Skip to main content

’’நிர்மலா தேவிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்’’ - ரஜினி பேட்டி

Published on 23/04/2018 | Edited on 24/04/2018
rajini

 

நடிகர் ரஜினிகாந்த் இன்று ஒரு வார பயணமாக அமெரிக்கா புறப்படுகிறார்.  அவர் அமெரிக்கா புறப்படும் முன் தனது போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

முன்னதாக ரஜினிகாந்தை துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசினார்.

 

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஜினி,  ‘’குருமூர்த்தி எனக்கு 25 ஆண்டுகால நண்பர்.  அடிக்கடி நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.  இன்றைய சந்திப்பில் ஸ்பெஷல் ஒன்றும் கிடையாது.  

 

பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சினங்களை தாங்கித்தான் ஆகவேண்டும்.  நான் அரசியலுக்கு வருவதை பற்றி பலர் விமர்சிப்பதை  பற்றி எனக்கு கவலையில்லை.   இன்றைக்கு கூட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  மன்ற ஆலோசனைக்கூட்டங்களில் பேசியதை வெளிப்படையாக  சொல்ல முடியாது.  

பெண் செய்தியாளர் குறித்து எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து மன்னிக்க முடியாத குற்றம்.   

 

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது சீருடையில் இருக்கும் காவலரை தாக்கியது கண்டிக்கத்தக்கது.   காவல்துறையினர் மீது கை வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம்.  அதே நேரம் சட்டம் தன் கையில் இருக்கு என்பதற்காக காவல்துறையினரும் வரம்பு மீறி நடந்துகொள்ளக்கூடாது. 

 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் வெட்கப்படவேண்டிய ஒன்று.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.