Skip to main content

மீண்டும் தொடங்கிய விக்ரமின் 'கோப்ரா' ! 

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
vikram

 

 

'கடாரம் கொண்டான்' படத்தைத் தொடர்ந்து நடிகர்ம் விக்ரம் நடித்து வந்த படம் 'கோப்ரா'. 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

 

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கரோனா தொற்று பரவல் தீவிரமானது. இதனைத்தொடர்ந்து, படப்பிடிப்பை பாதியில் முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியது கோப்ரா படக்குழு.

 

இந்தநிலையில், பாதியில் நின்ற 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு, இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து, படத்தின் ஷூட்டிங் ஸ்டில்லையும் பகிர்ந்துள்ளார். மேலும், தற்போது படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதாகவும், விரைவில் படக்குழு, மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க ரஷ்யா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இமைக்கா நொடிகள் டீமில் இணையும் விக்ரம் 

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
vikram

 

 

 

நடிகர் விக்ரம் தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்து வருகிறார். 'தூங்காவனம்' பட இயக்குனர் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விக்ரம் மலையாளத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'மகாவீர் கர்ணா' படத்தில் அடுத்தாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிலையில் நடிகர் விக்ரம் இப்படத்தை தொடர்ந்து டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆக்‌‌ஷன் திரில்லர் படமாக உருவாகும் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.