அமீத்ஷாவின் முன்னிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியென்று முதல்வர் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும், அறிவித்து மகிழ்ந்தனர். கூட்டணி குறித்து அன்று இரவு அவர்களிடம் விவாதித்த அமீத்ஷா, ""பா.ஜ.கவுக்கு 100, அ.தி.மு.க.வுக்கு 134 சீட் என்று இடங்களைப் பிரித்துக் கொள்ளலாம். எங்களுக்கான சீட்டுகளில் இருந்து நாங்கள் பா.ம.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் உரிய சீட்டுகளை ஒதுக்கிவிடு கிறோம்'' என்று சொல்லியிருந்தார். இதனை அப்போதே நக்கீரனில் நாம் பதிவு செய்திருந்தோம்.
அதே பாணியில் கடந்த வாரம் எடப்பாடியைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் மூலமும் வலியுறுத்தியுள்ளாராம் அமீத்ஷா. எடப்பாடியோ, ""தி.மு.க போட்டி யிடுகிற தொகுதிகளின் எண்ணிக்கைக்கு இணையாக, நாங்களும் நிற்க விரும்புகிறோம்'' என்று தெரிவித் திருக்கிறார். 45 இடங்களுக்கும் குறைவில்லாமல் போட்டியிட நினைக்கும் பா.ஜ.க., தற்போது 38 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் சீக்ரெட் டாகத் தயாரித்து வைத்திருக்கிறது.
அந்தப் பட்டியல் இதோ....
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி -குஷ்பு, தி.நகர்- ஹெச்.ராஜா, கொளத்தூர்-ஏ.என்.எஸ்.பிரசாத், மயிலாப்பூர்-கரு.நாகராஜன், துறைமுகம்-வினோஜ் பி.செல்வம், வேளச்சேரி-டால்ஃபின் தரணி, மாதவரம்-சென்னை சிவா, திருவள்ளூர்-லோகநாதன், செங்கல்பட்டு-கே.டி.ராகவன், கே.வி.குப்பம்-கார்த்தியாயினி, பென்னாகரம்-வித்யாராணி, திருவண்ணாமலை-தணிகைவேல், போளூர்-சி.ஏழுமலை, ஓசூர்-நரசிம்மன், சேலம் மேற்கு- சுரேஷ்பாபு, மொடக்குறிச்சி- சிவசுப்ரமணியன், ராசிபுரம் வி.பி.துரைச் சாமி, திருப்பூர் வடக்கு-மலர்க் கொடி, கோவை தெற்கு-வானதி சீனிவாசன், சூலூர்-ஜி.கே.நாக ராஜ், திருச்சி கிழக்கு- டாக்டர் சிவசுப்பிரமணியம், பழனி- என்.கனக ராஜ், அரவக் குறிச்சி- அண்ணாமலை ஐ.பி.எஸ். (ஓய்வு), ஜெயங்கொண்டம்-அய்யப்பன், திட்டக்குடி-தடா பெரியசாமி, பூம்புகார்- அகோரம், மயிலம்- கலிவரதன், புவனகிரி-இளஞ் செழியன், திருவையாறு-பூண்டி வெங்கடேசன், தஞ்சை-கருப்பு முருகானந்தம், கந்தர்வக்கோட்டை- புரட்சி கவிதாசன், சிவகங்கை- சத்தியநாதன், பரமக்குடி- பொன்.பாலகணபதி, மதுரை கிழக்கு- இராம. சீனிவாசன், நெல்லை- நயினார் நாகேந்திரன், சாத்தூர்- மோகனராஜுலு, தூத்துக்குடி- சசிகலா புஷ்பா, நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி
-இளையர்