"கஞ்சி காளஹஸ்தி யானைக்காவலு வண்ணாமலை
மிஞ்சி தில்லை காசி ராமேஸ்வரம் மதுரையும்
துஞ்சி யாவும் சுற்றி தூரதூரமும் திரிந்த பேர்
எஞ்சிய கதிபெறவும் ஈசன்பதம் சேர்வ ரோ.
(சிவவாக்கிய சித்தர்)
அகத்தியர்: இந்த தமிழ்ப் பகுத்தறிவுச் சபையில் கூடியிருக்கும் அனைத்து சைவ சித்தர் பெருமக்களுக்கும் எனது ஆசிகள். எதனையும் பகுத்தறிந்து அனுபவத்தில் உணர்ந்து செயல்படுபவர் நமது தேரையர். மனிதர்களின் உடல், உயிர், ஆன்மா செயல்பட சக்திகளை, இந்த பிரபஞ்ச வெளியி-ருந்து நம்முள் கொண்டுவரும் கருவிகளான நமது ஐம்புலன்களைப் பற்றி, அவர் கூறுவதைக் கேட்டுவருகிறோம். இன்று மூக்கின் செயல்நிலை பற்றியும், அதன்வழியாக உடம்பினுள் சென்று சக்தி தந்து, நம்மை இயக்கும் மூச்சுக்காற்றைப் பற்றியும் அவர் கூறும் உண்மைகளை அறிவோம். தேரையர் பெருமகனே, இனி தாங்கள் கூறுங்கள்.
தேரையர்: ஒவ்வொரு மனிதனும் அனைத் திலும் அதன் உண்மைத் தன்மையை தன் புத்தியினால் புரிந்து, சித்தம் தெளிந்து, பின் செயல்பட்டு, சிறப்பான வாழ்வை அமைத்துக்கொள்ளவேண்டும் என்னும் உண்மைத் தத்துவத்தை எங்களுக்கு போதித்த ஆசானே, தங்களை என் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
மூக்கின் செயல்பற்றி, அறிவிற்சிறந்த சித்தர் பெருமக்கள் முன்பே இச்சபையில் தெளிவாகக் கூறியுள்ளார்கள். இப்போது மூக்கின் அமைப்பு நிலை, துவாரங்கள் வழியாக உடலின் உள்ளே செல்லும் உயிர்க்காற்றின் செயல்பாடுகளைப் பற்றி நான் அறிந்தவற்றைக் கூறுகிறேன்.
முகத்திலுள்ள உறுப்புகளில் கண்கள், வாய், நாக்கு ஆகியவை முகத்துடன் ஒட்டி, உள்ளடங்கி இருக்கும். ஆனால் பிரபஞ்சத்தி-ருந்து காற்றின் மூலம் சக்தியை நம்முள் கொண்டுவரும் காதுகள், மூக்கு ஆகிய இரண்டும் முகத்தி-ருந்து நீண்டிருக்கும்.
உடல் இயங்க உயிர்தான் காரணமாக உள்ளது. அந்த உயிரைத் தருவது அவரவர் சுவாசக் காற்றுதான். அந்த மூச்சுக் காற்றினால் தான் உள்ளுறுப்புகள், வெளியுறுப்புகள் என அனைத்தும் இயங்குகின்றன.
கோரக்கர்: தேரையர் பெருமானே, உயிர்க்காற்று முதன்முதலாக எந்த வழியாக, எப்போது, எப்படி உடலுக்குள் வந்து சேர்கிறது? அது உட-ல் எப்படி செயல்படுகிறது?
தேரையர்: கோரக்கர் பெருமானே. ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்தில் உருவாகி வளரும்போது, தாய்க்கும் சேய்க்கும் தொடர்பை உண்டாக்கி வைப்பது அந்தக் குழந்தையின் தொப்புள் கொடிதான். கர்ப்பத்தில் வளரும் குழந்தை தன் தொப்புள் கொடி வழியாகத்தான் தன் உடல் வளரத் தேவையான உணவு, நீர், காற்று என அனைத் தையும் தாயிடமிருந்து பெற்றுக்கொண்டு வளர்ச்சியடைகிறது.
தாயின் கர்ப்பத்தில் முழுமையாக வளர்ந்து, தாயைவிட்டுப் பிரிந்து பூமியில் பிறந்தவுடன், தாயையும், குழந்தையையும் இணைத்திருந்த தொப்புள் கொடி துண்டிக்கப்படும் அதே நொடியில், அவரவர்க்குரிய உயிர்க்காற்று, அந்த தொப்புள் கொடி வழியாக, உட-னுள்ளே சென்றுவிடும். இதுதான் உயிர்க்காற்று உட-னுள் வரும் நேரம்.
அவ்வாறு உள்ளே சென்ற உயிர்க்காற்று இதயத்தை இயங்கவைத்து உட-லுள்ள தசை, நரம்பு, ரத்தம் என அனைத்தையும் இயங்கச் செய்யும். அதன்பின்புதான் குழந்தையின் உட-ல் அசைவுண்டாகும். கை, கால்களை உதறும்; வாய் கத்தும்; கண்கள் திறக்கும்; மூக்கின் வழியாக மூச்சுக்காற்று ஓடும். இந்த பிரபஞ்சத்தின் வெளியே உலாவிக்கொண்டிருந்த உயிர்க்காற்று, முதன்முத-ல் ஒரு குழந்தையின் உட-னுள்ளே புகுவது அதன் தொப்புள் கொடி வழியாகத்தான்.
(இன்றைய நாளிலும், ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடந்து குழந்தை பிறந்து, அதன் அசைவு, உணர்வுகள் இல்லாம-ருந்தால், அந்தக் குழந்தையின் கால்கள் இரண்டையும் ஒன்றாகப் பிடித்து, குழந்தையை தலைகீழாகத் தொங்கச் செய்து லேசாகக் குலுக்குவார்கள். ஏனென்றால், தொப்புள் கொடி வழியாக உள்ளே புகுந்த உயிர்க்காற்று, இதயத்தை அடையமுடியாமல் ஏதாவது தடைகள் இருந்தாலோ அல்லது காற்று செல்லும் குழாயில் சுருக்கங்களோ தடைகளோ இருந்தாலோ, அது சரியாகத்தான் இதுபோன்று செய்வார்கள்.)
உயிர்க்காற்று உட-னுள்ளே நுழைந்து, உணர்வுகள் உண்டான நொடியில், உடம்பிலுள்ள ஒன்பது துவாரங்களும் திறந்து கொண்டு செயல்படத் தொடங்கும். ஆனால் தொப்புள் கொடியை முடிச்சுப் போட்டு, அதன் துவாரத்தை அடைத்துவிடுவார்கள். அதன்பிறகுதான் மூச்சுக்காற்று மூக்கு துவாரங்கள் வழியாக, மரணமடையும் காலம்வரை உள்ளேயும் வெளியேயும் வந்து போய்க்கொண்டிருக்கும்.
மூக்கின் அமைப்பைப் பற்றி இன்னும் ஒரு முக்கியமான உண்மையை அறிவோம். வடபுலத்தில் வாழும் ஒரு சமயத்தாரின் புராணக் கதைகளில் தெய்வம் என்றும், அதன் உருவ அமைப்பை சிவ-ங்கம் என்றும் கூறி, அந்த -ங்கத்தில் சிவன் என்ற சக்தி செயல்படுவதாகக் கூறுகின்றார்கள்.
சித்தர்களாகிய நாம், நமது உடலையே ஆலயமாகவும், அவரவர் உயிர்க்காற்றையே தெய்வமாகவும், அந்த உயிர்க்காற்று நமக்குள்ளே வரும் வழியான மூக்கினையே -ங்க உருவமாகவும் கொண்டு, காற்றினையே கடவுளாக, வாசியோகம்மூலம் வழிபாடு செய்துவருகிறோம்.
சிவன் என்ற தெய்வத்தின் உடலமைப்பில் ஒருபாதி ஆணாகவும் மறுபாதி பெண் ணாகவும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
இதில் ஆண் உருவமுள்ள பகுதி சிவன் என்றும், பெண் உருவமுள்ள பகுதி சக்தி என்றும் கூறுகின்றனர். பாமரமக்கள் கடவுள் பற்றிய உண்மையறியாமல், கல், செம்பு, மண் போன்றவற்றால் பலவிதமான உருவங்களைச் செய்து, அதற்குப் பலவிதமான பெயர்களைச் சூட்டி வழிபட்டுவருகின்றனர்.
சித்தர்களாகிய நாம் மனிதனின் மூக்கினை -ங்கமாகவும், அந்த மூக்கின் வலப்பக்க துவாரத்தை வடகலை, சூரியகலை, சிவகலை என்றும்; இடப்பக்க துவாரத்தை இடகலை, சந்திரகலை, சக்திகலை என்றும் கூறி, வலப்பக்கம் ஓடும் மூச்சுக் காற்றினை ஆண் காற்றென்றும், இடப்பக்கத்தில் ஓடும் மூச்சுக் காற்றினை பெண் காற்றென்றும் அறிந்தோம்.
மூக்கின் வலப்பக்க துவாரத்தில் ஓடும் சிவகலை ஆண்காற்று, ஒருவர் வெளியில் செய்யும் செயல்களுக்குத் தேவையான சக்தியைத் தந்து செயல்படச் செய்கிறது. இடப்பக்கம் ஓடும் சக்தி என்ற சுவாசக் காற்று, நமது உடலுக்குத் தேவையான பிராண சக்தியைப் பிரபஞ்ச வெளியி-ருந்து நமக்குள்ளே கொண்டுவந்து சேர்க்கிறது. பெண்காற்று உடலுக்கு சக்தியையும், ஆண் காற்று உழைக்கும் சக்தியையும் தருகிறது.
சித்தர்கள், காற்றின் சக்தியை அறிந்து, வாசியோகம், தியானம், தவம், தாரணை செய்யும்போது, நமது முகத்தில் -ங்க வடிவமாக உள்ள மூக்கினைப் பார்த்தும், அந்த மூக்கின் வலது, இடது துவாரங்களில் ஓடும் மூச்சுக்காற்றினைக் கடவுளாக அறிந்தும் வழிபாடு செய்துவருகிறோம்.
வாசி என்பது காற்றினைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்த உண்மையை அறியாத பாமரமக்கள் கற்சிலைகளில் தெய்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். நாம் நமது மூச்சுக் காற்றுமூலம் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி நம்முள் வந்து சகல சக்திகளையும் தருமென்பதை அறிவால்- அனுபவத்தால் அறிந்து, வாசியோகம்மூலம் அனைத்து சக்திகளையும், அட்டமகா சக்திகளையும் அடைந்துள்ளோம்.
இந்த காற்று சக்தி இல்லையென்றால், இந்த பிரபஞ்சத்திலும், அண்டவெளியிலும் எதுவுமே இல்லை. இந்த அண்டத்திலுள்ள பூமி முதலான அனைத்து கிரகங்களும் இயங்குவது காற்றினால்தான். பூமியில் அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வதும், மேகம் உருவாவதும், மழை பெய்வதும், இடி இடிப்பதும், இரவு- பகல் உண்டாவதும்- இன்னும் இயற்கையில் உண்டாகும் அனைத்து செயல்களும் காற்றின் மூலம்தான் நடைபெறுகின்றன.
இந்த அண்டவெளியிலும், அதல பாதாளத்திலும், பூமிக்கு மேலும் கீழும், மற்றும் தூணிலும், துரும்பிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது காற்றுதான். மண், நீர், நெருப்பு என அனைத்திலும் கலந்திருப்பது சித்தர்களின் கடவுளான காற்றுதான். எந்த ஒன்று அகன்று, உயர்ந்து, எங்கும் வியாபித்து, இந்த பிரபஞ்சத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இயங்குகின்றதோ, அனைத்தையும் இயங்கச் செய்கின்றதோ, அந்த மாபெரும் சக்தியே கடவுளாகும். காற்று அசைவால்தான் அனைத்தும் அசையும்; காற்று அசைவில்லை என்றால் எதுவும் அசையாது. அனைத்திற்கும் உயிர் அசைவைத் தந்து, கருணை புரிந்து, ஆக்கல், காத்தல், அழித்தல் என முத்தொழிலையும் செய்யும் காற்றுதான் கடவுள்.
ஒரு மனிதனின் உடலினுள்ளே காற்றினால் உண்டாகும் செயல்களைப் பற்றி நாளை சபையில் அறிவோம்.
"சித்தாகுஞ் சித்தியுமா மெட்டெட் டாகுந்
திறமாக நின்றவர்க்கு மந்திரம் சித்தி
வெத்தான வேதமந் திரத்தைப் பாவி
சலசலென பேசிச்சே விப்பார் கோடி
கத்தாதும் நாய்போல கத்தி யென்ன
காசுக்கு மாகாது சித்தி யில்லை
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சே
மோசமிந்த வேதமெல்லாம் பொய்யென் பாரே.'
(சட்டைமுனிச் சித்தர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)