் தொழிலே கிடையாது. அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டதால எதையுமே வீணாக்கிறதில்லை. கால்நடை மற்றும் உயிரினங்களைப் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்த உதவும் அதே வேளை பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவும். அப்புறம் என்ன விவசாயம் லாபம் கொழிக்கும் தொழில் தானே.?" என நம்பிக்கை விதைக்கிறார் அவர்.

 

‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்..?’ என்பதற்கு உதாரணமாகிறது மார்க்கண்டேயனின் வெற்றி!

 

Next Story

அதிமுக மாஜி எம்.எல்.ஏவின் சகோதரி வீட்டிலும் ரெய்டு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
 AIADMK ex-MLA's sister's house also raided

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று முன்தினம் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 என தெரியவந்தது.

 AIADMK ex-MLA's sister's house also raided

இந்நிலையில், இன்று காலை முதல் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தியாகதுருகத்தில் உள்ள பிரபு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வின் வீட்டில் நடைபெறும் சோதனையின் தொடர்ச்சியாக விழுப்புரத்தில் உள்ள பிரபுவின் சகோதரி வசந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. பிற்பகலுக்கு பின்னர் சோதனையின் முடிவு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

ரெய்டில் சிக்கிய மற்றொரு மாஜி எம்.எல்.ஏ; 7 இடங்களில் சோதனை

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
nn

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று முன்தினம் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 என தெரியவந்தது.

Anti-corruption department raids the house of another AIADMK former MLA

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.