"பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ
பூமி வலஞ் செய்ததினாற் புண்ணிய முண்டோ
ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே.'
(பாம்பாட்டிச் சித்தர்)
அகத்தியர்: சித்தர் பெருமக்கள் அனைவரும் வந்துவிட்டீர்களா? தமிழ்ச் சபையைத் தொடங்கலாமா?
போகர்: தலைமை ஆசானே, அனைவரும் வந்துவிட்டோம். தங்களின் வருகைக் காகத்தான் காத்திருக்கிறோம். சபையைத் தொடங்கலாம்.
அகத்தியர்: தேரையர் சித்தரே, ஆன்மா பற்றி நீங்கள் தெளிவுபடுத்தலாம்.
தேரையர்: அகத்தியர் பெருமானே, உடலிலுள்ள இயக்கும் உறுப்புகளைப் பற்றி நேற்றுக் கூறினேன். இன்று இயங்கும் உறுப்பு களையும், இயக்கப்படும் உறுப்புகளையும் பற்றிக் கூறுகின்றேன்.
உடலிலுள்ள தொண்டை (உணவு, காற்றுப்பாதை), இதயம், வயிறு, சிறுநீர்ப்பை, மலப்பை ஆகியவை இயங்கும் உறுப்புகளாகும்.
மூக்கினால் சுவாசிக்கப்படும் காற்று, மூச்சுக்குழல் வழியாக இதயத்தை அடைந்த வுடன், யாருடைய உத்தரவையும் எதிர்பார்க் காமல் தனது இயக்கத்தைத் தொடங்கிவிடும். சுவாசக் காற்று இல்லையென்றால் இதயம் இயங்காது. எனவே இதயம் இயங்கும் உறுப்பாகும்.
வாயினால் உண்ணப்படும் உணவு, நீர் ஆகியவை உணவுக் குழாய் வழியாக வயிற்றுப் பகுதியை அடைந்தவுடன், யாருடைய உத்தரவையும், கட்டளையையும் எதிர்பார்க்காமல் உணவை அரைத்து, சீரணித்து உடல் இயங்கத் தேவையான சக்தியை உடலுக்குத் தந்துவிடுகிறது. உண்ணும் உணவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கழிவுகள் மலப்பையை அடைந்தவுடன், அதனை வெளியேற்றும் உணர்வுகளை உண்டாக்கி நம்மை வெளியேற்றச் செய்து விடுகிறது. இல்லையேல் தானாகவே வெளியேற்றிவிடும். இதேபோன்று நாம் தாகத்திற்குக் குடிக்கும் நீரின் கழிவும், சிறுநீர்ப்பையிலிருந்து வெளியேற்றப் படுகிறது. இவை இயங்கும் கருவிகளாகும்.
உடம்பிலுள்ள கைகள், கால்கள், ஆண்குறி, பெண்குறி ஆகியவை தானாக இயங்க முடியாத உறுப்புகளாகும். மூளையின் கட்டளையால், உணர்வுகளின் உந்துதலால் மற்ற ஒன்றுடன் இணைந்து இயக்கப்படும் கருவிகளாகும்.
போகர்: இயக்கப்படும் கருவிகள் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கூறுங்கள்.
தேரையர்: கைகள் தானாக இயங்காது. உணவை உண்ணும்போது, அந்த உணவுப் பொருளைப் பிடித்து உண்கின்றது. ஒரு தொழில், வேலைகளைச் செய்யும்போது மற்றொரு கருவியைப் பிடித்தே அதனைக் கொண்டு தன் வேலையைச் செய்கிறது. சண்டையிடும்போது, ஒரு ஆயுதத்தைப் பிடித்தே சண்டையிடுகிறது. மற்றவர்களுக்கு ஒரு பொருளைத் தரும்போது, அந்த பொருளைக் கையில் பிடித்தே தருகின்றோம்.
ஒரு பொருள் இருந்தால்தான் அதனைக் கைகளால் பிடித்து எடுக்கமுடியும். கைகள் மற்றொரு பொருளை எடுக்கும் வேலையை யும், பிடிக்கும் வேலையையும் செய்யும் கருவிகளாகும்.
கால்கள் நிற்பது, நடப்பது, ஓடுவது, உட்காருவது போன்ற செயல்களைச் செய்கிறது. இந்த செயல்களைச் செய்வதற்கு மண்ணை ஆதாரமாகப் பற்றிக்கொண்டு செயல்படுகிறது.
ஒரு ஆணின் குறி, உணர்வுகளால் உண்டாகும் மோகத்தை போகம் செய்து தணித்துக்கொள்ள ஒரு பெண்ணின் குறியை நாடுகிறது. ஆண்குறி தனித்து போகம் செய்து தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முடியாது. அதேபோன்று ஒரு பெண் தன் உடல் இச்சையை ஒரு ஆணின் உதவியால் தான் தன் போக சுகத்தை அடைந்து, விந்து தரும் சுகத்தையும், வம்சவிருத்தியையும் அடைய முடியும்.
மூளையின் கட்டளையால், உணர்வுகளின் உந்துதலால் இயக்கப்படும் இந்தக் கருவிகள் அனைத்தும் முழுமையாக இயங்கினாலே அவன் முழு மனிதனாகிறான்.
போகர்: தேரையர் சித்தரே, உடம்பிலுள்ள அனைத்து உறுப்புகளையும் இயக்கி செயல்படவைப்பது மூளைதான் என்று கூறினீர்கள். அந்த மூளையை இயக்குவது உடலில் எந்த உறுப்பு என்பதைக் கூறுங்கள்.
தேரையர்: இந்த பூமியில் பிறந்து வாழும் ஒவ்வொரு மனிதனையும், விலங்கு, பறவை என அனைத்து உயிரினத்தையும் இயக்குவதும், இயங்கச் செய்வதும் அவரவரின் ஆன்மாதான். இந்த ஆன்மா அவரவர் உடம்பின் உள்ளேயும் இல்லை; வெளியிலும் இல்லை. ஆன்மா எலும்புமல்ல; தசையுமல்ல. உயிருமல்ல; உடம்புமல்ல. உடம்பில் ஒரு உறுப்பாகவும் இல்லை. இது அந்நியமாக இருந்து, அவ்வப்போது உயிர், உடலுடன் சேர்ந்து மாறிமாறி மனிதனை இயக்குவது.
போகர்: தேரையர் பெருமானே, உடலில் ஒரு உறுப்பாகவும் இல்லாமல், உடல், உயிருக்கு நிரந்தரத் தொடர்புமில்லாமல், அந்நியமாக இருந்து அவ்வப்போது மனிதர்களிடையே மாற்றங்களை உண்டாக்கிச் செயல்படவைத்துக் கொண்டி ருக்கும் இந்த ஆன்மாவைப் பற்றிய உண்மைத் தன்மையையும், அது செயல்படும் நிலையை யும் விளக்கமாக் கூறுங்கள்.
தேரையர்: சித்தர் பெருமக்களே, உடலிலுள்ள அக உறுப்புகளும், புற உறுப்புகளும் தாயின் கர்ப்பத்திலேயே வளர்ச்சிபெற்று உருவாகிறது. பூமியில் பிறந்த பிறகு உண்ணும் உணவால் வளர்ச்சியடை கிறது. ஆனால் ஆன்மா ஒரு மனிதன் பிறப் பிற்குப்பிறகு அவனுளிருந்து வெளிப்படுகிறது. உடல் தந்தையின் விந்து, தாயின் கருமுட்டை இணைவினால் உருவாக்கப்படுகிறது. ஆனால் ஒரு மனிதன் ஆன்மாவின் செயல் நிலைப் பாட்டை அவனே உருவாக்கிக் கொள்கிறான்.
அவரவர் ஆன்மாவின் செயல்பாடு அவரவரா லேயே தீர்மானித்து செயல்படுத்தப்படுகிறது.
ஒரு மனிதனின் ஆன்மா, அவரவர் உணர்வு களால் உண்டாகும் எண்ணங்களால், பற்று, பாசம், இரக்கம், கருணை, அன்பு, ஆசை, விருப்பம் மற்றும் வெறுப்பு, துரோகம், எதிர்ப்பு, பிடித்தமின்மை, கோபம், குரோதம், பொறாமை, கள்ளம், ஏமாற்றுதல், பொய் என இதுபோன்று பலவகை குணங்களால் மனிதனை செயல்பட செய்கின்றது.
ஆன்மா உடலில் ஒரு தனித்த உறுப்பாக இல்லை. உயிருள்ள ஒவ்வொரு ஜீவனின் உடம்பிலுள்ள உறுப்புகளால் உணர்வுகளை உருவாக்கி, அந்த உணர்வுகள் மூளைப் பகுதியை அடைந்து, ஆன்மாவை செயல்படச் செய்கிறது என்பதே உண்மை. உடலில் ஒரு உறுப்பாக இல்லாத ஆன்மாவைத்தான் மனம், உள்ளம், இதயம் என இன்னும் பலவிதமான பெயர்களில் மனிதர்கள் கூறிக்கொள்கிறார்கள்.
போகர்: தேரையர் சித்தரே, ஆன்மா உடலிலுள்ள எந்த உறுப்புகளால் உருவாக்கப் படுகிறது?
தேரையர்: ஆன்மாவை பஞ்சபூதங்களும், இந்த பூமியின் வெளிப்புறத்திலுள்ள பொருட்களும், பலவிதமான காட்சிகளும், கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, வாய், என இந்த உறுப்புகள்மூலம் வெளிப்புறத் திலிருந்து பெறப்படும் உணர்வுகளால், இந்த உறுப்புகள் ஆன்மாவை செயல்படச் செய்கின்றன. வயிற்றுப்பகுதி பசி உணர்வை யும், உடலில் உண்டாகும் நோய் வலி உணர்வுகளையும் உண்டாக்கி ஆன்மாவை செயல்படச் செய்கின்றன.
போகர்: சித்தர் பெருமானே, பஞ்ச பூதங்கள், முகத்திலுள்ள உறுப்புகள் ஆகியவை ஆன்மாவை எப்படி செயல்பட வைக்கின்றன என்பதை இன்னும் சற்று விளக்கமாகக் கூறுங்கள்.
தேரையர்: ஒரு மனிதன் வெளிப்புறத் திலுள்ள மனிதர்கள், உயிரினங்கள், பொருட்கள், பலவகையான காட்சிகள், வண்ணங்கள் என இந்த பூமியில் உள்ளவை அனைத்தையும் தன் கண்களால்தான் பார்க்கிறான். உண்மையில் கண்கள் வெளிப்புறத்தில் உள்ளவற்றைப் பார்த்து, அவற்றை நமது மூளைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு கருவிதான். கண்கள் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி (ஒளி, வெளிச்சம்) சக்தியின் அம்சமாகும்.
கண்களுக்கும், மூளைக்கும் நரம்புகள் மூலம் தொடர்புண்டு. நாம் பார்க்கும் அனைத் தும், அந்த பார்வை நரம்புகளின்மூலம் மூளையில் பதிவாகி, அந்த காட்சிகள்மூலம் நமக்கு உணர்வுகளை உண்டாக்குகிறது. இந்த பார்வை நரம்புகள் செயல்படவில்லையென்றால், நமது கண்களால் எதைப் பார்த்தாலும் நமக்கு ஒன்றும்தெரியாது. கண்களுக்கும், மூளைக்கும் தொடர்பைத்தரும் பார்வை நரம்புகள் சரியாக, ஆரோக்கியமாக இல்லாதவர்கள் குருடர்களாகவும், பார்வைக் கோளாறுகள் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த பார்வை நரம்புகள்மூலம் நமது மூளையில் பதிவாகும் காட்சிகள், நாம் கண்களைமூடி அவற்றை நினைத்த போதும் நம்முள்ளே காணமுடியும்; அந்த பிம்பங்களை உணரமுடியும். கண்கள் ஒளியின் (வெளிச்சம்) சக்தியால் அனைத் தையும் காண்கிறது.
போகர்: தேரையர் சித்தரே, கண்களால் ஒன்றைப் பார்ப்பதால், ஆன்மா எப்படி செயல்படுகிறது என்பதை இன்னும் தெளிவாகக் கூறுங்கள்.
அகத்தியர்: போகர் சித்தரே, சித்தர்கள் வாசி, மூச்சுப் பயிற்சி செய்யும் நேரம் வந்து விட்டது. தேரையர் சித்தர் கூறிய விளக்கங் களைக் கேட்டதில் நேரம் போனதே தெரிய வில்லை. உங்களின் இந்த கேள்விக்கு நாளை தமிழ்ச்சபையில் விளக்கம் அறிந்து கொள்வோம். இன்றைய தமிழ்ச்சபையை இத்துடன் முடித்துக் கொள்வோம்.
"கதை யாச்சே யுலகத்தில் ஞானம் வாதங்
கைகண்டாற் சொல்வாரோ கல்போல் நெஞ்சே
அதையாச்சே யிதையாச்சே யென்று சொன்னால்
அவன் கையி லொன்றுமில்லை யறிந்து
கொள்ளே
உருவாச்சே அரனுடனே தொழிலே நித்தம்
உருவான வன்வாதி யுண்மை கேளு
சுதையாச்சே யானாலும் பொங்கி யுள்ளம்
சுடுவான்பார் ராசயோகி ஞானி தானே.'
(சட்டைமுனிச் சித்தர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!