சொன்னபடியே ஜனவரி 3ந் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த, தனது வீட்டிலிருந்து புறப்பட்டு மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள தனியார் மண்டபத்துக்கு வந்த மு.க.அழகிரிக்கு வழியெங்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

alagiri

பேனர்களில் கலைஞர்-அழகிரி-அவர் மகன் துரைதயாநிதி படங்கள் இடம்பெற்றிருந்தன. மண்டபத் துக்குள் 3000 பேரும் வெளியே 2000 பேரும் திரண்டிருந்தனர். கலைஞர் காலத்தில் திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க.வை ஜெயிக்க வைத்ததில் தொடங்கி, உருக்கமாக பலவற்றை நினைவுகூர்ந்த அழகிரி, மு.க.ஸ்டாலின் துணைமுதல்வராகவும் பொருளாளராகவும் ஆதரவளித்ததைக் குறிப்பிட்டுவிட்டு, தன்னால் மந்திரி பதவி பெற்ற ஒருவரும் விசுவாசமாக இல்லை என்றார். கலைஞரை தற்போதைய தி.மு.க மறந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த அழகிரி, ""வருங்கால முதல்வரே என்று போஸ்டர் ஒட்டினாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது. என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள்'' என்றார்.

ஒரு வாரம் கழித்து அரசியல் முடிவு எடுப்பதாகவும், எந்த முடிவானாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அழகிரி மீண்டும் தன் ஆட்டத்தை ஸ்டார்ட் செய்திருப்பதை பா.ஜ.க., அ.தி.மு.க. தரப்பு உற்சாகத்துடன் கவனிக்கிறது. தி.மு.கவின் முன்னாள் நிர்வாகிகளும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். தி.மு.க. தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதே கரைவேட்டியுடன் இருந்த அழகிரி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு.

Advertisment

-அண்ணல்