முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.சின் நெருங்கிய சகாவான சேகர் ரெட்டிக்கு மணல் குவாரி காண்ட்ராக்டை மீண்டும் தருவதற்கான ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்பாக, ஒரு ஆடியோ உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் 300 கோடிக்கும் அதிகமான பேரங்கள் நடந்திருப்பதாக சொல்லப்படும் தகவல்களால் கிறுகிறுத்துக் கிடக்கிறது ஆளும் வட்டாரம்.

sand

தமிழகத்தில் மணல் விற்பனையை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், மறைமுகமாக மணல் காண்ட்ராக்ட்டை சேகர் ரெட்டிக்கு கடந்த அ.தி.மு.க. அரசின்போது ஒதுக்கப்பட்டது. சேகர் ரெட்டியின் தலைமையில் அவர்களது நண்பர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச் சந்திரன், கரிகாலன் உள்ளிட்ட நால்வர் கூட்டணிதான் மணல் பிசினெசில் கொடி கட்டிப் பறந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அரசு மேலிடத்திலிருந்து பிறப்பிக்கப் பட்ட நிலையான உத்தரவின்படி, சேகர் ரெட்டியின் ஆட்கள் மட்டுமே ஆற்றில் இறங்கி மணலை அள்ளிக்கொண்டு வந்து மணல் யார்டு (குவாரி)களாக குவித்து வைத்துக்கொள்வர்.

se

Advertisment

அரசு நடைமுறைப்படி, மணல் தேவைப்படும் நபர் ஆற்றுப் படுகைக்கு லாரியுடன் செல்லும் போது, அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரியிடம் ஒரு லோடு மணலுக்கான தொகையை கொடுத்தால் அவர் ஒரு ரசீது தருவார். அதன்படி ஒரு லோடு மணலை ஏற்றி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், ரசீது பெற்றவுடன் சேகர் ரெட்டியின் வகையறாக்கள் கட்டுப்பாட்டில் உள்ள குவாரியை கைக்காட்டுவார்கள் அதிகாரி கள். அங்கு போனால், அவர்கள் என்ன விலை நிர்ணயித்துள்ளார்களோ அதை கொடுத்தால் மட்டுமே மணல் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு கொடுக்கப்பட வேண்டிய அத்தனை ரசீதுகளையும் சேகர் ரெட்டி தரப்பிடமே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்படைத்துவிடுவார்கள். அதன்படி விதிகளுக்கு உட்பட்டும் விதிகளுக்குப் புறம்பாகவும் அதிகளவில் மணல் அள்ளப்பட்டு தங்களின் யார்டில் குவித்து வைத்துக்கொள்ளும் சேகர் ரெட்டி தரப்பு. அவர்களின் குவாரியிட மிருந்துதான் மணல் பெற முடியும். இதனால், ஒரு லோடு மணல் ஏரியாவை பொறுத்து 20,000 முதல் 50,000 வரை விற்றது.

se

Advertisment

இத்தகைய மணல் கொள்ளையால், கட்டுமான நிறுவனங்கள் தடுமாறின. ஏழை எளியவர்கள் வீடு கட்டும் கனவை தொலைத்தனர். அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு. அரசுக்கு இழப்பு ஒரு புறமிருந்தாலும், அ.தி.மு.க. ஆட்சி யாளர்களுக்கு மாதம் 1500 கோடி ரூபாய் கப்பம் கட்டி வந்துள்ளனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேகர் ரெட்டியின் அலுவலகத் திலும் வீடுகளிலும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் கைப்பற்றப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் சேகர் ரெட்டி கைது செய்யப்படுகிறார். சிறையில் அவர் அடைக்கப்பட்டாலும் அவரது கூட்டாளிகள் மூலம் மணல் பிசினஸ் தடையின்றி நடந்தது. சிறையி லிருந்தபடியே கணக்கு வழக்குகளை கவனித்துக் கொண்டார் சேகர் ரெட்டி.

இதனால் மணல் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. தமிழகத்தில் விதிகளை மீறி ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததோடு சுற்றுச்சூழல் களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்குகளில், தமிழக ஆறுகளில் மணல் அள்ள தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். பசுமைத் தீர்ப்பாயமும் மணல் அள்ளுவதற்கு எதிராக இருந்தது.

sekar reddy

இதுகுறித்து நம்மிடம் பேசிய பொதுப்பணித்துறையிலுள்ள நேர்மையான சில அதிகாரிகள், ‘’மணல் அள்ள தடை விதித்த நீதிமன்றம், கட்டுமானப் பணிகளுக்காக எம்.சாண்ட் டை பயன்படுத்தவும், வெளிநாடுகளி லிருந்து மணலை இறக்குமதி செய்யவும் யோசனை தெரிவித்தது. இதனால் எம் சாண்ட் உற்பத்தி தமிழகத்தில் பெருகியது. நீதிமன்றத்தின் யோசனைப்படி, எம். சாண்ட் மணலை அ.தி.மு.க. அரசு ஊக்கப்படுத்தினாலும், மணல் அள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க எடப்பாடி பழனிச்சாமி பெரிதும் முயன்றார். தமிழகம் முழுவதும் இல்லையென்றாலும் குறிப்பிட்ட 70 இடங்களிலாவது மணல் அள்ளுவதற்கான அனுமதியை பெற்றுவிட வேண்டுமென பகீரத முயற்சி எடுத்தார் எடப்பாடி. ஆனாலும் நீதிமன்றத் தடை நீடித்தபடியே இருந்தது.

அப்படிப்பட்ட சூழலில், சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தலை கையாண்டனர். மணல் மாஃபியாக்கள். ஆட்சியாளர்களின் அறிவுறுத்தலின்படி வருவாய்த்துறை யினரும், காவல்துறையினரும் இந்த சட்ட விரோத மணல் கடத்தலை கண்டுகொள்ளவில்லை. அதற்குரிய சன்மானம் அதிகாரிகளுக்குப் போய்ச் சேர்ந்தது. அதேசமயம், சட்ட விரோத மணலை பிடிக்கிறோம் என கணக்கு காட்டுவதற்காக சில நடவடிக்கைகளை போலீசும் வருவாய்த்துறையும் இணைந்து எடுத்தனர். ஆக, மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருந்தாலும் மாஃபியாக்களின் பிசினஸ் தடையின்றி நடந்தது. ஆட்சியாளர்களுக்கும் அதி காரிகளுக்கும் மாத மாமூல் போய்க் கொண்டுதானிருந்தது.

கொரோனா பெருந்தொற்று பரவியதால் ஊரடங்கு அமலானது. இதனால், ஆற்றுப்படுகையில் திருட்டுத் தனமாக மணல் அள்ளும் பிசினஸும் கடந்த ஒரு வருடத்தில் குறைந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தி.மு.க. பொறுப்புக்கு வந்திருக்கிறது. மீண்டும் தங்களின் மறைமுக ஆற்று மணல் பிசினஸை தொடங்க, முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்கான முயற்சியை எடுத்தார் சேகர் ரெட்டி. அதற்காக உயரதிகாரிகள் மூலம் தூதும் அனுப்பினார். ஆனால், இவரைப் போன்ற தொழிலதிபர்களை சந்திக்க ஸ்டாலின் விரும்ப வில்லை. அதேசமயம், அண்ணாநகரில் கோலோச் சும் சித்தரஞ்சன் சாலைக்கு நெருக்கமான தி.மு.க. வி.வி.ஐ.பி. மூலம் வாரிசு நட்சத்திரத்தின் பார்வை சேகர் ரெட்டிக்கு கிடைத்தது. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி தருவதன் மூலம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் சேகர் ரெட்டி.

இதனையடுத்து, சித்தரஞ்சன் சாலையின் நட்பு அவருக்கு நெருக்கமான நிலையில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில்தான் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வருவதால் அத்துறையின் அமைச்சர் துரைமுருகனின் பழைய நட்பை புதுப்பிக்கும் முயற்சிகளில் குதித்தது சேகர் ரெட்டி தரப்பு. அதன் முதல் பகுதியாக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தை சந்தித்தார் சேகர் ரெட்டிக்கு நெருக்கமான கரிகாலன். அதன்மூலம், துரை முருகனையும் சந்தித்தார்.

மீண்டும் மணல் அள்ளும் பிசினஸ் குறித்து அந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அப்போது, மணல் விவகாரத்தில் புழங்கும் கோடிகள் குறித்து அலசப்பட்டுள்ளது. ஆனாலும், மணல் அள்ள நீதிமன்றத்தில் தடை இருப்பதால் இது குறித்து எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது என்றும், கட்சி தலைமையிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் எனவும் துரைமுருகன் தெரிவித்திருப்பதாகத்தான் எங்களுக்குத் தகவல். அதனால் மணல் விவகாரத்தில் இன்னும் எதுவும் முடிவாகவில்லை''‘என்று விவரிக்கிறார்கள் பொ.ப.து. அதிகாரிகள்.

சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் தரப்பிலும், கட்டுமான நிறுவனங்கள் தரப்பிலும் நாம் விசாரித்தபோது, ‘’பேரங்கள் முடிந்துவிட்டன; கொரோனா நெருக்கடிகள் இருப்பதால் அமுக்கி வாசிக்கப்படுகிறது. மேலும், நீதிமன்றத்திலும் பசுமைத் தீர்ப்பாயத்திலும் மணல் அள்ளுவதற் கான சாதகமான தீர்ப்பினைப் பெற்றால் மட்டுமே இந்த விவகாரத்தில் மறைமுக ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்படும். நீதிமன்றத்தையும் தீர்ப்பாயத் தையும் தி.மு.க. அரசு எப்படி அணுகப்போகிறது என்பதில்தான் இருக்கிறது மணல் விவகாரம்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

சேகர் ரெட்டியின் கூட்டாளியான கரிகாலன், துரைமுருகனையும் கதிர் ஆனந்தையும் சந்தித்தது குறித்தும், மணல் விவகாரத்தில் வெளியான ஆடியோ குறித்தும் கருத்தறிய துரைமுருகனையும் கதிர் ஆனந்தையும் தொடர்புகொள்ள முயற்சித் தோம். அவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை.

இந்த நிலையில், தன்னைச் சுற்றி வந்துள்ள சர்ச்சைகள் குறித்து விளம்பர அறிவிப்பை வெளியிட்டுள்ள சேகர் ரெட்டி, ‘"எனக்கும் மற்ற சிலருக்கும் தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் மணல் குவாரிகள் ஒப்பந்தம் கொடுத்ததாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். எனது பெயரிலோ எனது நிறுவனத்தின் பெயரிலோ கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் மணல் குவாரி ஒப்பந்தம் எடுக்கவில்லை. 2014 முதல் 2016 வரை அரசின் அனுமதி பெற்று மணல் கிடங்கு நடத்தி, அதனை மக்களுக்கு விற்பனை செய்துவந்தோம். இதைத்தவிர எந்த ஒப்பந்தமும் அரசிடமிருந்து பெற்றதில்லை. இனி வரும் காலங்களில் நானோ எனது நிறுவனமோ தமிழக அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை''‘என்று தெரிவித்திருக்கிறார்.

"மணல் விவகாரத்தில் சேகர் ரெட்டியுடன் தி.மு.க. அரசு கைகுலுக்கினால் அது முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் தலைவலியை ஏற்படுத்தும்' என்கிறார்கள் கோட்டையிலுள்ள நேர்மையான அதிகாரிகள்.