(27) டெல்லி சலோ…

து மாலை நேரம் என்ற போதிலும், சிங்கு எல்லையில் இருள் கவிழ்ந்துவிட்டது. உடலை வளைத்து டெண்டுக்குள் என்னை நுழைத்துக் கொண்டேன். உடலில் ஒருவித அயர்ச்சி. நான் என்னை அறியாமலேயே உறக்கத்திற்குச் சென்றுவிட்டேன். குளிர்பிரதேசத்தில் கண்களை மூடினாலே தூக்கம் வந்துவிடுகிறது. ஆழ்ந்த உறக்கம். திடீரென்று ஒரு குரல் என்னை நினைவுலகத்திற்கு அழைத்து வருகிறது. அது "டெல்லி சலோ...… டெல்லி சலோ'… என்ற இசைப்பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறது.

போராட்ட எல்லையில் இருந்த நாட்களில் ஒருபோதும் எனக்கு அலுப்புத் தட்டியதே இல்லை. புதிய மனிதர்கள், புதிய சூழல் என்பது மட்டும் அதற்கு காரணமாக இருக்கமுடியாது. இசையும், இசை தரும் உற்சாகமும் காரணம். எத்தனை வாத்தியக் கருவிகள், எத்தனை இசை பயிலும் குரல்கள். வாத்திய இசையை மட்டும் கேட்ட நான், சில வாத்தியக் கருவிகளை பார்ப்பதற்காகவே அவர்களைப் பின்தொடர்ந்திருக்கிறேன்.

Advertisment

m

இரவு நேரங்களில் தாய்மரங்களில் தங்களை அடைகலப் படுத்திக்கொள்ளும் பறவை இனத்தைப் போல, அத்தனை இசைக்கூட்டமும் போராட்ட எல்லைகளை நோக்கிப் பறந்து வந்துகொண்டேயிருக்கின்றன. போராட்டக்களம் முழுவதிலும் ஒருவித நாடோடித் தன்மை இருந்தது. இசையும் கலையும் இல்லை என்றால் நாடோடிகள் இல்லை. இவர்கள் எங்கு சென்றாலும் தங்கள் மகிழ்வான மனநிலையையும், இசைக்கருவி களையும் எடுத்துச் செல்ல தவறுவதே இல்லை. அந்த உலகம் எல்லோருக்கும் சந்தோஷம் தரக்கூடியது.

அந்த இசைக்குரல் எனக்கு பழக்கப் பட்டதாக தெரிகிறது. தாளத்தை ஒழுங்குப்படுத்தி, இசையை வீரியப்படுத்தும் அந்த இசைக் கருவியும், என் காதுகளுக்கு அறிமுகமானவை யாக தெரிகின்றன. அந்த பின்பாட்டும், அது பின்புறம் இருந்து முழங்கும் முறையும் மிகவும் அணுக்கமாகத் தெரிகிறது. எந்த மொழியில் பாடுகிறார்கள் என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவசரமாக டெண்டை விட்டு வெளியேறுகிறேன்.

Advertisment

அது ஒரு ‘பெட்ரோல் பங்க். அங்குள்ள மின்ஒளியை ஊடறுத்து என் கண்கள் இசை வெளிப்படும் அதன் இசைப் பரப்பைத் தேடுகின்றன. அந்த டெல்லி சலோ கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். ஒழுங்கற்ற வட்டமாக ஒரு கூட்டம் தெரிகிறது. கூட்டத்தில் ஒருவரை மட்டும் கண்டுபிடித்து விடுகிறேன். போராட்டக் களத்தில் ஒருவரை அடையாளம் காணுதல் மிகவும் சிரமமான காரியம். ஒவ்வொரும் குளிர் ஆடைகளில் தங்கள் பழைய அடையாளத்தை இழந்திருப்பார்கள். கண்டுபிடித்துவிட்டதில் எனக்குள் தனி உற்சாகம். ராஜு என்று இரண்டு முறை குரல் எழுப்பிப் பார்க்கிறேன். மூன்றாவது குரலுக்கு அவர் திரும்பி பார்க்கிறார்.

தோழர் ராஜு ‘மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர். அவருடன் எனக்கான உரையாடல் ஒரு பேருந்து பயணத்தில் நிகழ்ந்தது. சென்னைக்கு செல்லும் பல்லவன் ரயிலில் அரியலூரில் ஏறிக்கொள்ள வேண்டும். தஞ்சையிலிருந்து அவசரமாக பேருந்தில் ஏறுகிறேன். அங்கு தோழர் ராஜு இருந்தார்.

எனது அரசியல் வாழ்க்கை, 1970-ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்பொழுதிருந்தே மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முன்னணி செயல் போராளியாகத் திகழ்ந்த காளியப்பன் அவர்களை நானறிவேன். அவர்களால் அப் பொழுது வெளியிடப்பட்ட பாடல்கள் மிகுந்த ஈர்ப்பைக் கொண்டவை. மிகவும் ரசித்து ரசித்து பலமுறை கேட்ட பாடல்கள் சில உண்டு. ஆனால் அரசியலில் மிகவும் கூடுதலான முரண்பாடுகளைக் கொண்டிருந்த காலம். உலகமயம் எல்லாற்றையும் மாற்றி அமைத்துவிட்டது. கெடுபிடி யுத்தக்கால அரசியல் (COLD WAR POLITICS)இப்பொழுது இல்லை. புதிய அரசியல் ஒற்றுமைக்கான தேவையை கூடுதலாக்கியுள்ளது.

m

பேருந்து பயணம் இரண்டுமணி நேரம். சுற்றியிருப்பவர்கள், இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று ஆர்வம்கொள்ளும் வகையில் எங்கள் உரையாடல் இருந்து. ஒருசிலர் மிகுந்த ஆர்வத்துடன் எங்கள் உரையாடலை கேட்கத் தொடங்கினர். கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமை குறித்து, மிக கூடுதலான விபரங்களை அன்று நாங்கள் பகிர்ந்துகொண்டோம். எனக்கு மன நிறைவான உரையாடலாக தோன்றியது.

சிங்கு எல்லையில், குளிர்கால உடையில் இருந்த தோழர் ராஜு அருகில் செல்கிறேன். இதில் பலர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். மாநிலம் விட்டு மாநிலம் தொலைதூரத்தில், அதுவும் ஒரு போராட்டக்களத்தில் சந்திக்கும் மனஉணர்வு எவ்வாறு இருக்கும் என்பதை, என்னால் ஒரு கணம் உணர்ந்துகொள்ள முடிந்தது. தோழர் ராஜு என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

டெல்லி சலோ பாடல் வரிகளை பெரும் பாலான இந்திய மொழிகளில் கேட்டிருக்கிறேன். டங்ர்ல்ப்ங் ல்ர்ஜ்ங்ழ் என்ற பதாகையுடன் கம்பீரமாக சுற்றிநின்று தமிழில் பாடும் போர் முழக்கப் பாடலை கேட்கும்போது தனித்துவமான ஓர் உணர்வு எனக்குள் தோன்றுகிறது. ஒரு பெருங்கூட்டம் கூடிவிடுகிறது. தாள நயம் பொருந்திய பாடல் கிடைத்தால் பஞ்சாபியர்கள் ஆடத் தொடங்கி விடுவார்கள். இதில் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடுகள் இருக்காது. முதியவர்கள் சிலரும் பங்கேற்றுவிடுவார்கள். கூட்டமே ஆடத் தொடங்கிவிடுகிறது. உணர்வு களின் உச்சத்திற்கு கூட்டம் சென்றுவிடுகிறது.

mm

எனக்குள் வித்தியாசமான உணர்வுகள் வந்துபோகின்றன. பொதுவுடைமை இயக்கங்களில் அதன் அதன் இயங்கியல் செயல் தளங்களில் கலையும் இலக்கியமும் அடித்தளமாக இருக்கிறது. உலகில் புரட்சியை சாதித்த நாடுகள், கலை இலக்கிய செயல்பாடு இல்லை என்றால் புரட்சிக்கு மக்களை திரட்டுவதில் வெற்றிபெற்றிருக்க மாட்டார்கள். மக்கள் அதிகாரத்தின் இந்த செயல்பாடுகள் எனக்குள் தனித்துவ மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நான் தோழர் ராஜுவிடம் இதுகுறித்து விபரமாகப் பேசினேன். நான்கு நாட்கள் சிங்கு, காஜ்பூர், டிக்ரி போராட்டக் களங்களில் பங்கேற்றதாகச் சொன்னார். தமிழ்நாட்டிலிருந்து 436 பேர் ரயிலில் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். இதில் தலைவர்கள் தொண்டர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் பாடுகிறார்கள். எல்லோரும் முழக்கமிடுகிறார்கள்.

ராஜு விவசாயிகளின் போராட்ட அனுபவங்களை மிகுந்த பிரமிப்புடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு போராட்ட எல்லையிலும் பெரும்மேடைகள் அமைக்கப்பட்டி ருக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அமர்ந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. சிறந்த ஒலி பெருக்கிகளை வைத்திருக்கிறார்கள். கூட்டத்தை முறைப்படுத்த தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, மிகுந்த கட்டுப்பாடுடன் கூட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்த இடங்களில் கூட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும்.

நானும் இந்தக் கூட்டங்களில் பேசியிருக் கிறேன். எல்லா மேடைகளிலும் பேசியதையும் பாடியதையும் என்னுடன் பகிர்ந்துகொண்டார் ராஜு. என் மனதுக்குள் ஒரு கனவு விரிந்து கொண்டே சென்றது. அது கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமை பற்றிய இந்தியக் கனவு.

தமிழகத்திலிருந்து இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் போராட்டக்களத்திற்கு வந்து சென்றதை நான் அறிவேன். அவர்கள் பற்றிய முழுமையான விபரம் எனக்கு கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் அந்த தகவல்களையும் திரட்டி மேலும் எழுதவே விரும்புகிறேன். காரணம், இந்தப் போராட்டத்தில் கண்ணுக்குத் தெரியாமல் செயல்பட்ட இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பு கூடுதலாக இருப்ப தாகவே நான் உணர்ந்துகொண் டேன். இந்தியா முழுமையிலும் இதுதான் நிலை. தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களில், நான் நேரில் சந்தித்தவர்கள் பற்றி மட்டும் என்னால் இங்கு எழுத முடிந்தது.

இந்திய மாதர் தேசிய சம்மேளத்தின் செயலாளர் மஞ்சுளா தலைமையில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மாதர் சங்க தலைவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு குளிர்தான் ஒரே பிரச்சினை. வந்தவர்கள் வெறும் போர்வைகளை மட்டும் எடுத்து வந்திருந்தார்கள். உச்சந்தலை யிலிருந்து உள்ளங்கால் வரை உடல் நடுங்க அவர் களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்பொழுதுதான் அவர்களுக்கு அந்த பேருதவி கிடைத்தது.

தமிழகத்தில் செயல்படும் ‘மனுதி’ அமைப்பைச் சார்ந்தவர்கள் செல்வி, வசுமதி ஆகிய இருவரும் இடதுசாரி சிந்தனையாளர்கள். ஆக்கப்பூர்வமான செயல்பாட்டாளர்கள். மிக எளிதில் எல்லோரிடமும் தோழமை கொண்டு விடுவார்கள். எந்தச் செயலையும் விரைந்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.

இவர்கள் செய்த உதவியின் மூலம் போராட்டக் களத்தில் அமைந்த மற்றொன்றையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

(புரட்சிப் பயணம் தொடரும்)