Skip to main content

தேசிய விருதுபெற்ற படத்தில் இணைந்த யோகிபாபு!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

bfndfnd

 

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் 'அந்தாதுன்'. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். 'தி பியானோ டியூனர்' என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்டு மூன்று தேசிய விருதுகளை வென்ற 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பலத்த போட்டிக்கு மத்தியில் நடிகர் பிரஷாந்த் கைப்பற்றினார். 'அந்தகன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடிக்கிறார். இப்படத்தை நடிகர் பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தில் வில்லியாக தபு நடித்த வேடத்தில் சிம்ரன் நடித்துள்ளார். 

 

vdsbsfdbdx

 

நாயகியாக ராதிகா ஆப்தே வேடத்தில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு, ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் ஏற்கனவே நடிகர் கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரக்கனி, நடிகை பிரியா ஆனந்த், ஊர்வசி ஆகியோர் டப்பிங் பேசி முடித்திருந்த நிலையில், தற்போது நடிகர் யோகிபாபு டப்பிங் பேசிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
yogi babu new movie update

இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகிபாபு நடிப்பில் ஒரு படம் உருவாகும் வருகிறது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், யோகி பாபு நாயகனாக நடிக்க லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஆர் ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. 

இப்படம் குறித்து யோகி பாபு கூறுகையில், “சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாகும். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்" என்றார். 

Next Story

விஷாலுக்கு யோகிபாபு பரிசு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

yogi babu gifted murugal idol to vishal

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் 25 நாளை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. வினோத் குமார் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் கடந்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த படத்தின் இந்தி பதிப்பை வெளியிடுவதற்கு தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக ஒரு பரபரப்பு புகாரை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் சிபிஐ தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது. 

 

இந்த படத்தை அடுத்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. 

 

அப்போது எம்.குமாரசக்கனாபுரம் ஊராட்சி மக்கள் விஷாலை சந்தித்து, குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக சொன்னார்கள். உடனே விஷால், பொதுமக்கள் முழுமையாகப் பயன்பெறும் வகையில் 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். 

 

இந்த நிலையில் யோகிபாபு தனக்கு முருகன் சிலை ஒன்றை பரிசளித்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பின் போது யோகிபாபு தனக்கு அளித்துள்ளதாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கடவுளே பரிசைக் கொடுத்து அனுப்பியது போல் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.