லகில் மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் பிறவிப்பயனை அடையவும், தங்களது வம்சம் தழைக்கவும் வாரிசுகளை விருத்திசெய்ய வேண்டும்.

பிரபஞ்ச நியதி இவ்வாறிருக்க, திருமணமான தம்பதிகளில் அறுபது சதவிகிதத்தினருக்கு உடனே குழந்தை பாக்கி யம் கிடைத்துவிடுகிறது. எஞ்சிய நாற்பது சதவிகிதத்தினர் குழந்தை பாக்கியமின்மையால் சங்கடத்து டன் வாழ்கிறார்கள். ஒருகாலத் தில் எண்பது சதவிகிதமாக இருந்த குழந்தைப் பிறப்பானது தரமற்ற உணவுப் பழக்கம், சுதந்திரமான முற்போக்கு வாழ்க்கை போன்ற பல்வேறு காரணங்களால் அறுபது சதவிகிதமாகக் குறைந்து விட்டது வருத்தப்படவேண்டிய செயலென்றே கூறவேண்டும்.

ஜோதிடரீதியாக ஒருவரின் புத்திர பாக்கியத்தை புத்திரகாரகரான குருவும், ஐந்தாமிடமெனும் பூர்வபுண்ணிய ஸ்தானமும், ஒன்பதாமிடமெனும் பாக்கிய ஸ்தானமுமே தீர்மானிக்கின்றன.

இனி, குழந்தை பாக்கியத்தைத் தடைசெய்வதற்கான கிரக அமைப்புகளைக் காணலாம்.

Advertisment

* லக்னத்திற்கு ஐந்தாமதிபதி நீசம், வக்ரம், அஸ்தமனம் அடைதல்.

* ஐந்தாமதிபதிக்கு லக்னரீதியான பாதகாதிபதி சம்பந்தம் இருப்பது.

* ஐந்தாமதிபதி 6, 8, 12-ல் மறைதல்.

Advertisment

* ஐந்தாமதிபதி நின்ற வீட்டின் அதிபதி நீசம்பெறுவது அல்லது 6, 8, 12-ல் மறைவது. ஐந்தாம் அதிபதிக்கு சனி, ராகு/கேதுவின் சம்பந்தம் இருப்பது.

* ஐந்தாமிடத்திற்கு செவ்வாய், சனி , புதன், ராகு- கேது போன்ற கிரகங்கள் சம்பந்தம்.

* ஐந்தாமிடத்தில் தனித்த குரு நிற்பது.

* புத்திரகாரகன் குருவுக்கு செவ்வாய், புதன், சனி, ராகு- கேதுவின் சம்பந்தம்.

* குரு லக்ன பாதகாதிபதி சம்பந்தம் பெறுவது.

* குரு வக்ரம், அஸ்தங்கதம் அடைதல்.

* குரு மற்றும் ஐந்தாமதிபதிக்கு திதிசூன்ய பாதிப்பு.

* செவ்வாய் தோஷமுள்ள ஜாதகத்தை செவ்வாய் தோஷமில்லாத ஜாதகத்துடன் இணைப்பது.

* ராகு- கேது தோஷமுள்ள ஜாதகத்தை ராகு- கேது தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது.

* ஆண்- பெண் ராசி சஷ்டாஷ்டகமாக அமைவது.

* குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பாதிப்பது-

போன்ற பல்வேறு ஜோதிடரீதியான காரணங்களால் குழந்தைப் பிறப்பு தடைபடுகி றது. (குரு நீசம்பெற்றால் குழந்தை பிறக்காது என்ற தவறான கருத்து பலரிடம் இருந்து வருகிறது. குரு நீசம்பெற்றவர்கள் பலர் குழந்தை கள் பெற்று மகிழ்சியாக வாழ்ந்துவருகிறார் கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.)

பொதுவாக குழந்தையின்மையால் மனவேதனை அனுபவிப்பவர்கள் குலதெய்வ வழிபாட்டையும், பித்ருக்கள் பூஜையையும் முறைப்படுத்த வேண்டும். அத்துடன் லக்னரீதியான ஐந்தாமதிபதிக்குப் பரிகாரம் செய்தாலே பாதிப்பு நீங்கும்.

அதன்படி ஐந்தாமதிபதி அல்லது ஐந்தில் நிற்கும் கிரகங்களுக்கான பரிகாரங்கள்...

சூரியன்

ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தில் பொங்கல் வைத்து, சிவ-ங்கத்திற்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி, ஒற்றைப்படை எண்ணிக்கையில் (10, 100, 1000) காணிக்கை செலுத்தவேண்டும். பத்துபேருக்கு சிவப்புநிற ஆடையும் கோதுமையும் தானம்தர நன்மை உண்டாகும்.

சந்திரன்

திங்கட்கிழமை அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்வதுடன், பச்சரிசிமாவு, வெல்லம் கலந்த பிரசாதம் படைக்கவேண்டும். இரட்டைப் படை எண்ணிக்கையில்( 20, 200, 2000) காணிக்கை செலுத்தவேண்டும். இரண்டு நபர்களுக்கு வெண்நிற உடையும் நெல்லும் தானம் தரவேண்டும்.

செவ்வாய்

செவ்வாய்க் கிழமை முருகனுக்கு சிவப்புநிற வஸ்திரம், புஷ்பம் அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, ஒன்பது எண்ணிக்கையில் காணிக்கை செலுத்தவும். ஒன்பது நபர்களுக்கு சிவப்புநிறத் துணியும், சிவப்புத் துவரையும் தானம் தர, மாற்றம் உண்டாகும்.

parigaram

புதன்

புதன்கிழமை நரசிம்மருக்கு பச்சை வஸ்திரம், துளசி மாலைசாற்றி, வெண் பொங்கல் படைக்கவேண்டும். ஐந்து எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த வேண்டும். ஐந்து பேருக்கு பச்சைநிற ஆடை யுடன் பாசிப்பயறு தானம் தருவது சிறப்பு.

குரு

வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி கொண்டைக்கடலை மாலை அணிவித்து, மூன்று எண்ணிக்கையில் காணிக்கை செலுத்தவேண்டும். மூன்று நபர்களுக்கு மஞ்சள்நிற ஆடையும் கொண்டைக்கடலையும் தானம் வழங்கவும்.

சுக்கிரன்

வெள்ளிக்கிழமை சக்ரத்தாழ்வாருக்கு வெண்பட்டு அணிவித்து, கல்கண்டு அல்லது வெள்ளை மொச்சை பிரசாதம் படைப்பதுடன் ஆறு எண்ணிக்கையில் காணிக்கை செலுத்தவேண்டும். ஆறு நபர்களுக்கு வெள்ளைநிற ஆடையும், இனிப்பு உணவும் தானம் தர நல்லது நடக்கும்.

சனி

சனிக்கிழமை சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி எள்ளுருண்டை நிவேதனம் செய்து, எட்டு எண்ணிக்கையில் காணிக்கை செலுத்தவேண்டும். எட்டு ஊனமுற்றோருக்கு உணவு, உடை தானம்வழங்க வேண்டும்.

ராகு

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30- 6.00 மணிக்குள் புற்றுக்கோவி-ல் அல்லது வளரும் புற்றருகில் அரைமணி நேரம் அமர்ந்து ஆத்மார்த்த பிரார்த்தனை செய்யவேண்டும். அல்லது துர்க்கை, காளிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடலாம். நான்கு எண்ணிக்கையில் காணிக்கை செலுத்தலாம். நான்குபேருக்கு நீலநிற ஆடையும் கருப்பு உளுந்தும் தானம் தரலாம்.

கேது

திங்கட்கிழமை விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்து, அறுகம்புல் மாலை அணிவிக்கவும். ஏழு எண்ணிக்கையில் காணிக்கை செலுத்துடன், ஏழுபேருக்கு பலவண்ண ஆடையும் கொள்ளும் தானம் தரவேண்டும்.

எந்தப் பிரச்சினையானாலும் கர்மாரீதியாக உற்று நோக்கினால் நிரந்தரமான தீர்வுகொடுக்க முடியும். இதனை ஒரு உதாரண பிரசன்ன ஜாதகத்தின்மூலம் பார்க்கலாம்.

17-12-2019 அன்று காலை 11.50-க்கு பார்க்கப்பட்ட சோழிப் பிரசன்னம்.

நட்சத்திரம் மகம். உதய லக்னம் கும்பம். சோழி லக்னம் சிம்மம். பிரசன்னம் பார்க்க வந்த தம்பதிகள் கொண்டு வந்த பூஜைப் பொருட்கள், குலதெய்வ அனுக்கிரகத்தை முன்னிருத்தின.

தம்பதிகளுக்கு கூறிய பலன்கள்

சோழி லக்னத்தை குரு பார்த்ததால் குழந்தை பாக்கியத்தை மையமாகக் கொண்ட பிரசன்னம் என்று கூறினேன்.

லக்னாதிபதி சூரியன் ஐந்தாமதிபதி குருவுடன் இணைந்ததால் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், குலதெய்வ அருள் நிரம்பயவர்கள் என்றும் கூறப்பட்டது.

மேலே கூறப்பட்ட விதியின்படி ஐந்தில் நின்ற சனி, குரு, கேதுவும் குழந்தை பாக்கியத் தடைக்குக் காரணமென்று உணரமுடிந்தது.

ஏழாமதிபதி சனி ஐந்தில் நின்றதாலும், லக்னாதிபதி சூரியன் ஐந்தாமதிபதி குருவுடன் நெருக்கமாக இருந்ததாலும் தம்பதிகள் காதல் திருமணம் செய்வது கொண்டவர்கள் என்றும்; சோழி லக்னத்தில் 12-ஆமதிபதி சந்திரன் நின்றதாலும், 8-ல் மாந்தி நின்றதாலும் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. தம்பதிகள் குழந்தை யின்மையால் 15 வருடங்களாக தாளமுடியாத அவமானத்தை சந்திப்பதாகக் கூறினார்கள்.

இரண்டாமதிபதி புதன் நான்கில் நின்றதாலும், ஐந்தாமிடத்திற்கு குரு, கேது சம்பந்தம் (காலபுருஷ ஒன்பதாமிடம்) இருந்ததாலும் ஆசிரியர் தொழில் அல்லது கல்வி நிறுவனங்கள் நடத்தலாம் அல்லது நிலங்களை குத்தகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தலாம் என்பது தீர்மானிக்கப்பட்டது. சூரியன், சனி சம்பந்தமானது தந்தை, மகன் கருத்து வேறுபாடு உள்ளதையும் காட்டியது.

ஒரு பிரசன்னத்தைப் பொருத்தவரை, பிரச்சினைக்கான மூலகாரணத்தையும் கர்மாவையும் கண்டறிய அஷ்டமாதிபதி, பாதகாதிபதி, மாந்தி, ராகு- கேதுவின் நிலைப்பாடு மிக முக்கியம். அதன்படி இந்த பிரசன்னத்தில் அஷ்டமாதிபதி குரு; பாதகாதிபதி செவ்வாய். ஐந்தாம் அதிபதியாக- பூர்வபுண்ணிய ஸ்தானதிபதி குருவே அஷ்டமாதிபதியாக வருவதாலும், குருவும் கேதுவும் நெருக்கமாக இருப்பதாலும், இவருடைய முன்னோர் கள் வேற்று மதத்தினருடன் பாகுபடுடன் நடந்துகொண்டு, அவர்களின் கோபம், சாபத்தைப் பெற்றிருக்கலாம் என பலனுரைக்கப்பட்டது.

ஜாதகர், தாங்கள் பரம்பரையாக ஆசிரியர் தொழில் புரிந்து வருகிறோம் என்றார். மேலும் தங்கள் தாத்தாவும், தந்தையும் வேற்றுமதம் சார்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத் தைக் கண்டுகொள்வதில்லை. அவர்களிடம் பாகுபாடுடன் நடந்துகொள்வார்கள்.

அதனால் வேற்றுமதத்தினர் சாபம் உண்டு. தாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டதால் பெற்றோர்கள் சாபமிட்டு 15 வருடங்களாகப் பேசுவதில்லை என்று சொன்னார்.

ஒருவர் அறிந்தோ அரியாமலோ செய்யும் வினையின் எதிர்வினையால் கோபம், சாபம் என்னும் இரண்டுவிதமான தோஷங்கள் உருவாகின்றன.

கோபம் என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை, பலவீனத்தின் உச்சம். இதையே வேறுவிதமாகச் சொன்னால், கோபம் என்பது ஏமாந்தவர்- ஏமாற்றப்பட்டவர்மீது வெளிப்படுத்தும் உணர்வு.

சாபமென்பது கோபத்தின் உச்சகட்டம். சாபமென்பது அகங்காரத்தில் ஒருவர் செய்யும் தீமையினால், பாதிக்கப்பட்டவர் வேதனையுடன் கண்ணீருடன் சபிப்பது! இந்த தோஷம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து சந்ததியினரை பாதிக்கிறது. இந்த தோஷம் யாரால் ஏற்பட்டது- என்ன குற்றத் தால் ஏற்பட்டது என்பதையும் ஒருவரின் ஜாதகம், பிரசன்னம் கொண்டு அறியலாம்.

மேலே பார்த்த உதாரண ஜாதகத்தின்படி தந்தையும், தாத்தாவும் வேற்று மதத்தினருக்கு அறியாமையால் செய்த தவறால் ஏற்பட்ட கோபமும், காதல் திருமணம் செய்துகொண்ட வாரிசுகளுக்கு இட்ட சாபமும் தம்பதிகளுக்கு புத்திர தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஷ்டமாதிபதி குருவுக்கும் பாதகாதிபதி செவ்வாய்க்கும் நெருங்கிய சம்பந்தம் இல்லாததால், ஜாதகரின் கர்மாவை எளிதில் தீர்க்கமுடியுமென்னும் நம்பிக்கையைக் கொடுக்க முடிந்தது.

அத்துடன் வியாழக்கிழமை நவகிரகத்திலுள்ள குருவை வழிபாடு செய்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கு மஞ்சள் துணியும், தண்ணீருடன் அன்னதானமும் கொடுப்பது மற்றும் குலதெய்வத்திற்கு தங்கம் தானம் செய்வது; முன்னோர்களுக்குத் திதிகொடுத்து பித்ருதோஷ நிவர்த்தி செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்குமென்று கூறப்பட்டது.

மேலே கூறிய பரிகாரங்களைச் செய்த தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரிப்பால் இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளன. இறைவனை, இறையாற்றலை, இயற்கையை நம்பினால் வினைப்பயன் நீங்கும். வாழ வழி பிறக்கும். வாழ்க்கை இன்பமாகும். இன்பத்தைத் தேடிச் செல்லவேண்டியதில்லை. இன்பம் தேடிவரும். செல்: 98652 20406