ரு நல்ல செயலைத் தொடங்கும்போது முகூர்த்தம் என்னும் சுப லக்னத்தைப் பார்க்க திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் ஐந்து அங்கங்களைப் பார்க்க வேண்டும். சூரிய உதய காலத்திலிருந்து முகூர்த்தங்கள் பலவற்றை ஜோதிடரீதியாகக் கணித்து அதற்கேற்றபடி பணிகளைத் தொடங்குகிறோம். தினமும் சுப ஹோரை கணிக்கத் தெரியாதவர்கள், எடுத்த காரியங் களில் வெற்றி கிடைக்காதபோது, "நேரத்தைக் கணிக்காமல் தொடங்கி தவறு செய்துவிட் டோமே' என்று புலம்புகின்றனர். நேரத்தை அலட்சியப்படுத்தினால் முன்னேற்றம் தடைப்பட்டுவிடும். எனவே முகூர்த்தம் என்னும் நல்ல நேரங்களைப் பயன்படுத்தப் பழகுதல் வேண்டும்.

பிரம்ம முகூர்த்தம், நிர்ணய முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், பைரவ முகூர்த்தம், வாஸ்து முகூர்த்தம் போன்றவற்றை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் பலரும் மகாலட்சுமி வரும் முகூர்த்த காலத்தை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.

மகாலட்சுமி முகூர்த்தம்

தினமும் சூரிய உதயகாலம் மாறுபடுகிறது. அதற்கேற்றபடி பிரம்ம முகூர்த்த காலத்தைக் கணித்து கணபதி ஹோமம், வீடு கிரகப் பிரவேசம், நிலைவாசல் வைப்பது என்று சுப நிகழ்ச்சிகளைச் செய்கிறோம். அதிலிருந்து தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்தைப் பிரித்து ராகுகாலம், எமகண்டம், குளிகைக் காலம் என்று அறிகிறோம். மாலைவேளையில் மட்டுமே கணக்கிடப்படும் நேரம்தான் மகாலட்சுமி தேவிக்குரிய அதிர்ஷ்ட நேரம்.

Advertisment

இதற்கு கோதூளி லக்னம் என்னும் பெயரும் உண்டு. சூரிய அஸ்தமன காலத்திலிருந்து இருள் கவ்வும் நேரம் வரையுள்ள 24 நிமிடங் கள்- அதிக வெளிச்சமும் ஒளிப்பரவலும் இல்லாத நேரமே கோதூளி முகூர்த்தம் என பஞ்சாங்க விதிப்படி கணிக்கப்பட்டுள்ளது.

அமிர்தகடிகையும் சுபச்செயல் வெற்றியும்

27 நட்சத்திரங்களுக்கும் அமிர்தகடிகை நேரமென்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் ஒரு குறிப்பிட்ட நாழிகைக்குமேல் நான்கு நாழிகை அமிர்தம் இருக்கும். அதுவே அமிர்தகடிகை நேரமாகும்.

Advertisment

இந்த நேரத்தில், தொடர்புடைய நட்சத்திரக் காரர்கள் சுபகாரியங்கள், பூஜைகள், யோகம் தரும் வழிபாடுகள், திட்டமிடும் முறைகள் பற்றிப் பேசலாம். உதாரணமாக அஸ்த நட்சத்திரத்திற்கு காலை 7.00 மணிமுதல் 11.00 மணிவரை அமிர்த நேரமாக வருகிறது. திருவோணத்திற்கு இரவு 8.00 மணிமுதல் 12.00 மணி வரையிலும், ரோகிணிக்கு பகல் 2.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையிலும் அமிர்தகடிகை நேரமாகும். இதேபோல கோதூளி நேரத்தையும் முகூர்த்தமாகக் கணித்துக்கொண்டு, செல்வ யோகங்கள், சௌபாக்கியங்கள் குறித்த எந்திர- தந்திர வழிபாடுகளைச் செய்து பயனடையலாம்.

கோதூளி முகூர்த்த மகிமை

சூரிய உதயகாலம் வரும்போது அதிகாலை 5.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஆலயத்தில் தெய்வ சந்நிதானம் திறப்பர். இது உஷத்கால தரிசனம் எனப்படும். அப்போது கோ என்னும் பசுவுக்குப் பூஜைகள் நடத்தி, அதிலுள்ள தெய்வங்களையும் வணங்கி, முதன்முதலாக திரைவிலக்கி பசுவைக் காணச் செய்வர். இதற்கு விஸ்வரூப தரிசன சேவை என்று பெயர். இந்த காலகட்டத்தில் தேவர், முனிவர், மகரிஷிகள் சூட்சுமமாக மூலஸ்தான இறைவனை தரிசிக்க வருவதாக ஐதீகம். இந்த நேரத்தில் சூரிய பகவானின் மனைவி உஷா என்பவள் தன் கணவனை, "உலகத்திற்கு ஒளி வழங்க புறப்படுவீர்' என்று எழுப்பி அனுப்பிவைக்கிறாள். இதனால் அதிகாலை நேரத்திற்கு உஷத் காலம் என பெயர் வந்தது.

ப்ராத காலம் என்னும் காலை நேரத்திற்கு காலசந்தி என்றும், மாலையில் பகலும் இரவும் சேரும் நேரத்திற்கு சாயசந்தி என்றும் பெயர். ஆலயங்களில் இந்த இரண்டு வேளை களிலும் அக்னி தொடர்பான வேத மந்திரங்கள் ஓத வேண்டும். காலையில் "ப்ராத ரக்நி ஹோத்ரம் ஹூத்வா' என்றும், மாலையில், "ஸாயம் அக்னி ஹோத்ரம் ஹூத்வா' என்றும் வேத பண்டிதர்கள் வேதங்களை கண பாகங்களாகப் பிரித்து உபசார முறையில் செய்தல்வேண்டும். இந்த சாய அக்னி ஹோத்ரம் என்று குறிப் பிட்ட நேரம் மாலை 6.00 மணிமுதல் உத்தேச மாக இரவு 7.25 மணிக்குள் இருக்கும். வேத மந்திரங்களை இறைவனுக்கு சமர்ப்பிக்கும் நேரம் இதுவென்று கூறுவர். இதற்கும் கோதூளி முகூர்த்த நேரத்திற்கும் உள்ள தொடர்பு என்னவென்றால், காலையில் மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடப்பட்ட பசுக்கள், சூரியன் மறையத் தொடங்கும் நேரத்தை யறிந்து உடனே மேய்ச் சலை நிறுத்திவிட்டு அரை மணி நேரத்துக்குள் வீட்டைநோக்கி வேகமாகச் செல்லத் தொடங்கும். வழியில் யார் தடுத்தாலும், எதைக் கொடுத்தாலும் நிற்காது. இந்த குறிப்பிட்ட அரை மணி நேரமே (ஒரு நாழிகை- 24 நிமிடங்கள் மட்டும்) கோதூளி முகூர்த்த காலம் என்னும் மகிமை வாய்ந்த நேரமாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தை 12 ராசியினரும் சூரிய அஸ்த மன காலத்தை வைத்துக் கணக்கிட்டுப் பயன் படுத்திவந்தால், தெய்வசக்தி பெற்று யோகங்களை அடைந்து சிறக்கலாம்.

பிரதோஷ கால வேறுபாடு

தினமும் சூரிய அஸ்தமன நேரத்திற்கு ஒருமணி நேரம் முன்னும், அஸ்தமனத் திற்குப்பிறகு அரைமணி நேரமும் சேர்ந்ததே பிரதோஷ காலம் என்று சொல்லப்பட்டு, இதை சிவாலய வழிபாட்டுக்கும், நந்திதேவர் ஆராதனைக்கும், பெருமாள், நரசிம்மர் ஆராதனைக்கும் பயன்படுத்துவர். மொத்தம் மூன்று நாழிகை வரும் பிரதோஷ காலத்தில், 3ஷ்24= 72 நிமிடங்களுடன் 18 நிமிடங்கள் கூடுதலாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. கோதூளி முகூர்த்தத்தில் பூஜைகளோ சுபச் செயல்களோ பிள்ளையார் பூஜைசெய்து தொடங்கிவிட்டால், அதிலிருந்து அடுத்து வரும் 44 நிமிடங்களை சேர்த்து எடுத்துக் கொள்வதற்கு சாஸ்திரப் பூர்வமாக உரிமை யுண்டு.

சந்தியாகால தேவதை வருகை

ஒரு அடர்ந்த கானகத்தின் வழியாக விசுவாமித்திர முனிவர் சென்றுகொண்டி ருந்தபோது, பகல் பொழுது முடிந்து சூரியன் அஸ்தமனமாகிவிட, நடுக்காட்டில் ஆசனமிட்டு ஜெபத்தில் அமர்ந்தார். அப்போது அவர் மனதில் சந்தியா தேவதை தோன்றினாள்.

அவளிடம் இராமபிரானின் வெற்றியை நினைவூட்டி வழிபாடு செய்தார். இந்த சந்தியா தேவதை தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் பிரம்மதேவர்.

ragazz

இயற்கையின் எதிர் முரணான இருவேறு பருவங்கள் சந்திக்கும் காலங்கள்- இரவு- பகல் சந்திப்பது, யுகமும் யுகமும் சேர்வது, கல்பமும் கல்பமும் இணைவது போன்றவை சந்தியா காலமாகும். நீண்டகாலமாக பிரம்ம தேவர் தொடர்ந்து தவத்தில் ஈடுபட்டிருந்த தால், அவரது ஆக்ஞா சக்கரமாகிய நெற்றிக் கண் புருவ மத்தியில் ஒரு அழகிய தேவதை தோன்றினாள். அஸ்தமன காலத்தில் தோன்றிய அவளுக்கு ஸ்ரீ சந்தியா என்று பெயரிட்டு வணங்கினார். இரு பருவங்கள் சேரும் காலத்தில் வெளிப்பட்ட சந்தியா தேவி யின் நேரத்தில் செய்யப்படும் ஜெபங்கள் இரவு முழுவதும் வலிமையைத் தரவல்லவை.

ஸம்- அழகான- உயர்வான; தியா- தியானம்.

ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்து வைப்பதால் "நல்ல பிணைப்பு' என்றும் பொருள் சொல்வர். வேத காலத்திய மகரிஷிகளால், சந்யோபாசனை விழுமிய பயன்களைத் தரும் சக்தி படைத்ததென்று சான்றளிக்கப்பட்டுள்ளது. போர் நடை பெறும் காலங்களில்கூட, இரு நாட்டவரும் போரை நிறுத்திவிட்டு இரு வேளைகளில் சந்தியாவந்தனம் செய்ததை வியாச பாரதமும், கலிங்கத்துப்பரணி நூலும் சொல்கின்றன.

மாலை வேளையில் சூரியன் மறைவுக்கு ஆயத்தமாகும் மஞ்சள் வெயில் காலத்தில், சிவபெருமானின் பாதங்களில் அடைபட்டுக் கிடக்கும் அரக்கர்கள் (ஈசனே தன் ஆத்ம பூஜைக்குத் தயாராகும் அனுஷ்டான காலத்தில்) வெளிப்படுகிறார்கள். சந்தியா தேவியை வழிபடாமலும், பூஜைகளில் ஈடுபடாமலும் இருப்பவர்களை இந்த அரக்கர்கள் தம் மாயைகளால் கட்டுப்பட வைத்து, அஞ்ஞான இருளில் மூழ்க வைத்து, ஆத்மஞானத்தை பெற்று அறிவாளிகளாக முன்னேறவிடாமல் தடுக்கின்றனர் என்பது ஒருவகை உருவகக் கதை. பணிபுரியும் அலுவலகங்களில் மாலை 5.00 மணிக்கு வீடுதிரும்பச் சொல்வதும், பள்ளிக் குழந்தை களை மாலை 4.00 மணிக்கு இல்லம் திரும்பி அரைமணி நேரம் தெய்வ ஆராதனை செய்யும் படி கூறுவதும், அவர்கள் வாழ்வில் வெற்றி யடைய வேண்டுமென்னும் நோக்கிலேயே சொல்லப்பட்டது. சந்தியா தேவதை தோன்றும் காலமும் கோதூளி முகூர்த்தமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

திருமகள் சேரும் தொழுவம்

மன்னர்களின் திண்தோள்கள், பெண்களின் நெற்றி வகிடு, தானியக் கிடங்கு, பசுக்கள் கட்டிவைக்கப்படும் தொழுவம் ஆகிய இடங்களில் திருமகளாம் மகாலட்சுமி வாசம்செய்வதாக சதக நூல் தெளிவாகக் கூறுகிறது. அதன்படி மகாலட்சுமி வடிவான கோ என்னும் பசுக்கள் பகல் முழுவதும் புற்களை மேய்ந்துவிட்டு, திருப்தியாக மகிழ்வுடன் அவற்றின் இருப்பிடமான தொழுவத்தை நோக்கிச் செல்கின்றன. அந்த கோதூளி முகூர்த்த காலத்தில் மகாலட்சுமி தேவியையும் குபேரனையும் வேத மந்திரங்களால் வழிபட்டால் விரும்பிய பொருள், தனச் சேர்க்கை ஏற்படும். இந்த நேரம் உண்மையாகவே மகாலட்சுமி தேவி மகிழ்ச்சியோடு வீட்டையடைந்து தங்கும் நேரமென்று கூறலாம். இந்த சக்திவாய்ந்த பலன்தரும் நேரத்தில் தீபமேற்றுவதால் மகாலட்சுமி பணவரவை அதிகமாக்குவாள். அந்த நேரத்தில் புதிய பொருட்கள் வாங்கலாம். ஆடைகள் அணியலாம். திருமணத்திற்கு நிச்சய தாம்பூல நிகழ்ச்சியை இந்த காலத்தில் செய்வது கணவன்- மனைவியின் வாழ்க்கையை வளப்படுத்தும். கோதூளி முகூர்த்தம் குறைவிலா செல்வம் தரும்.

12 ராசியினருக்கும் கோதூளி கால வழிபாட்டு விவரங்களை இங்கு காணலாம். ராசி, கோதூளி நேரம், வழிபடவேண்டிய மலர் வகை, தொடங்கும் சுபநாள்- கிழமை, மகாலட்சுமி ஜெப மந்திரம் ஆகியவை வரிசைக்கிரமமாகத் தரப்பட்டுள்ளன.

மேஷம்: மாலை 5.35- 5.59; சம்பங்கி; திங்கள்; சித்தலட்சுமி மந்திரம்.

ரிஷபம்: 5.37-6.01; தாமரை; பௌர்ணமி; சௌபாக்கியதாயினி மந்திரம்.

மிதுனம்: 5.38 6.02; செவ்வரளி; வெள்ளி; மகாலட்சுமி மூலமந்திரம்.

கடகம்: 5.33-5.57; சாமந்தி; செவ்வாய்; ஜேஷ்டாலட்சுமி மந்திரம்.

சிம்மம்: 5.35- 5.59; பாரிஜாதம்; ஞாயிறு; லட்சுமி மந்திரம், சௌந்தர்ய லஹரி துதி- 61.

கன்னி: 5.41-6.05; ரோஜா; வெள்ளிக்கிழமை; சம்பத் மந்திரம், சௌந்தர்யலஹரி துதி- 23.

துலாம்: 5.56-6.20; செண்பகம்; திங்கள்; லக்ஷ்மி வர்ணனை மந்திரம், சௌந்தர்யலஹரி துதி- 45.

விருச்சிகம்: 5.58-6.22; மல்லிகை; புதன்கிழமை; ஐஸ்வர்ய லட்சுமி தியானம்.

தனுசு: 6.01-6.25; துளசி; வியாழன்; சௌபாக்கிய லட்சுமி தியானம்.

மகரம்: 6.01-6.24; வில்வம்; பௌர்ணமி; சௌபாக்கிய மந்திரம், சௌந்தர்யலஹரி துதி- 33.

கும்பம்: 6.02-6.26; ரோஜா; சனிக்கிழமை; கமலாத்மிகா மூல மந்திரம்.

மீனம்: 5.59-6.23; முல்லை; வியாழன்; லட்சுமிகடாட்ச மந்திரம், சௌந்தர்யலஹரி துதி- 71.

12 ராசியினரும் மேற்சொன்ன விதிப்படி பூஜை முடிந்ததும் ஸ்ரீசுக்தம், ருத்ர ஜபம், மகாலட்சுமி தமிழ்த்துதியைப் பாராயணம் செய்யலாம். காலம் தவறாமல் செய்தால் நாம் விரும்பிய வண்ணம் யோகங்கள் சித்திக்கும்.

செல்: 95511 84326