மன்னார்குடிக்கு ஏன் வந்தார் ராஜ்நாத்சிங் பி.ஏ.? -மரண சர்ச்சை!
இவ்விதழின் கட்டுரைகள்
சென்றவார இதழ்கள்
Next Story
மன்னார்குடியில் லீக்வானுக்கு நினைவகம்; காரணம் ஏன் தெரியுமா?
சிங்கப்பூர் பிரதமர் லீக்வானுக்கு நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கிருந்த சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், ''கடல் கடந்து சிங்கப்பூர் வந்தது போன்ற உணர்வே இல்லை. தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன். ஓய்வு பெற்ற ஐ .ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய 'ஒரு பண்பாட்டின் பயணம்' என்ற நூலை அண்மையில் வெளியிட்டேன். தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் நாம் எத்தகைய பெருமையை அடைய வேண்டும் என்பதற்கு அடிப்படையான நூல். அதில் சிந்து பண்பாடு என்பது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி. வாழ்ந்த மக்கள் சங்க கால தமிழர்களின் மூதாதையர் என்பதை நிறுவி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்வானுக்கு நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்திருக்கிறோம். இது தமிழ்நாட்டின் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பப்பாச்சிகோட்டை, திருமகோட்டை, உள்ளிக்கோட்டை, மேல திருப்பலாங்குடி, கீழ திருப்பலாங்குடி, ஆலங்கோட்டை, நெடுவாக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் சிங்கப்பூருக்கும் தொடர்பு உண்டு என்பதை நான் அறிவேன். இந்த கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். எனவே லீக்வானின் பெயரில் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்பதை மகிழ்ச்சியோடு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
Next Story
"ஓபிஎஸ்ஸின் நிலை பரிதாபத்துக்குரியது" - முன்னாள் அமைச்சர் காமராஜ் பதிலடி
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணியினர் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தர்மபுரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது டிடிவி தினகரன் வீட்டில் காமராஜ் வேலை செய்தவர். எங்களை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என பேசி இருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நேற்று மன்னார்குடியில் வைத்தியலிங்கத்தின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "வைத்திலிங்கத்துடன் இருந்தவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து விட்டனர். கடந்த சில தினங்களாக வைத்திலிங்கம் அருவருக்கத்தக்க வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகிறார். அவர் தன்னிலை மறந்து பேசக்கூடாது. நான் எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக் கூடிய தெம்பு உள்ளவன். வைத்திலிங்கம் வரும் தேர்தலில் எந்த தொகுதியில் எந்த சின்னத்தில் நிற்பார். அரசியலில் அனாதையாகிவிட்ட வைத்தியலிங்கம் என்ற கல்லை கழுத்தில் கட்டிக்கொண்டு கடலில் இறங்கிய ஓபிஎஸ்சின் நிலை பரிதாபத்துக்குரியது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வைத்தியலிங்கம் தோல்வியடைந்த பின்னர், சசிகலா குடும்பம் தான் தன்னை தோற்கடித்ததாக ஜெயலலிதாவிடம் கூறி ராஜ்யசபா உறுப்பினரானவர் தான் வைத்திலிங்கம். வேலைக்காரி எப்படி மகாராணி ஆக முடியும் என கேட்ட வைத்தியலிங்கம் தான் தற்போது சசிகலா, டிடிவி தினகரனுடன் ஒன்றிணைந்து விட்டோம் என கூறுவது பச்சை பச்சோந்தி தன அரசியலாகும்" என பதிலடி கொடுத்துள்ளார்.