லைநகர் டில்லியில் மத்திய அரசின் பாராமுகத்துக்கு நடு விலும் 35-வது நாளாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டிசம்பர் 29-ஆம் தேதி மாலை "வேளாண் சட்டங்கள் ரத்து, மின்சார திருத்தச் சட்டம் 2020 -ரத்து' என்ற கோரிக்கைகளுடன் தஞ்சை திலகர் திடலில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

tanjore

தமிழ்நாடு முழுவதும் இருந்து விவசாயிகள், விவசாய சங்கங்கள் அணியணியாக திரண்டுவரத் தொடங்கினர். தமிழக காவல்துறையோ அவர்களை கைது செய்வதில் மும்முரமானது. காவல்துறையின் கெடுபிடியை அறிந்த விவசாயிகள், கல்யாண நிகழ்ச்சிகளுக்கு போவதுபோல திலகர் திடல் வந்து சேர்ந்தனர். கைது செய்யப்படும் விவசாயிகளை தங்கவைக்க தஞ்சையில் மட்டும் 15 திருமண மண்ட பங்களை முன்பதிவு செய்து வைத்திருந்தனர். பேரணிக்கு அனுமதி வழங்காததால், பொதுக்கூட்டம் மட்டும் நடத்தப்பட்டது. திலகர் திடல் நிரம்பி வெளியேயும் விவசாயிகள் திரண்டு நின்றனர்.

Advertisment

வரவேற்புரை நிகழ்த்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ""எமர்ஜென்சி காலத்தில்கூட இதுபோன்ற அடக்குமுறை நடந்ததில்லை. அத்தனை அடக்குமுறைகளையும் கடந்து எடப்பாடி முகத்தில் அடிக்கும் விதமாக விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். அனை வரையும் வரவேற்கிறேன்''’என்றார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், ""தமிழக முதலமைச் சர் எடப்பாடி, தான் ஒரு விவசாயி என் கிறார். இந்த சட்டத்தை ஆதரிப்பதிலிருந்தே அவர் ஒரு கார்ப்பரேட் விவசாயி என்பது தெளிவாகத் தெரிகிறது''’என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், “""இன்று தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு தடைகளைத் தகர்த்து மாநில அளவிலான விவசாயி களின் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் கடுங்குளிரில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக் கிறார்கள். தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சிபோல போராட்டத்திற்கு வருவோர் களின் வாகனங்கள் செல்லவிடா மல் மிரட்டுவது, வாகன உரிமை யாளர்களை மிரட்டுவது, கொரோனாவைக் காரணம் காட்டி விவசாயிகளை மிரட்டி கைது செய்வது போன்றவை இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி சென்னையில் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டத் தைக் கூட்டினார். அங்கே கொரோனா பரவாதா? விவ சாயிகள் போராடினால் மட்டும் தான் கொரோனா பரவுமா?

Advertisment

eps

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி? விவசாயிகளுக்கு ஒரு நீதியா? அந்தச் சட்டங்களை ஆதரிக்க உங்களுக்கு உரிமை உண்டு என் றால் அதை எதிர்க்க எங்களுக்கும் உரிமையைக் கொடுத்திருக் கிறது இந்திய அரசியல் சாசனம். நாற்பது உயிர்களைப் பறிகொடுத்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடி கண்டுகொள்ளவில்லை.. இந்த சட்டம் வந்தால் விவசாயிகள் கையேந்தும் நிலை ஏற்படும். இந்த சட்டத்தால் 22 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் ரத்துசெய்யப்படும். இந்த போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்றால் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்''’எனப் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கத்தைச் சேர்ந்த துரைமாணிக்கம், “""இதேபோல பத்து மடங்கு கூட்டத்தைக் கூட்டுவோம். அ.தி.மு.க.-பா.ஜ.க. வில் உள்ள சிறுகுறு விவசாயிகள் தங்களின் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். இந்த சட்டத்தால் பாதிப்புகள் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். வேளாண்மைக்கு எதிரான அரசுகளைத் தூக்கி எறிய வேண்டும்'' என்றார்.

"இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தைப் பார்த்து மத்திய-மாநில அரசுகள் அச்சத்தில் உள்ளன. மத்திய அரசுப் பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை என்றால், டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக "சென்னை சலோ' என்ற பெயரில் சென்னையில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தத் தயாராவோம்' என்று தீர்மானம் வாசித்தனர்.

டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக் காரர்களை "தரகர்கள்' என்ற முதல்வர் எடப்பாடி, அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில், தஞ்சைத் திடல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை என்ன பெயரில் அழைப்பாரோ!

-இரா.பகத்சிங்

____________

பா.ஜ.க தலைவர்கள் வீட்டு வாசலில் சாணி

eee

தலைநகர் டெல்லியில் 35 நாட்களாக நடைபெறும் போராட்டத்தை விவசாயிகள் நாளுக்கு நாள் தீவிரப்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். மத்திய வேளாண் அமைச்சர் + அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் மின்கட்டண உயர்வு தவிர்ப்பு, வைக்கோல் போர் எரித்தால் அபராதம் தவிர்ப்பு போன்ற உடன்பாடுகள் ஏற்பட்டாலும், முக்கியமான கோரிக்கையான 3 சட்டங்கள் வாபஸ், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் ஆகியவை இன்னும் இழுபறியாகவே உள்ளது. "மத்திய அரசு தொடர்ந்து இதே போக்கைக் கடைப்பிடித்தால் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்' எனத் தெரிவித்துள்ளனர் விவசாயிகள். பஞ்சாப் மாநில விவசாயிகள் புத்தாண்டு தினத்தில் புதுவகைப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். அங்குள்ள பா.ஜ.க. தலைவர்கள் வீட்டு வாசலில் மாட்டுச்சாணத்தை கொட்டிக் குவித்து, உள்ளேயிருந்து யாரும் வெளியே வராத வகையில் தொடங்கியுள்ளது இந்த நூதனப் போராட்டம்.