திருவாரூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளில் நன்னிலம் மட்டுமே தற்போது அ.தி.மு.க. வசம். "இம்முறை நன்னிலத்தையும் தி.மு.க. வசமாக்குவோம்' என்று அ.தி.மு.க.வோடு களத்தில் நேருக்கு நேராக இறங்கி யுள்ளது உதயசூரியன்.

அ.தி.மு.க.வில் சிட்டிங் உணவுத்துறை அமைச்சர் மா.செ. காமராஜ் மூன்றாவது முறையாக களத்தில். அவரை எதிர்த்து தி.மு.க. மா.செ. பூண்டி கலைவாணன் போட்டியிடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி முழுக்க இருந்தநிலையில்... குடவாசல் ஒன்றியச் செயலாளர் ஜோதி ராமனைக் களம் இறக்கியுள்ளது தி.மு.க.

ministerkamaraj

பூண்டி கலைவாணன் என்ற கலக்கத்திலிருந்த அமைச்சர் காமராஜ் ஜோதிராமன்தான் நன்னிலம் வேட்பாளர் என்றவுடன் நிம்மதியடைந்து சென்னையில் இருந்தபடியே தொகுதி முழுக்க சில நுண்ணிய மாற்றங்கள் நடத்த தனது தளபதிகளை ஏவி விட்டுள்ளார். ஓட்டுக்குப் பணம் கொடுக்க கணக்கெடுப்பு வேலையை ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்.

Advertisment

ssபட்டியல் இனத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இத்தொகுதியில் முறையே வெள்ளாளர், கள்ளர், வன்னியர்கள், இஸ்லாமியர்கள் என கணிசமான ஓட்டு வங்கியும் உண்டு. எல்லாப் பக்கமும் இரு கழகங்களும் கவனம் செலுத்துகின்றன. தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமன் அ.தி.மு.க.வினரிடமே மிக நல்லவர் என்று பெயர் எடுத்துள்ளவர். கட்சி, சாதிமத பேதமின்றி மக்கள் மத்தியில் எளிமையாகப் பழகி உறுதியான செல்வாக்கைப் வளர்த்துக்கொண்டவர்.

அமைச்சர் காமராஜைப் பொறுத்தவரை இலவச ஸ்கூட்டி, பாலங்கள், சாலைகள் இணைப்பு, வாட்டர் டேங்க், புதிய ரேசன்கடைகள், கோவில் தேரோட்டம் என மக்கள்நலத் திட்டங்கள் செய்திருந்தாலும் தனக்கு மிக வேண்டியவர்களுக்காக, குறிப்பாக ஒன்றியச் செயலாளர் குணா போன்றவர்களுக்காக பால வசதி, விவசாயக் கடன்களை சொசைட்டிகள் மூலம் அ.தி.மு.க. முக்கியப் புள்ளிகளுக்கு மட்டுமே வழங்கியது உள்ளிட்டவற்றால் மற்றவர் களிடம் வெறுப்பையே சம்பாதித்துள்ளார்.

சீட்கிடைக்காத அ.தி.மு.க.வினரின் உட்கட்சிப் பூசல்கள் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., சசிகலாவுக்கு செய்த துரோகம், சசிகலாவின் துறவறத்தால் சாதி ஓட்டுக்கள் கிடைக்காத பலவீனம். அ.ம.மு.க. தினகரனுக்கு சில கிராமங்களில் இருக்கும் உறவுகள்பலம் போன்றவை காமராஜுக்கு சவாலானவை.

Advertisment

அறிவாலய உத்தரவுப் படி தி.மு.க. மா.செயலாளரும் திருவாரூரில் களமிறங்கு பவருமான சிட்டிங் பூண்டி கலைவாணன் நன்னிலம் தொகுதி மக்களின் மொத்த ஓட்டுகளையும் ஜோதிராமனுக்கே பெற் றுத்தரும் முயற்சிகளில் சுற்றிச் சுழன்றுகொண்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கூட்டிய கிராமசபைக் கூட்டங்கள் தொகுதி முழுக்க பெரும் பேசு பொருளாக மாறியதும் தி.மு.க.வுக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.