ப் எம். சேஷையன், திருப்பூர்.

என் மகன் விஜயதேவனுக்கு 30 வயது. எப்போது திருமணம் நடைபெறும்? சில ஜோதிடர்கள் திருமணமே நடக்காது என்கிறார்களே, உண்மையா?

துலா லக்னம், மிதுன ராசி. லக்னத்துக்கு 2-ல் சனியும் சுக்கிரனும் இருந்தாலும், குரு 6-ல் ஆட்சிபெற்று சுக்கிரனையும் சனியையும் பார்க்கிறார். எனவே நிச்சயம் திருமணம் நடக்கும். பிதுர்காரகன் சூரியன் நீச ராசியில் இருப்பதால், (ஐப்பசியில் பிறந்தவர்) தகப்ப னார் இவருடைய திருமணத்தைப் பார்க்கும் பாக்கியம் இருக்காது. 9-க்குடைய செவ்வாய் 12-ல் மறைந்து கேது சம்பந்தம், ராகு பார்வை என்பதால் திருமணம் தாமதமாகும். 31 வயதில் திருமண முயற்சிகள் வெற்றிபெறும். 31 வயது ஆரம்பிக்கும்போது தஞ்சை- திருவையாறு பாதையில், கண்டியூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருவேதிக்குடி சென்று வேதபுரீஸ்வரர்- மங்கையர்க்கரசி இருவரையும் வழிபடவும்.

ப் ஆர். ஹரிகிருஷ்ணா, சேலம்-4.

Advertisment

பட்டப்படிப்பு முடித்தும் வேலை இல்லை. வருமானமில்லை. காவல்துறை அல்லது கலைத்துறையில் முயற்சிப்பது பலன் தருமா?

dd

கும்ப லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். 7-ல் குரு நின்று லக்னத்தைப் பார்க்கிறார். 10-ல் சுக்கிரன், புதன். 10-க்குடைய செவ்வாய், 11-ல் சூரியன், சந்திரனோடு சம்பந்தம். அரசு வேலைக்கு வாய்ப்புண்டு. கலைத்துறையில் சம்பாதிக்க ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

Advertisment

ப் பி. ராஜகோபால், வேலூர்-2.

எனக்கு கேது தசையில் ராகு புக்தி நடக்கிறது. இங்குள்ள ஜோதிடர் கேது கீழே விழவைப்பார் என்றார். அதேமாதிரி ஸ்கூட்டரில் போகும்போது ஒருவன் குறுக்கே வர- நானும் மனைவியும் கீழே விழுந்துவிட்டோம். நல்ல வேளை- பெரிய பாதிப்பில்லாமல் கைகால் அடிபட்டு 80 சதவிகிதம் சரியாகிவிட்டது. என் அம்மாவுக்கு 85 வயது. சர்க்கரை நோயாளி. காலில் புண் ஏற்பட்டு அதை ஆபரேஷன் செய்ய 40 ஆயிரம் செலவாகும் என்கிறார்கள். எனக் கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் இப்படி ஏதாவது வைத்தியச்செலவு வருகிறது. வீட்டில் வாஸ்துக் குற்றம் ஏதாவது இருக்குமா? அல்லது கிரகக் கோளாறா? இதற்கு என்ன பரிகாரம்?

மீன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். பொதுவாக ராகு- கேது, சனி சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடந்தாலே இப்படி ஏதாவது ஏடாகூடமாக நடக்கத் தான் செய்யும். 2021 பிப்ரவரி வரை கேது தசை. வாஸ்துக் குற்றம்போக வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம் செய்யலாம். அத்துடன் சூலினிதுர்க்கா ஹோமமும், திருஷ்டிதுர்க்கா ஹோமமும் செய்வது நல்லது. சேரன்மாநகர் மீனாட்சி சுந்தரர் கோவிலில் உள்ள அர்ச்சகர் சுகேஷை ஏற்பாடு செய்யலாம். வேறு யாரையாவது தெரிந்தவர் இருந்தாலும் ஏற்பாடு செய்யலாம்.

ப் சி. வேங்கடகிருஷ்ணன், விழுப்புரம்.

மணமக்கள் இருவரும் ஒரே நட்சத்திரம் என்றாலும், ஒரே ரஜ்ஜு என்றாலும் திருமணம் செய்யலாமா?

ஒரே ரஜ்ஜுவாக இருந்தால் கண்டிப் பாகத் திருமணம் செய்யக்கூடாது. ஒரே நட்சத்திரம் என்றால் சில விதிகள் உண்டு. ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், விசாகம், அஸ்தம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் ஒரே நட்சத்திரம் என்றால், திருமணம் செய்யலாம். மற்றவை செய்யக்கூடாது. மேலே உள்ள ஒன்பது நட்சத்திரங்களிலும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் என்றால் ஆணுக்கும் பெண்ணும் ராகு தசை நடந்தால் (சம ராகு) கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. பொருந்தாது. உயிர்ச்சேதம், பொருட் சேதம், பிரிவு, பிளவு உண்டாகும்.

ப் டி. சேகர், கும்பகோணம்.

தாங்கள் எழுதும் ராசிபலன் எங்களை நேரில் பார்த்து எழுதுவது போல் இருக்கிறது என்பதை நன்றி யோடும், மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று நான்கு முறை மனைவி கருத்தரித்து கருச்சிதைவு ஆகி விட்டது. அதனால் எங்களுக்குள் மகிழ்ச்சி போய்விட்டது. எங்களின் எதிர் காலத்தையும் வாரிசு யோகத்தையும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

உங்களுக்கு அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னம். 5-க்குடைய சனி 2-ல் ராகுவோடு சம்பந்தம். மனைவிக்கு அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னம். லக்னத்தில் ஏழு கிரகங்கள் சேர்க்கை. சந்திரனும் ராகுவும் தனித்தனி. கும்பச் சந்திரன்; கடக ராகு. திருமணத் தேதி 22 என்று 4-ல் அமைவது ஒரு குற்றம். அதனால் புத்திரத்தடை, தோஷம். எனவே இருவரும் காரைக்குடி அருகில் வேலங்குடி வந்து குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழில், வருமானம் பெருகவும், ஆரோக்கியம் ஏற்படவும் 18 விதமான ஹோமம் செய்து இருவரும் கலசஅபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். அதற்கான பண ஏற்பாடு செய்துகொண்டு தகவல் தெரிவித்தால் மற்ற விவரம் கூறுவேன்.

ப் எம். சாந்தி, கோவை.

என் மகன் தற்போது ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான். வெளிநாடு போவானா? மேற்படிப்பு படிப்பானா? அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?

பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். 2020 ஜூலை வரை சனி தசை. தற்சமயம் ஏழரைச்சனி ஆரம்பம். இக்காலம் வெளிநாடு போகலாம். புதன் தசையும் வரும். 29 வயது முடிந்தபிறகு திருமணம் பற்றி சிந்திக்கலாம். தேவைப்பட்டால் அக்காலம் பரிகார ஹோமம் செய்யவேண்டும்.

ப் ஆர். ஆர். கல்பனா, கரூர்.

என் மகனுக்கு 30-11-2015 அன்று திருமணம் நடந்தது. என் அண்ணன் மகளைக் கட்டிவைத்தோம். ஜோதிடர்கள் பொருத்தமில்லை என்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பியதால் வேறு வழியில்லாமல் கட்டிவைத்தோம். இப்பொழுது என் மருமகள் பித்துப் பிடித்தாற்போல இருக்கிறாள். டாக்டர்கள் மனஅழுத்தம் என்கிறார்கள். எப்பொழுதும் சோர்வாக இருக்கிறாள். திடீர் திடீரென்று அழுகி றாள். சரியாகிவிடுமா?

மகன் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னம். நடப்பு ராகு தசை, சனி புக்தி. மருமகள் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னம். நடப்பு புதன் தசை, சுக்கிர புக்தி! இருவருக்கும் பொருத்தம் இருக்கிறது. ஆனால் மருமகளுக்கு நாக தோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பதால் 27 வயதில் திருமணம் செய்திருக்க வேண்டும். சொந்தம் என்பதால் 22 வயதிலேயே திருமணம் செய்துவிட்டீர்கள். அதனால் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியில்லை. மேலும் திருமணத் தேதி கூட்டு எண் 4. அதுவும் மகிழ்ச்சியைக் கெடுக்கும் தேதி. எனவே அப்போது கட்டிய மாங்கல்யத்தை கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு, 1, 3, 6 வரும் தேதிகளில் மறுமாங்கல்யம் (புதுமாங்கல்யம்) கட்ட வேண்டும். அத்துடன் மகன் ஜாதகப்படி ராகு தசை நடப்ப தால் சூலினிதுர்க்கா ஹோமம், தன்வந்திரி ஹோமம், வாரிசு உருவாக சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், புத்திரப்ராப்தி கணபதி ஹோமம் உள்பட 18 விதமான ஹோமம் செய்து அவர்கள் இருவருக்கும் கலச அபிஷேகம் செய்ய வேண்டும். இது கிரகக் கோளாறே தவிர வேறு எந்தக் கோளாறுமல்ல.

ப் எஸ். ரமேஷ்பாபு, மதுரை.

எனக்கு திருமணமாகி பத்து வருடங் களாகியும் குழந்தையில்லை. எங்களுக்கு எப்போது குழந்தை உண்டாகும்?

உங்களுக்கு அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி. மனைவிக்கு திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. இருவருக்கும் ராசிப்பொருத்தமே இல்லையே! எப்படித் திருமணம் செய்துவைத்தார்கள்? திருமணத் தேதி கூட்டு எண் 1 என்பதால், தேதி 4 பாதிக்காது. ஒருமுறை கும்பகோணம்- குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று, தத்தாத்ரேயருக்கு ஒரு வியாழக்கிழமை அபிஷேக பூஜை செய்து வழிபடவும். அந்த மந்திரத்தை தினசரி ஜெபம் செய்யவும்.

ப் கே. சௌந்தர், திருப்பூர்.

என்னுடைய ஜாதகத்தில் முன்னோர் சாபதோஷம் எதுவும் உண்டா?

அங்கீகாரம் இல்லாத மனைவியாக- ஒரு விதவைப்பெண் என்னைத் தேடி வருவாள் என்று மூன்று ஜோதிடர்கள் சொன்னார்கள். எப்போது வருவாள்? என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என் தந்தை வீட்டை இடித்து புதிதாகக் கட்டமுடியுமா? உங்களுக்கு 62 வயது நடப்பு. மகனுக்கு 20 வயது. இந்த மகனுக்கு திருமணம் எப்போது என்று கேட்கும் தந்தைக்கு, அங்கீகாரம் இல்லாத மனைவி எப்போது வருவாள் என்று சபலமா? இது உங்களுக்குத் தேவைதானா? பாட்டி மஞ்சள் தேய்த்துக் குளித்தாளாம். பேரன் கேட்டதிற்கு பழைய நினைப்பு என்றாளாம். இதற்கெல்லாம் பதில் சொல்லுமளவு நானில்லை. உங்களுக்குப் பலன் சொன்ன ஜோதிடர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளவும். ஜோதிடம் கேட்பவர்களிடம் இதுபோல பலன் சொல்லி அவர்களின் ஆசையைத் தூண்டிவிடுவது தவறு.