""பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திருநாவுக்கரசு பண்ணை வீட்டுக்குள் அந்த வி.ஐ.பி மகன் போனது உண்மைதான். எனது மகன் மணிவண்ணனும் போனதும் உண்மைதான்'' -இறப்பதற்கு முன் நக்கீரனிடம் வாக்கு மூலம் அளித்தவர் சிவசுப்பிரமணியன். அவர் சொன்னதன் அடிப்படையிலான புகைப்படங்கள் திடீரென வெளியாயின.
பல பெண்களோடு பலவித போஸ் களில் இருந்தான், ஐந்தாவது குற்ற வாளியான மணிவண்ணன். அவனை எப்படியும் சிறையில் இருந்து மீட்டுவிட வேண்டும் என்று துடியாய் துடித்தவர்களில் ஒருவர்தான் மணிவண்ணனின் வளர்ப்புத் தந்தையான சிவசுப்பிர மணியன்.
அவர் ஏற்கனவே நக்கீரனிடம் சில உண்மைகளை மனம் திறந்து பேசியிருந்தார். அவற்றை அப்போதே பதிவு செய்திருந்தோம். அதில்... பொள்ளாச்சியில் சி.பி.ஐ களமிறங்கி முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ரெய்டு நடத்தியது. சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் இரண்டு எஸ்.ஐ.க்கள், உள்ளூர் போலீஸ் எஸ்.ஐ சந்திரன், வி.ஏ.ஓ. சம்பத்குமார் ஆகியோர் அடங்கிய அந்த டீம்... திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சோதனையிட்டது.
பண்ணை வீட்டின் அருகி லுள்ள வீடுகளில் உள்ளவர்களிடம், பண்ணை வீட்டுக்கு பெண்கள் அழைத்து வரப்பட்டார்களா எனக் கேட்டபோது, ""நாங்க எல்லாரும் வேலைக்கு போயிட்டு சாயந் தரம்தான் வருவோம். ஆனா நைட்டுல அடிக்கடி இங்க கார்கள் வந்து போகும்'' என சொன்னவர் களின் போன் நம்பரை எல்லாம் வாங்கி விட்டு போயிருக்கிறது சி.பி.ஐ.
ஒரு பக்கம் சி.பி.ஐ ரெய்டு நடத்திக் கொண்டிருக்க, ""பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் எனது மகன் மணிவண்ணன் சி.பி.சி.ஐ.டி.யிடம் சரண்டர் ஆனான். ஆனால், அவன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்தது விசாரணையை மேற்கொண்ட சி.பி.ஐ. அவனுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை. சரண்டரான என் மகனை 10 நாட்கள் கஸ்டடி எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் கேட்டனர். திருநாவுக்கரசுக்கு 3 நாட்கள்தான் கஸ்டடி. ஆனால் மணி வண்ணனை 10 நாட்கள் கஸ்டடியில் எடுத்து, நாங்க சொல்றதைக் கேளு. இந்த வழக்குல உன்னையும் சேர்க்கப் போறோம். நீங்க மட்டும்தான் இந்த பொண்ணுக விசயத்துல சம்பந்தப்பட்டு இருக்கறீங்கன்னு யார் கேட்டாலும் சொல்லணும். இந்த பாலியல் வழக்குல நீயும் சம்பந்தப்பட்டு இருக்கறேன்னு எழுதி இருக்கோம். கையெழுத்து போடுன்னு அடி அடி...ன்னு அடிச்சு இருக்கறாங்க, அடி வாங்கியும் ஒத்துக்காத மணிவண்ணனிடம், போடறா கையெழுத்துன்னு மெரட்டி என் பையன் கிட்ட கையெழுத்து வாங்கி இருக்கறாங்க.
மணிவண்ணனுக்கும் சபரிராஜன், திருநாவுக்கரசுவுக்கும் என்ன சம்பந்தம்னா, இந்த திருநாவுக்கரசு அந்த பண்ணை வீட்டுல பொம்பளை புள்ளைகளை வச்சு பெரிய பெரிய ஆளுகளை கூட்டி வந்து விபச்சாரம் பண்ணி சம்பாதிச்சுட்டு இருந்திருக்கான். அப்படி ஒரு நாள் என் பையன் மணி வண்ணன்கிட்ட திருநாவுக்கரசு, 25,000 ரூபாய் கொண்டு வா... அழகான பொண்ணுக இருக்கு எனச் சொல்லி இருக்கிறான். அப்படித்தான் திருநாவுக்கரசுகூட பழக்கமாயிருக்கிறான். சபரிராஜன், வசந்தகுமார்கூட தங்களுடைய வாக்கு மூலத்தில் மணிவண்ணனை தெரியாதுன்னு தான் சொல்லியிருக்காங்க .
எப்படியோ 25 ஆயிரம் ரூபாய் ரெடி பண்ணி கொண்டு போய் திருநாவுக்கரசுகிட்ட கொடுத்துட்டு ஒரு பொண்ணு கூட இருந்துட்டு வந்து இருக்கான் மணிவண்ணன் . அதற்கப்புறம் நெறைய பெண்கள்கூட இருந்திருக்கான். வெளியேயும் அழைச்சுட்டு போயிருக்கான்.
மணிவண்ணன் தன் நண்பனோட வீட்டுக்கு தினமும் போயிட்டு வந்துட்டு இருக்கும் போது... பக்கத்து வீட்ல இருக்கற ஒரு கல்யாணமான பொண்ணு அவனப் பார்த்து மயங்கி இருக்கு. மகளிர் குழுவுக்கு 1000 ரூபாய் பணம் கட்டணும்னு உடலை பேரம் பேசியிருக்கு. பணத்துக்காக மட்டும் இல்லைன்னு தன்னோட விருப்பத்தையும் சொல்லியிருக்கு. அப்பத்தான் திருநாவுக்கரசுக்கு போன் பண்ணி, ஒரு பெண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன். கொஞ்சம் இடம் கிடைக்குமா? எனக் கேட்டிருக்கிறான் மணிவண்ணன். திருநாவுக்கரசும் சம்மதிச்சிருக்கான்.
வீட்டு சாவியை கொடுத்து விட்டு... நீங்க மெதுவா கூப்புடுங்க... நான் ஒயின் ஷாப்புல இருக்கறேன்...னு சொல்லிட்டு போனானாம் திருநாவுக்கரசு. அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணு கூட இருந்திருக்கான் மணி. ஆனா திருநாவுக்கரசு ஒயின் ஷாப்புக்கு போகாம சுவத்து ஓட்டை வழியா அதை வீடியோ எடுத்து இருக்கான். அதுக்கப்புறம் மணிவண்ணன் கிட்ட.... நானும் அந்தப் பொண்ணை உபயோகப் படுத்திக்கிட்டுமா எனக் கேட்டிருக்கிறான்.
அது அப்படிப்பட்ட பொண்ணு இல்லை, விரும்புனா பார்த்துக்கன்னு திருநாவுக்கரசுகிட்ட மணி வண்ணன் சொல்ல, அந்தப் பொண்ணோ... நான் விபச்சாரம் பண்ணலைன்னு சொல்ல, மணி உடனே... அந்தப் பொண்ணை காரில் ஏத்தி இருக்கான். கோபமான திருநாவுக்கரசு.. மணிவண் ணன்கிட்ட... இருடா இங்கிருந்து போக முடியாது. என் பிரண்ட்ஸ் சதீசையும், சபரியையும் வரச் சொல்லி இருக்கேன். இவள அனு பவிக்காம விட மாட்டோம்னு சொல்லிய போதுதான் சுதாரித்துக் கொண்ட மணிவண்ணன்... திருநாவுக்கரசை தள்ளி விட்டு விட்டு...காரை எடுத்துக் கொண்டு வேகமாய் வந்து விட்டான்.
பிறகு பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் அந்தப் பொண்ணை இறக்கி விட்டு விட்டு... 2000 ரூபாயை கொடுத்து விட்டு வந்து விட்டானாம். அதற்குப் பிறகு திருநாவுக்கரசு போனை இவன் அட்டன் பண்ணவே இல்லையாம். இவனுகள அரெஸ்ட் பண்ணும்போதுதான்... மணிவண்ணனும், அந்தப் பொண்ணும் இருக்கிற வீடியோவை வைத்தே மணிவண்ணனை அரெஸ்ட் பண்ணி இருக்கிறார்கள்.
இந்த மாதிரி மணிவண்ணன் மட்டு மில்லை... பொள்ளாச்சி வி.ஐ.பி மகனும் அடிக்கடி அந்த பண்ணை வீட்டுக்கு பொண்ணுக கூட போயிட்டு வந்திருக்கான். அது உண்மைதான். அடிச்சு, வீடியோ எடுத்து துன்புறுத்திதான் பொண்ணுகளை சப்ளை பண்றாங்கன்னு மணிவண்ணனுக்கு தெரியாது. இதுல அரசியல் இருக்கு. இல்லைன்னா எதுக்கு நீங்க மட்டும்தான் இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்குல சம்பந்தப்பட்டு இருக்கீங்கன்னு கையெழுத்து போடுன்னு சி.பி.சி.ஐ.டி மணிவண்ணனை மெரட்டணும்?
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அரசியல் வாதிகளின் வாரிசுகள் சேர்க்காமல் இருக்கவே சி.பி.சி.ஐ.டி மணிவண்ணன் மீது பொய் வழக்கு போட்டது.
இப்போது சி.பி.ஐ.யும் அதை வழி மொழிந்திருக்கிறது. சி.பி.ஐ நேர்மையாக இந்த வழக்கை விசாரிக்கும் என்று நம்புகிறேன் .அப்படி நேர்மையாக விசாரிக்கும் பட்சத்தில் மணிவண்ணன் இந்த வழக்கில் இருந்து விடுபடுவான். அந்த நாளை எதிர்பார்த்துதான் காத்து இருக்கிறேன் என்று சொல்லியிருந்தார் வருத்தமாய்.
அதோடு... ""நிறைய உண்மைகளை வெளிக் கொண்டுவரும் நக்கீரனுக்கு நானும் உறுதுணையாய் இருப்பேன்...'' என சொல்லியவர்... திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்துவிட்டார் சிவசுப்பிரமணி. பொள்ளாச்சி விவகாரத்தின் மறைக்கப்படும் பக்கங்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது நக்கீரன்.
-அ.அருள்குமார்
______________
எதிர்க்கட்சியினரை வேட்டையாடும் போலீஸ்!
பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் மகன்கள் பெண்கள் விசயத்தில் மிகவும் மோசமானவர்கள் என தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென் றல் செல்வராஜின் மகன் மணிமாற னோடு கூடவே இருக்கும் நாகராஜ் பேஸ்புக்கில் பதிவிட, கடந்த 16ந் தேதி அதிகாலை நாகராஜை அள்ளிக் கொண்டு போயிருக்கிறது பொள்ளாச்சி போலீஸ். இதையறிந்த மணிமாறன் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடத்திற்குப் போய்விட்டாராம். சி.பி.ஐ.யால் லேட்டஸ்ட்டாக கைது செய்யப்பட்டிருக்கும் அருளானந்தம் அன் குரூப் பொள்ளாச்சி டூ பாலக்காடு ரோட்டில் உள்ள மஹால் திருமண மண்டபத்தில்தான் கூடுவார்களாம். அந்த மண்டபத்தில் மது மாது என சகலமும் கிடைக்க, அருளானந் தத்திற்கு அதற்கு பிறகுதான் அருள் வருமாம்.