Skip to main content

பாழாகும் பவானி ஆறு!

Published on 22/04/2018 | Edited on 23/04/2018
மக்களின் குடிநீர்த் தேவைக்கும் விவசாயத்துக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்து திட்டங்கள் நிறைவேற்றியது ஒரு காலம். ஆனால் இப்போது ஒரு ஆற்றையே பாழ்படுத்துவதற்கு ஒரு திட்டம் போடும் வினோத காலம். கொங்கு மண்டல மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது பவானி சாகர் அணையும் அந்த அணையை நிரப்பும் கிளை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தொடர் மழை; 2 நாட்களில் உயர்ந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

continuous rain; Bhavanisagar dam water level highest in 2 days

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

 

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.94 அடியாக உயர்ந்துள்ளது. இரண்டு நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 8,574 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதைப்போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.92 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.69 அடியாகவும் உள்ளது.

 

 

 

Next Story

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Heavy rain in the catchment area; Increase in flow to Bhavanisagar Dam

 

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. அதேபோல் மழைப் பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

 

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,894 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலியாக இன்று பவானிசாகர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 6,659 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

 

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.34 அடியாக உயர்ந்துள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ் பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.