Skip to main content

அர்ச்சக பயிற்சி மாணவர்களின் 15 ஆண்டுக்கால போராட்டம்; சமூகநீதி பயணத்தில் புரட்சி..!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

15 years of struggle of priestly training students; Revolution in the journey of social justice ..!

 

2006ல் தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞரால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில், பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகங்களில் சைவ முறை பள்ளிகளும், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகத்தில் வைணவ முறைப்படி அர்ச்சக பள்ளிகளும் தொடங்கப்பட்டன.

 

இந்த 6 பள்ளிகளில் 210 இளைஞர்கள் ஆர்வமாக சேர்ந்தனர். அவர்களுக்கு, ஆகம விதிகளின்படி பூஜை செய்வது, வேதமந்திரம் ஓதுவது போன்றவற்றை தமிழ், சமஸ்கிருதம் என்ற இரண்டு மொழியில் பாடம் நடத்தப்பட்டது. திருக்குறள், சிவபுராணம், சைவ சமயத்தின் அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள் பன்னிரு திருமுறைகள், 63 நாயன்மார் வரலாறு, தமிழ் இலக்கணங்கள், திருக்கோயில் பூஜை முறைகள் ஜோதிடம், சிறப்பு நாட்கள் (திதி, அம்மாவசை, கிருத்திகை, பிரதோசம்) பஞ்சாங்கம் என அனைத்தும் கற்று தரப்பட்டது. கருவறைக்குள் சென்று பூஜை செய்ய தீட்சை தரப்பட்டது. கற்றதை அறிய எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு நடந்தது. அதில் 206 பேர் தேர்ச்சி பெற்றனர்.

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்குவது தவறு எனச்சொல்லி மதுரை ஆதிசிவாச்சாரியர்கள் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலம் நிலுவையில் இருந்தது அந்த வழக்கு. அந்த வழக்கில் அர்ச்சக பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் இணைந்துகொண்டது. சுமார் 8 ஆண்டுகள் உச்சநீதிமன்றத்தில் பலமுறை மனுக்களை போட்டு அந்த வழக்கை எடுக்கவைத்தது. இதற்கான நீண்ட நெடிய போராட்டத்தை அர்ச்சகர் மாணவர் சங்கம் நடத்தியது.

 

2015ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற அரசாணையை, சட்டத்தை ரத்து செய்யவில்லை. எந்தெந்த கோயில்களில் என்ன மாதிரியான ஆகம விதிகளை கடைப்பிடிக்கிறார்களோ அதன்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றது. ஆனாலும் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

அதன்பின் மீண்டும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்திகொண்டுவந்தது. அர்ச்சகர் பதவிகளில் தகுதியோடு உள்ள எங்களையும் நியமனம் செய்யுங்கள் என்றுத்தான் கேட்கிறோம். நிச்சயம் வேலை கிடைக்கும் என நம்பித்தான் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தோம். அனைத்து தகுதிகளும் உள்ள எங்களுக்கு அரசாங்கம் பணி வழங்காமல் உள்ளது நியாயமா எனக் கேள்வி எழுப்பினர்.

 

15 years of struggle of priestly training students; Revolution in the journey of social justice ..!

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களை கண்டுக்கொள்ளவில்லை.

 

திடீரென 2018ஆம் ஆண்டு மதுரை புதூர் அய்யப்பன் கோயிலில் மாரிச்சாமி என்கிற அர்ச்சக பயிற்சி முடித்த மாணவரை அறநிலையத்துறை, அர்ச்சகராக நியமித்தது அப்போதைய எடப்பாடி தலைமையிலான அரசு. அதன்பின் இரண்டு ஆண்டுகள் நியமனங்களே இல்லை. மீண்டும் போராடிக்கொண்டு இருந்தார்கள் மாணவர்கள்.

 

கேரளாவில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை அர்ச்சகராக கோயில் பணியில் நியமித்ததும் நாங்களும் அனைத்து சாதிக்கும் சமமானவர்கள் என்பதைக்காட்ட 2020ஆம் ஆண்டு மதுரை நாகமலை பிள்ளயைார் கோயிலில் தியாகராஜன் என்பவர் பணி நியமனம் செய்தது அதிமுக அரசாங்கம். அதன்பின் மீண்டும் குறட்டைவிட தொடங்கியது.

 

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளநிலையில் 204 அர்ச்சக பயிற்சி முடித்த மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்காமல் இருப்பது நியாயமா என பலதரப்பில் இருந்தும் கேள்விகள் எழுப்பினர்.

 

2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுக தனது பிரச்சாரத்தில் அர்ச்சகர் பயிற்சி முடித்த அனைத்து சாதிப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கியதுப்போல் விளம்பரம் செய்தது. இது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன் இதனை கடுமையாக எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.

 

15 years of struggle of priestly training students; Revolution in the journey of social justice ..!

 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்படுவார்கள் என்றார் அப்போதைய திமுக தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தது, திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்து 100வது நாளன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டப்படி படித்து, பயிற்சிப்பெற்ற 206 மாணவர்களில் முதல்கட்டமாக 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.

 

சுமார் 15 ஆண்டுக்கால போராட்டத்துக்கு பின் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினால் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத்தின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

 

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகின்றனர். இது தமிழ்நாட்டில் சமூகநீதி பயணத்தில் பெரிய மைல்கல்.

 

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.