ஜெய்-வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி ஆகியோரை வைத்து கடந்த வருடம் ‘"கேப்மாரி'’ படத்தை டைரக்ட்பண்ணி ரிலீஸ் பண்ணி னார் "மாஸ்டர்' விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். "சினிமாவில் இதுதான் எனது கடைசிப் படம்' எனவும் அறிவித்தார் எஸ்.ஏ.சி.

சில மாதங்களுக்கு முன்பு ‘"தளபதி விஜய் மக்கள் இயக்கம்'’ என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்தார். ""அந்தக் கட்சிக்கும் எனக்கும் சம்பந்த மில்லை''’என்றார் விஜய். ’""அப்படி ஒரு கட்சி ஆரம்பிப்பதே எனக்குத் தெரியாது''’என்றார் விஜய்யின் அம்மா ஷோபா. கடைசியில் ""எனக்கும் அந்தக் கட்சிக்கும் சம்பந்தமேயில்லை... இருந்தாலும் கட்சியைக் கலைக்கிறேன்''’என செம கலக்கு கலக்கினார் எஸ்.ஏ.சி.

அந்த அரசியல் சடுகுடு ஆட்டத்திற்கிடையே மீண்டும் தனது கடைசிப் படமான ‘"நான் கடவுள் இல்லை'’ படத்தின் ஷூட்டிங்கையும் நடத்தி, இப் போது ரிலீசுக்கும் ரெடியாகி விட்டார் எஸ்.ஏ.சி. இனியா, சாக்ஷி அகர்வால், ரோகிணி, ‘"பருத்தி வீரன்'’சரவணன், அபி சரவணன், புதுமுக ப்ரியங்கா, மயில் சாமியின் இளைய மகன் யுவன், இமான் அண்ணாச்சி என மெகா நட்சத்திரப் பட்டாளங்கள் இருக்கும் ‘"நான்.க.இ.'-யில், செம வெயிட்டான சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.

thirai

Advertisment

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்துக்காண்டிருக்கும் சமுத்திரக் கனியை இந்தப் படத்திற்கு கமிட் பண்ணியது குறித்து எஸ்.ஏ.சி. பேசும்போது, “""குழந்தைகளை மையமாக வைத்து நான் டைரக்ட் பண்ணிய குறும் படத்தைப் பார்த்த சமுத்திரக் கனி, "இதே கதையை டெவலப் பண்ணி பெரிய படமாக எடுங்க, நான் நடிக்கிறேன்' என்றார். உடனே முழுநீள க்ரைம் த்ரில்லர் கதையாக மாற்றி அவரிடம் சொன்னேன். அவருடைய பிஸி கால் ஷீட்டுக்கு இடையிலும் எனக்கு தேதி கொடுத்து சொன்னதைச் செய்தார் சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனி வெறும் நடிகர் மட்டுமல்ல, மனித நேயமும் சமூக அக்கறையும் கொண்ட போராளி அவர்''’ என ரொம்பவே பெருமிதப் பட்டார் எஸ்.ஏ.சி.

ராஜமௌலி டைரக்ஷனில் தெலுங்கில் "ஆர்.ஆர்.ஆர்.',’ ‘"சில்லுக் கருப்பட்டி'’ டைரக்டர் ஹலீதா ஷமீமின் ‘"ஏலே'’, பொன்ராம் டைரக்ஷனில் சசிகுமார், சத்யராஜுடன் ‘"எம்.ஜி.ஆர். மகன்'’ என பிஸியாகத்தான் இருக்காரு சமுத்திரக்கனி.

Advertisment

பிரியா பவானி ஹேப்பி ஜார்னி!

tt

"மாஸ்டர்', "ஈஸ்வரன்' படங்களின் ரிலீசால் கோலிவுட்டில் வாரம்தோறும் படங்கள் ரிலீசாகும் பழைய உற்சாகம் திரும்ப ஆரம்பித்துவிட்டது. வருகிற பிப். 05-ஆம் தேதி ஜீவா-அருள்நிதி நடிக்கும் ‘"களத்தில் சந்திப்போம்'’ உட்பட மூன்று படங்களும் பிப். 12-ஆம் தேதி நான்கு படங்களும் ரிலீசாகின்றன.

இதனால் வளரும் நடிகைகளில் முன்னணி இடத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறார் பிரியா பவானிசங்கர். 05-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் "களத்தில் சந்திப்போம்'’படத்தில் அருள்நிதிக்கு ஜோடி போட்டிருக்கும் பிரியா பவானியின் கால்ஷீட் 2021 முழுவதும் ஃபுல்லாக இருக்கும் அளவுக்கு ஹேப்பி ஜார்னியாக போய்க்கொண்டிருக்கிறதாம்.

அசோக்செல்வனுடன் "ஓ மணப்பெண்ணே'’, அதர்வாவுடன் ‘"குருதி ஆட்டம்', கௌதம் கார்த்திக்குடன் ‘"பத்து தல', ராகவா லாரன்சுடன் ‘"ருத்ரன்', ஹரி டைரக்ஷனில் அருண் விஜய்யின் 33-ஆவது படம் உட்பட பத்து படங்களில் கமிட் ஆகியிருந்தாலும் ஷங்கரின் ‘"இந்தியன்-2',’(ஷூட்டிங் எப்ப ஸ்டார்ட் ஆகும்), ராதாமோகன் டைரக்ஷனில் தயாரான ‘"பொம்மை'’ எப்ப ரிலீசாகும் என ஹேப்பியிலும் கவலையாக இருக்கார், அடிக்கடி பாய்ஃப்ரண்டை மாற்றி பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் பிரியா பவானிசங்கர்.

அடடே அப்படியா……!

nn

தனது அக்கா சஞ்சனா கல்ராணி, போதைப் பொருள் பழக்க-வழக்கத்தில் பெங்களூரில் கைது செய்யப்பட்டதும் கொஞ்ச நாட்கள் சென்னைப் பக்கமே வரவில்லை நிக்கி கல்ராணி. சமீபத்தில் சஞ்சனா கல்ராணி ஜாமீனில் வெளியே வந்ததும், சகலவிதத்திலும் தனது ஆஸ்தான குருவான ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவின் அருளாசி யுடன் சென்னை திரும்பி ஃபோட்டோ ஷூட்களை ரிலீஸ்பண்ணி வருகிறார்.

இந்த நேரம் பார்த்துதான் அமெரிக்காவில் உள்ள "நியூயார்க் பிரஸ் கிளப்' என்ற அமைப்பு (!?) ஆசியாவில் புகழ்பெற்ற 500 பிரபலங்களில் நிக்கி கல்ராணியையும் செலக்ட் பண்ணிருக்காம்.

அடடே அப்படியா…ஆச்சர்யக்குறி!