.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள 100 சதவீதம் வாய்ப்பில்லை‘’ என்று சொன்ன அடுத்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்ட சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்- நிமோனியா காய்ச்சல் என அடுத்தடுத்து வந்த செய்திகள் பரபரப்பை அதிகரித்தன.

sasi-eps

டெல்லி சென்ற எடப்பாடி அங்கே அமித்ஷா-மோடி என அடுத்தடுத்த சந்திப்புகளை நிகழ்த்தியபோது, சசிகலாவை அ.தி.மு.கவில் இணைப்பது பற்றித்தான் மேலிடம் வலியுறுத்தியிருந்தது. அதை அவர் விரும்பாத நிலையில், 18-ந்தேதி இரவு தமிழ்நாடு இல்லத்தில் கட்சியின் சீனியர்களுடனும் உயரதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். கே.பி.முனுசாமி தொடங்கி ஜெயக்குமார், தளவாய் சுந்தரம் உள்ளிட்டவர்கள் சசி குடும்பத்திடம் மீண்டும் அடிமையாக முடியாது என்றனர். அதனையடுத்து, மத்திய அரசு பணியிலுள்ள தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ்மீனாவை தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்தனர்.

அவருக்கு வேண்டிய அதிகாரிதான் அமித்ஷாவின் உள்துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவர் மூலம், ஜெ.வைவிட சசி பெரிய தலைவலியாக இருப்பார் என பா.ஜ.கவுக்கு தகவல் பாஸ் செய்தனர். சில வைட்டமின் காய்களையும் அதிகாரிகள் மூலமாகவே நகர்த்தினர். இதில் 90% திருப்தியான பதில் எடப்பாடிக்கு கிடைத்தபிறகே, சசிகலாவை சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என மறுநாள் சொல்லிவிட்டு சென்னைக்கு ப்ளைட் ஏறினார் எடப்பாடி.

Advertisment

இது சிறையிலிருந்த சசிகலாவை கோபப்படுத்த, டி.டி.வி.தினகரனை தொடர்பு கொண்டு, ""அதிகார ருசியால் எனக்கு துரோகம் செய்த பழனிச்சாமிக்கு நான் யார்னு காட்டுறேன். விடுதலையான மறுநாள் 25 அதிமுக எம்.எல்.ஏ.க் கள் ரிசைன் பண்ணனும்'' என அசைன்மெண்ட் தந்துள்ளார். முக்குலத்தோர் எம்.எல்.ஏ.க்களிடமும், மீண்டும் சீட் கிடைக்காது என நினைக்கும் எம்.எல்.ஏ.க்களிடமும் தொடர்புகொள்ள துவங்கினார் தினகரன். அதேநேரத்தில், சிறை அதிகாரிகள் மூலம் சசிகலாவின் திட்டம் கர்நாடக உளவுத்துறைக்கு கிடைத்து, அதை மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை அதிகாரிகள், எடப்பாடிக்கு தெரிவித்தனர். அமீத்ஷாவின் கவனத்துக்கு இதனை அதிகாரிகள் மூலமாகவே கொண்டு சென்று, இதுதான் ஒரிஜினல் சசிகலா என்ற ரீதியில் தெரிவித்திருக்கிறது எடப்பாடி தரப்பு.

""சசிகலா வெளியே வந்து சென்னையில் தங்கியிருந்தால் தினமும் அவரை சந்திக்க பெரும் கூட்டம் படையெடுக்கும் வகையிலான வியூகங்களை அ.ம.மு.க.வினர் திட்டமிட்டிருந்தனர். ஜெயலலிதா நினைவிடத்தில் புதுசபதம்- தியானம் ஒரு நாள் திட்டத்தையும் சசிகலா வகுத்திருந்தார். தேர்தல் நேரத்தில் சசிகலா விடுதலையாகி சென்னையில் வெளியே இருக்கும் ஒவ்வொரு நாளும் எடப்பாடிக்கு தலைவலிதான். சசிகலாவுக்கு ஓ.பி.எஸ் ஆதரவு தெரிவித்தால் அது கூடுதலான நெருக்கடிகளை உருவாக்கும். இதையெல்லாம் கணக்கிட்டு டெல்லியின் உதவியுடன் எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்தான் கொரோனாவில் சசிகலாவை மருத்துவமனைக்குள் தள்ளியிருக்கிறது. சசிகலாவை தாக்கியிருப்பது கொரோனா வைரஸ் அல்ல; எடப்பாடி வைரஸ்'' என்று சுட்டிக்காட்டுகிறது விபரமறிந்த வட்டாரம்.

மோடி அரசின் பினாமி திருத்தச் சட்டம், 7 வருடங்கள் சிறை தண்டனை கொடுக்க வழிவகை செய்வதால், அதையும் சசிகலாவுக்கு எதிராக கூர் தீட்டும் முயற்சிகள் நடக்கின்றன. சசிகலாமீது அமலாக்கத்துறையில் 3 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகான 1,600 கோடி ரூபாய் பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 9 கிரவுண்டு இடத்தில் சசிகலா கட்டி வந்த பங்களா, சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட 300 கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டன. பினாமி பரிவர்த்தனை வழக்கில் தற்போது சசிகலா மீதும், சசிகலாவுக்கு வேண்டப்பட்ட நாமக்கல் செந்தில் மீதும் ஒரு எஃப்.ஐ.ஆரை பதிவு செய்து வைத்திருக்கிறது அமலாக்கத்துறை.

Advertisment

முதல் முறை பரோலில் சென்னைக்கு வந்த சசிகலா, இளவரசியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதற்கு பிறகு வாங்கப்பட்ட சொத்துக்களை கவனித்து வந்த நாமக்கல் செந்திலை வரவழைத்து விசாரித்தார் சசிகலா. அப்போது, எடப்பாடியிடமிருந்து பெறப்பட்ட தொகை, பணமதிப்பிழப்பில் மாற்றப்பட்ட தொகை, அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்களின் விபரம் உள்ளிட்ட அனைத்தையும் விவரித்தார் நாமக்கல் செந்தில். அதனை முழுமையாக எழுதி வாங்கிக் கொண்டார் சசிகலா. எழுதப்பட்ட அந்த விபரங்களை இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, தனது மொபைல் ஃபோனில் படம் பிடித்துக்கொண்டார். சொத்துக்களின் விபரங்கள் அடங்கிய பேப்பருடன் பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பிய சசிகலா, சில நாட்களுக்கு பிறகு அதனை விவேக்கிற்கு அனுப்பி வைத்து சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார் சசிகலா. இதனையெல்லாம் அறிந்த வருமானவரித்துறை நடத்திய அதிரடி வேட்டையில், விவேக்கிடமிருந்து அந்த பேப்பர்களும், கிருஷ்ணப்ரியாவின் மொபைலில் இருந்த தகவல்களையும் எடுத்துக் கொண்டது வருமானவரித்துறை. இதுதான் அதன்பிறகான ரெய்டு, முடக்கம் ஆகியவற்றுக்கு ஆதாரங்க ளாயின. இந்த வழக்கில், நாமக்கல் செந்திலை அப்ரூவராக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ள தாம். தேவைப்பட்டால் இந்த வழக்கில் சசிகலாவை கைது செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பி வைக்கும் திட்டம் இருப்பதால், அது வரையில் மருத்துவ மனைதான் சசிகலாவுக்கு சிறை என்கிறார்கள் அமலாக்கத்துறையினர்.