சந்தானம் நடித்த "சர்வர் சுந்தரம்', "டகால்டி' ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியாகி, பஞ்சாயத்து நடந்து, ஒருவழியாக முதலில் ரிலீசானது "டகால்டி'. ஆனால், "டகால்டி' ஊத்திக்கொண்டதால், "சர்வர் சுந்தரத்தை' ரிலீஸ் பண்ண முடியாமல் தவிக்கிறார் தயாரிப்பாளர் செல்வக்குமார்.
காமெடி சூரி மதுரையில் ஓட்டல்கள் திறந்ததையொட்டி, கஞ்சா கருப்புக்கும் ஓட்டல் திறக்கும் ஆசை வந்துவிட்டதாம். அதுவும் கேஸ் அடுப்பு இல்லாமல் விறகு அடுப்பில் சமைத்தால் தனி ருசி என்பதாலும், பணம் போட்டா மட்டும் பத்தாது, மாஸ்டராவும் இருக்கணும் என்பதற்காகவும் சமையல் கலையைக் கற்றுவருகிறா ராம் கஞ்சா கருப்பு. இதற்காக ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் உடையார்பாளையத் திலுள்ள தனது நண்பரின் ஓட்டலில் புரோட்டா போட டிரெயினிங் எடுத்துக்கிட்டிருக்காரம் கஞ்சா கருப்பு.
குணச்சித்திர நடிகர் பொன்வண்ணன் இப்போது "சித்தி-2' சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் ஆவணப்படம் ஒன்றை எடுத்து வருகிறார். இந்த ஆவணப்படத்தின் ஷூட்டிங் ஜெயங்கொண்டம், கும்பகோணம் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
"கொரியன்' படம் ஒன்றை தமிழில் எடுத்துவருகிறார் வெற்றி மாறன். ஹீரோயினாக நடிக்க ஆண்ட்ரியாவிடம் வெற்றிமாறன் பேசிய போது, ""சார் வடசென்னைல காட்டுனமாதிரி ஓவர் கிளுகிளுவா காட்டிராதீங்க'' என்றாராம் ஆண்ட்ரியா. இப்படத்திற்கான செட் போடும் வேலைகள் கிண்டியில் நடக்கின்றன.
""என்கூடவே இருந்த பழைய நண்பர்களின் பேச்சைக் கேட்டதால தான் ஏகப்பட்ட கடனாளி யாகிட்டேன், வாங்கிப் போட்ட சொத்துகளையெல்லாம் விற்கும் நிலைக்குப் போயிருச்சு'' என தனது புது நண்பர்களிடம் புலம்பிவருகிறாராம் விஜய் ஆண்டனி.
விஷாலை வைத்து "இரும்புத் திரை'-யை டைரக்ட் பண்ணிய பி.எஸ்.மித்ரன், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து "ஹீரோ' டைரக்ட் பண்ணினார். அந்தப் படம் சரியாகப் போகாவிட்டாலும் இப்போது கார்த்தியிடம் கதை சொல்வதற்காகக் காத்திருக்கிறார்.
அதர்வா- ப்ரியா பவானி சங்கர் காம்பினேஷனில் ஸ்ரீகணேஷ் டைரக்ட் பண்ணும் "குருதி ஆட்டம்' படம் செம ஸ்பீடாக முடிந்துள்ளது. ""ராதிகா சரத்குமார், ராதாரவி இவர்களுடன் பணிபுரிந்தது ஆசிர்வதிக்கப்பட்ட அனுபவமாக இருந்தது. "8 தோட்டாக்கள்' படம்போல் "குருதி ஆட்ட'மும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்'' என்கிறார் டைரக்டர் ஸ்ரீகணேஷ்.
தனது சொந்த பேனரான அவ்னி மூவிஸ் சார்பில் "அரண்மனை-3'-ஐ ஸ்டார்ட் பண்ணிவிட்டார் சுந்தர் சி. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள ‘வான்கெனர் பேலஸ்’ என்ற பிரம்மாண்ட அரண்மனையில் 30 நாட்கள் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தப்படுகிறது. ஹீரோவாக ஆர்யா, ஹீரோயின்களாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியாவும் காமெடி ஏரியாவுக்கு விவேக், யோகிபாபு, மனோபாலா ஆகியோரும் கவர்ச்சிப் போர்ஷனுக்கு சாக்ஷி அகர்வாலும் இருக்கிறார்கள். வழக்கம்போல் சுந்தர் சி.யும் வெயிட்டான கேரக்டரில் நடிக்கிறார்.
"கழுகு', "கழுகு-2'-வைத் தொடர்ந்து ஹீரோ கிருஷ்ணாவும் டைரக்டர் சத்யசிவாவும் மூன்றாவது முறையாக "பெல்பாட்டம்' படத்தில் இணைகிறார்கள். கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் கமிட் ஆகியுள்ளார். "தீதும் நன்று' படத்தையடுத்து சார்லஸ் இமானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் "பெல்பாட்டம்'. போலீஸ் வேலையில் சேரமுடியாமல் போனதால் தனியே துப்பறியும் ஏஜென்சி நடத்தி குற்றங் களைக் கண்டுபிடிப்பவராக நடிக்கிறார் கிருஷ்ணா.