Skip to main content

மிஷ்கினுடன் இணையும் விஜய்சேதுபதி!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Vijay Sethupathi joins Mishkin

 

2014 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக திரையில் ஓடிய படம் ‘பிசாசு’. இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது முருகானந்தம் தயாரிப்பில் மிஷ்கின், பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். 

 

இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கான சில காட்சிகளை திண்டுக்கல்லிலும், ஏலகிரியிலும் படப்பிடிப்பு செய்யப் படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்தப் படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றது. அதற்காக நடிகர் விஜய் சேதுபதி திண்டுக்கல் சென்றுள்ளார். இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” - விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் வைரல்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Soodhu Kavvum 2 First Look and Teaser released

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயரித்துள்ளனர். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. 

Soodhu Kavvum 2 First Look and Teaser released

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், அஷோக் செல்வன், உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்கள். இப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரனை தவிர்த்து ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

டீசரில் முதல் பாகத்தை போலவே கடத்தல், காமெடி, ஆக்‌ஷன் போன்ற அம்சங்கள் இதிலும் தொடர்கிறது. குறிப்பாக மிர்ச்சி சிவா பேசும், “பொண்ணுங்களோட கற்பனையில தான் நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” என்ற வசனம் தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

சாம் ஹாப்பி அண்ணாச்சி; மகிழ்ச்சியில் திளைக்கும் பிரித்விராஜன்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
 prithviactor tweet - blue star

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

இப்படத்தில் நடித்த இயக்குநர், நடிகர் பாண்டியராஜனின் மகனும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனுமான பிரித்விராஜனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடையே பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.  இந்நிலையில் தன்னுடைய படத்தை நடிகர் விஜய் சேதுபதி பார்த்து, பாரட்டியதை நெகிழ்ச்சியோடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது “இந்த தம்பிக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் சேர்ந்து “ப்ளூ ஸ்டார்” பார்த்ததற்கு நன்றி அண்ணா. படம் உங்களுக்கு பிடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் வீடு வந்து என்னையும், எங்களுடைய படக்குழுவையும் பாராட்டியதற்கு நன்றி. “சாம் ஹாப்பி அண்ணாச்சி!!” என்றிருக்கிறார். இதில் சாம் என்பது ப்ளூஸ்டார் படத்தில் வரும் கதாபாத்திரம்; அத்தோடு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்பது விஜய்சேதுபதி பேசி பின்னர் பிரபலமான வசனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.