"மழைப்பேறும் மகப்பேறும் மகா தேவனுக்குக்கூட தெரியாது' என்று பழமொழி கூறுவார்கள். ஆனால் ஓரறிவு முதல், ஐந்தறிவு வரையுள்ள விலங்குகள், பறவை, பூச்சி இனங்களுக்குத் தெரியும் என்பார்கள். அவற்றின் நடவடிக்கை, செயல்கள்மூலம், மழைவரும் காலத்தை ஆதித்தமிழர்கள் அறிந்து செயல்பட்டு வாழ்ந்தார்கள். இன்றும் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் இதனை அறிந்து, அதற்குத் தக்கவாறு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை. தட்டான் தாழப் பறந்தால் மழை பெய்யும். அந்தி ஈசல் அடை மழை பெய்யும்.
எறும்பு முட்டையை எடுத்துக் கொண்டு மேட்டில் ஏறினாலும், தவளை கத்தினாலும், கொக்கு நீரைவிட்டு மேடு ஏறினாலும், மாடு மயங்கி வானம் பார்த்தாலும் மழை வரும்.
பசுமாடு மேய்ச்சலைவிட்டு கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடி னாலும், பசுக்கள் சூரியனையும் வானத்தையும் பார்த்தாலும், பசுக்கள் நிழலைவிட்டு நகர மறுத்தாலும் மழைவரும்.
பகலில் சேவல் கூவினாலும், வானத்தைப் பார்த்தாலும், கோழி பகலில் தரையில் படுத்து இறக்கையை விரித்து உலர்த்தினா லும் மழைவரும்.
மயில்கள் நடனமிட்டாலும், சிட்டுக் குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினா லும், ஈசல் பறந்தாலும், புற்றிலிருந்து ஈசல்கள் வெளியில் வந்தாலும், மண்மேலே கரையான் கூடினாலும் மழைவரும். அதே போல் ஏதோவொரு இடத்தில் பூகம்பம் ஏற்படும்.
கழுதை காதை உயர்த்தி நின்றால் மழைவரும்.
பாம்புகள் மரத் தில் ஏறி அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டால் மழை வரும்.
பூனைகள் நிலத்தைப் பிராண் டினால் மழைவரும். பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்றி, அங்கு மிங்கும் ஓடி அலைந் தால் மழைவரும்.
ஓணான்கள் வானத்தைப் பார்த் தாலும், பச்சோந்தி மரத்தின்மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் மழை வரும்.
நாய்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல மறுத்தாலும், வானத்தைப் பார்த் துக் குரைத்தா லும் மழைவரும். பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் மேய்ந்தாலும், மீன்கள் நீரில் துள்ளி விளையாடினாலும் மழைவரும். குழந்தைகள் மண்ணில் அணைகட்டி விளையாடினால் மழைவரும்.
மலைக்குகைகள் பனி மூட்டத்தால் சூழப்பட்டு மறைக்கப்பட்டிருந்தாலும், மலைகள் நீலநிறமாகக் காட்சியளித்தாலும் மழைவரும்.
வீட்டிலுள்ள நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்துப் போனால் மழைவரும்.
இரும்புப் பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழைவரும்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே காக்கைகள் மரத்தில் கூடுகட்ட ஆரம்பித்துவிடும். அந்தக் கூடுகளின் அமைப் பைக் கொண்டு அந்தந்த வருடம், அந்தந்தப் பகுதிகளில் பெய்யும் மழையளவை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.
காக்கை மரத்தின் உச்சியில் கூடுகட்டினால் அந்த வருடம், அந்தப்பகுதிகளில் அதிகமான மழைபெய்து நீர்ப்பிரவாகம் உண்டாகும். காக்கை மரத்தின் நடுப்பகுதியில் கூடுகட்டி யிருந்தால், அந்த ஊர்களில் சராசரியாக சாதாரண மழைபெய்யும். மழையால் பாதிப்பு இராது. மரத்தின் கீழ்ப்பகுதியில் கூடுகட்டியிருந்தால் அந்தப் பகுதிகளில் குறைவான மழைபெய்யும். நீர்பற்றாக்குறை உண்டாகும்.
மரத்தினருகே நிலத்திலோ, புதர்செடி களிலோ கூடுகட்டினால் அந்தப் பகுதிகளில் மழையின்றி வறட்சி ஏற்படும்.
காக்கை ஒரு மரத்தில் எந்த திசையில் கூடுகட்டியுள்ளதோ அதைக்கொண்டு அந்தப்பகுதியில் பெய்யும் மழையளவை முன்னரே அறிந்துகொள்ளலாம்.
காக்கை தன்கூட்டை மரத்தின் கிழக்கு திசையில் கட்டியிருந்தால் அந்த வருடம் அந்தப்பகுதியில் கனத்த மழைபெய்யும். மரத்தின் தென்கிழக்கு திசையில் கூடுகட்டி யிருந்தால் அந்த வருடம் அந்தப்பகுதியில் மழையில்லாமல் வறட்சி ஏற்படும்.
மரத்தின் தெற்கு திசையில், கூடுகட்டி யிருந்தால் அந்தப்பகுதியில் அதிகமான மழைபெய்து நீரினால் மக்களுக்கு பாதிப்புண்டாகும். மரத்தின் தென்மேற்கு திசையில் கூடுகட்டியிருந்தால் அந்த வருடம் அந்தப்பகுதியில், இரண்டுமாதங்கள் மட்டும் மழைபெய்யும். மரத்தின் மேற்குப்பகுதியில் கூடுகட்டியிருந்தால், குறைவான மழை பெய்யும்.
மரத்தின் வடமேற்கு திசையில் கூடுகட்டி யிருந்தால் அந்த வருடம் போதுமான அளவு மழைபெய்து, தானிய விளைச்சல் அதிகமாகும்; தானியம் விலை குறையும். வடக்கு திசையில் கூடுகட்டியிருந்தால் அந்தப் பகுதியில் காற்றுடன் போதுமான மழைபெய்யும். வடகிழக்குப் பகுதியில் கூடு கட்டியிருந்தால் குறைவாக மழை பெய்யும்.
காக்கைக் கூட்டில் ஒரு முட்டை மட்டும் இருந்தால் அந்தப் பகுதியில் அந்த வருடம் இடி, மின்னல், காற்றுடன் கூடிய மழைபெய்யும்.
இரண்டு முட்டை இருந்தால் அந்தப் பகுதியில் கனத்த மழைபெய்யும்.
மூன்று முட்டை இருந்தால் போதுமான அளவு மழைபெய்யும்.
நான்கு முட்டை இருந்தால் அந்த வருடத்தில் இரண்டுமுறை அந்தப் பகுதியில் நல்ல மழைபெய்யும்.
ஐந்து முட்டை இருந்தால் கனத்த மழைபெய்யும்.
தமிழ்நாட்டில் காற்று வீசும் திசையைக் கொண்டு மழையளவையும், பெய்யும் காலத்தையும் நான்கு முதல் பதினான்கு நாட்களுக்குமுன்பே தெரிந்துகொள்ளலாம்.
கிழக்கு திசையிலிருந்து காற்று வீசினால் வெகுவிரைவில் மழைபெய்யும். தென்கிழக்கு திசையிலிருந்து வீசினால் மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்யும். தெற்கு திசையிலிருந்து காற்று வீசினால் மிதமானமழை. தென்மேற்கு திசையிலிருந்து வீசினால் தூறல்மழை.
மேற்கு திசையிலிருந்து வீசினால் தாமத மழை. வடமேற்கு திசையிலிருந்து காற்று வீசினால் பலத்த காற்றுடன் மழைபெய்யும். வடக்கு திசையிலிருந்து காற்று வீசினால் குறைவான மழை. வடகிழக்கு திசையிலிருந்து வீசினால் அதிகமழை; நல்ல விளைச் சல் உண்டாகும்.
செல்: 99441 13267