Skip to main content

நீ சண்டையை விடவே மாட்டியா? என அவர் கேட்பார்" - விஷால் 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022
fdgdsbg

 

எது தேவையோ அதுவே தர்மம் குறும்படம் மூலம் பிரபலமான அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜனவரி 26 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் பேசும்போது...

 

"கரோனாவின் இக்கட்டான சூழலில் இந்த விழா நடத்துவது குறித்து தயக்கம் இருந்தது. து.ப.சரவணனின் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும் படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை கூப்பிட்டு பாராட்டினேன். அவரிடம், நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்றேன். அப்படி உருவானது தான் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை குடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

 

புது இயக்குனரிடம் நல்ல கதையை கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன். இப் படத்திருக்கும் அதேபோல் யுவன் தான் மியூசிக். நாயகி டிம்பிளை ஒரு விழாவில் எடுத்த ஸ்டில்லை பார்த்து ஒப்பந்தம் செய்தோம். அவரை இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். தமிழில் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதில் சந்தேகமில்லை. நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள் தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் குடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெரும்.

 

ரவீனாவை என்னைப்போல் யாரும் படப்பிடிப்பில் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள். திறமையாக நடித்திருந்தார். மாரிமுத்து எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் அழ வைத்து விடுவார். மாரிமுத்து என்னிடம், நீ சண்டையை விடவே மாட்டியா? என்பார். அதை எதிரி தான் முடிவு செய்யணும் என்று கூறுவேன். இது தான் படத்தின் கரு. வாசுகி என்னுடைய நெருங்கிய தோழி. என் பெற்றோர், மேலாளரை விட நான் படப்பிடிப்பிற்கு சென்றேனா இல்லையா என்று வாசுகி தான் முதலில் விசாரிப்பார். என்னைப் பொறுத்தவரை கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை. கோவில். என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னுடைய நண்பர்கள் என்று தான் கூறுவேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய்யின் விருப்ப வார்த்தை; நன்றியை வெளிப்படுத்திய விஷால்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
vishal thanked vijay for his helping 1 crore to nadigar sangam

தென்னிந்திய நடிகர் சங்க புது கட்டடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முழுவதுமாக கட்டி முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நடிகர் சங்கம். அந்த வகையில், வங்கியில் ரூ. 40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை கடந்த மாதம் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். 

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வங்கிக் கணக்கு மூலம் நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்திருந்த நிலையில் சங்க பொதுச் செயலாளரும் நடிகருமான விஷால் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி என சொன்னால் அது இரண்டு வார்த்தைகளில் அடங்கிவிடும். ஆனால் இதயத்திலிருந்து ஒரு உதவியை செய்யும் நபருக்கு அது போதாது. அவரது உதவி நிறைய அர்த்தத்தை குறிக்கிறது.

நடிகர் சங்க புதிய கட்டட மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி கொடுத்த, எனக்கு பிடித்த நடிகர் விஜய்யை பற்றி பேசுகிறேன். உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்போது பணிகளை விரைந்து முடிக்க நீங்கள் எங்களுக்கு வலிமை அளித்துள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் விஜய் எப்போதும் தனது ரசிகர்களை அழைக்கும் வார்த்தையான நண்பா என்ற வார்த்தையை குறிப்பிட்டு, “நன்றி நண்பா” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“அப்படியெல்லாம் கிடையாது” - மும்மத வழிபாடு குறித்து விஷால் விளக்கம்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Vishal's explanation of Trinitarian worship

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து தனது 34ஆவது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியிலும் நடந்தது. தூத்துக்குடியில், குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக அப்பகுதி மக்கள் சொன்ன பிறகு, உடனே 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார் விஷால். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். 

பின்பு அடுத்தகட்ட படப்பிடிப்புகள் திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இதனிடையே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில் படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்தாண்டு கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்ததாக கடந்த ஜனவரியில் விஷால் தெரிவித்திருந்தார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’ பாடல் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் வெளியிடப்பட்ட நிலையில் விஷால், ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அப்போது மாணவர் ஒருவர், ஈ.பி.எஸ்ஸா இல்லை ஓ.பி.எஸ்ஸா என கேள்வி கேட்டதையடுத்து ஐ.பி.எஸ் என பதிலளித்தார் விஷால். மேலும், “நான் வணங்குற அந்த ஐ.பி.எஸ்-க்கு...” என சொல்லி சல்யூட் அடித்தார். பின்பு, “என் நண்பன் பேரும் ஐபி செந்தில்குமார். அவரது மனைவி மெர்சி எனக்கு தங்கை மாதிரி. அதனால் ஐ.பி.எஸ்” என்றார். 

இதையடுத்து விஷால் சாப்பிடுவதற்கு முன், மும்மத வழிபாடுகள் செய்வது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பான கேள்வியை மாணவர்களில் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த விஷால், கழுத்தில் அணிந்திருக்கும் ஏசு மாலை மற்றும் கயில் கட்டியிருந்த கயிரை காண்பித்து “இவர் ஜீசஸ் இவரும் சாமி தான். எல்லாம் சாமிதான். பத்து வருஷமா பண்ணிகிட்டு இருக்கேன். யார் சோறு போட்டாலுமே. எல்லா கடவுளும் ஒன்னு தான். அல்லாவும் ஒன்னு தான். சாய் பாபாவும் ஒன்னு தான். ஜீசசும் ஒன்னு தான். அது விளம்பரத்துக்காக பண்ணுறேன், அரசியல் வரப்போகிறேன் அதுக்காக பன்ணுறேன்... அப்படியெல்லாம் கிடையாது. எல்லா சாமியும் ஒரு சாமி தான். அந்த விஷயம் எனக்கு தப்பா எதுவும் தோணல” என்றார்.